Pages

15 December 2013

முதலமைச்சர் பதவியை குறிவைக்கிறார் ஹிருணிகா!

 சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர், பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மகள், ஹிருணிகா ஆளும்கட்சி சார்பில் மேல் மாகாணசபைத் தேர்தலில், போட்டியிடத் தீர்மானித்துள்ளார். கென்யா சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் ஹிருணிகாவும் அவரது தாயாரும் இதுதொடர்பாக ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர். மேல் மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட ஹிருணிகா திட்டமிட்டுள்ளார்.
   
எதிர்வரும் ஜனவரி மாதம் 6ம் திகதி ஹிருணிகாவின் தந்தையான பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. வழக்கு விசாரணைகளின் பின்னர் ஹிருணிகா தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
 

No comments:

Post a Comment