Pages

08 June 2014

மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினர்!


இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற்ற விசைப்படகு மீனவர்களின் அவசர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
5 ஆயிரம் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல மாட்டார்கள் என்றும், வரும் 11ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment