Pages

26 March 2014

தற்போதைய ஈழத்தமிழரின் நிலை குறித்து தமிழக மாணவர்கள்,

தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ள வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழக அரசியல் தலைவர்கள், மாணவர் பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள்  உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது.
உலகத்தமிழர் பேரவை தலைவர் பழ நெடுமாறன் , நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் , தமிழ்நாடு மாணவ பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள்  உள்ளிட்டோரை நேற்றையதினம் சந்தித்த  ரவிகரன் ஈழத்தமிழரின் தற்போதைய சூழ்நிலை குறித்து விரிவாக கலந்துரையாடியதாக தெரியவருகிறது.
நேற்றைய சந்திப்புக்கள் இருதரப்பிலும் பயனுள்ள வகையில் அமைந்த நிலையில் இன்றும், நாளையும் ரவிகரனின் சந்திப்புக்கள் மேலும் பலருடன் தொடர்வதாக  அறியமுடிகிறது.

No comments:

Post a Comment