Pages

30 November 2014

குஷ்பு கருத்து”தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளே”!

இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவருடன் அண்மையில் காங்கிரஸில் இணைந்த குஷ்பு, முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது பேசிய இளங்கோவன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான நிதியைக் குறைத்தது, தமிழக அரசு கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவது ஆகியவற்றிற்கு கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து வெள்ளிக்கிழமை வாசன் புதுகட்சி குறித்து நடத்திய பொதுக்கூட்டம் குறித்து கருத்து தெரிவித்தார். இந்நிலையில், செய்தியாளர் ஒருவர், குஷ்புவிடம், காங்கிரஸில் சேர்ந்தது குறித்து கருத்துக்களை கேட்டுள்ளனர்.
தான் காங்கிரசில் சேர்ந்தது குறித்து சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட குஷ்பு, ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் காங்கிரஸ் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாகக் கூறினார். வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் துவங்கி பல திட்டங்களை ஈழத் தமிழர்களுக்காக காங்கிரஸ் செய்து வருவதாகவும், காங்கிரஸ் கட்சி உண்மையில் தீவிரவாதத்திற்கு மட்டுமே எதிரான கட்சி என்று குஷ்பு தெரிவித்தார். இதனை அடுத்து செய்தியாளர் ஒருவர், அப்படியானால் எல்டிடிஇ இயக்கம் பயங்கரவாத இயக்கமா எனக் கேட்டுள்ளார். அதற்குப் குஷ்பு, “நிச்சயமாக. அப்பாவிகளின் உயிரை எடுப்பவர்கள் பயங்கரவாதிகளே” என்று பதிலளித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வருமான வரிசோதனை ரூ.100 வைரம்-2 கிலோ தங்கம்- ரூ.12 கோடி பறிமுதல்

  உத்தரபிரதேசத்தில் மாயாவதி முதல் – மந்திரியாக இருந்த போது, உள்கட்டமைப்பு பணிகளுக்கான தலைமை என்ஜினீயராக இருந்தவர் யாதவ்சிங்.
நொய்டா, கிரேட்டர் நொய்டா, யமுனா எக்ஸ் பிரஸ் வழி மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றுக்கு இவர் என்ஜினீயராக இருந் துள்ளார்.

நொய்டா, யமுனா எக்ஸ் பிரஸ் திட்டங்களில் ரூ. 954 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக கண்டுபிடிக் கப்பட்டது. அதில் யாதவ் சிங் பெயரும் இடம் பெற்றுள் ளது.
2012-ம் ஆண்டு உத்தரபிர தேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து யாதவ் சிங் நீக்கப்பட்டார். அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.
.
இந்த நிலையில் நொய் டாவில் செக்டார் 51-ல் இருக்கும் யாதவ்சிங் வீட்டிலும், அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள் மற்றும் அவர் போலி, பெயரில் பல்வேறு வங்கிகளில் உள்ள லாக்கர்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது என்ஜினீயர் யாதவ் சிங்கின் காரை அதிகாரிகள் சோதனை நடத்தினர் அப்போது அவரது படுக்கையறையில் பதுக்கி வைத்து இருந்த  ரூ.100 கோடி மதிப்புள்ள  வைரங்களை  கைப்பற்றினர்.  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

29 November 2014

நடந்து சென்ற 10 வயது சிறுவன் வெடிகுண்டு வெடித்து பலி

  மணிப்பூர் மாநிலத்தின் தவுபால் மாவட்டத்தின் உட்பகுதியில் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் 10 வயது சிறுவன் பலியானான்.  தனது தாயுடன் ஒன்றாக சென்றிருந்த அச்சிறுவன் சாலையோரம் நின்று கொண்டு இருந்தான்.

அவனது தாய் கால்நடைகளுக்கு தேவையான புற்களை சேகரித்து கொண்டிருந்தார்.  இந்நிலையில், திடீரென வெடிகுண்டு வெடித்து சம்பவ இடத்திலேயே சிறுவன் பலியானான்.  வெடிகுண்டு சத்தம் கேட்டதை அடுத்து அந்த இடத்திற்கு சென்று சிறுவனின் தாயார் பார்த்துள்ளார்.

அசாம் துப்பாக்கி படை பிரிவை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி சென்று வரும் இந்த பகுதியில் தீவிரவாதிகள் அவர்களை தாக்கும் நோக்கத்துடன் வெடிகுண்டுகளை புதைத்து வைத்துள்ளனர்.  இந்த சம்பவத்திற்கு எந்தவொரு நபரும் அல்லது அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

விவகாரத்தில் மனைவியின் மூக்கை அறுத்த கணவர்

ராஜஸ்தானின் கோட்டா நகரில் சொத்து விவகாரம் தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில் மனைவியின் மூக்கை அவரது கணவர் கோடாரியால் வெட்டியுள்ளார்.  நந்து சிங் (வயது 40) என்பவரது மனைவி ஷிம்லா கன்வா.

இந்த தம்பதியர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  எனினும் சொத்து விவகாரம் ஒன்றை தீர்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் ஷிம்லா கன்வா தனது கணவரை சந்திப்பதற்காக

சென்றுள்ளார்.  அங்கு தனது சகோதரருடன் சேர்ந்து கொண்டு நந்து சிங் கோடாரியால் அவரது மூக்கை அறுத்துள்ளார்.  அவரது கையின் நான்கு விரல்களும் இத்தாக்குதலில் வெட்டப்பட்டுள்ளன.  காயமடைந்த கன்வாவை அறை ஒன்றில் வைத்து இருவரும் பூட்டியுள்ளனர்.

தகவல் அறிந்த போலீசார் அவரை மீட்டு மஹாராவ் பீம் சிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.  இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் நந்து சிங் மற்றும் அவரது சகோதரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

28 November 2014

சாமியாரை பிடிக்க ஆப்ரேஷனுக்கு ரூ. 26 கோடி செலவு

சர்ச்சை சாமியார் ராம்பாலை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு ரூ. 26 கோடிக்கு மேலாக செலவு செய்யப்பட்டுள்ளது என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியானா மாநில சர்ச்சை சாமியார் ராம்பால் (வயது 63) 2006-ம் ஆண்டு கொலை வழக்கில் சிக்கினார். அதில் ஜாமீனில் வந்த நிலையில், அவர் மீது பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று தாக்கலானது. அதில் அவர் ஆஜர் ஆகாத நிலையில் பிடிவாரண்டு பிறப்பித்து, 21-ந் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என அரியானா போலீசுக்கு ஐகோர்ட்டு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து ஆசிரமத்தை சுற்றி வளைத்து சாமியாரை கைது செய்வதற்கு போலீஸ் படை அங்கு விரைந்தது. போலீசார் மீது ஆசிரமத்திற்குள் இருந்து சாமியார் ஆதரவாளர்கள், அவரது ஆர்.எஸ்.எஸ்.எஸ். படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், பெட்ரோல் குண்டுகளை வீசினர். சரமாரியாக கற்களும் வீசப்பட்டன. இதற்கிடையே ஆசிரமத்தில் அடைபட்டிருந்த நிலையில், 5 பெண்கள், ஒரு குழந்தை என 6 பேர் உயிரிழந்திருப்பது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு வழியாக, சாமியார் ராம்பாலை துணை ராணுவத்தின் துணையுடன் போலீசார் கடந்த 19ம் தேதி கைது செய்தனர். இதனையடுத்து கடந்த 20ம் தேதி போலீஸ் காவலுக்கு அனுப்பட்ட சாமியார் ராம்பால் பலத்த பாதுகாப்புடன் இன்று பஞ்சாப் – அரியானா ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். ஏற்கனவே சாமியாரை கைது செய்ய நடத்தப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட்டு கேட்டுக் கொண்டிருந்தது. அதன்படி ஹிசார் ஆசிரமத்தில் சாமியாரை கைது செய்ய நடத்தப்பட்ட ஆப்ரேஷன் தொடர்பான விரிவான அறிக்கையை அரியானா டி.ஜி.பி. எஸ்.என். வசிஷ்த் தாக்கல் செய்துள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகள் சாமியாரை கைது செய்ய ரூ. 26 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுகள் அளித்த தகவலின்படி, அரியானா மாநில அரசு ரூ. 15.43 கோடி, பஞ்சாப் மாநில அரசு ரூ. 4.34 கோடி, சண்டிகார் நிர்வாகம் ரூ. 3.29 கோடி, மத்திய அரசு ரூ. 3.55 கோடி என மொத்தம் 26.61 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு ஆன செலவு குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் கோர்ட்டு, காவல்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளது. சாமியார் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக கைது செய்யப்பட்ட 909 பேர் குறித்து விசாரிக்கவும், கைது செய்யப்பட்டவர்கள், காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்றவர்களா இல்லை, முன்னாள் படைவீரரா என்பது குறித்து தெரிந்துக் கொள்ளவும் காவல்துறையிடம் கோர்ட்டு கேட்டுக் கொண்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

இளவரசியின் மருமகன்: யலலிதாவின் பதவிக்கு வருகிறார்!!

சூடுபிடிக்கும் ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறவிருக்கும் எம்எல்ஏ இடைத்தேர்தலில் இளவரசியின் மருமகன் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொகுதியின் எம்.எல்.ஏ உயிரிழந்தாலோ அல்லது பதவியை ராஜினாமா செய்தாலோ அப்பகுதியில் இடைத்தேர்தல் வரும்.

அந்த வகையில், தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்கு போனதையடுத்து முதல்வர் பதவியையும், ஸ்ரீரங்கத்தின் எம்எல்ஏ பதவியையும் இழந்தார்.

இதனால், ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் ஆரம்பமாகவிருக்கிறது. இத்தொகுதியில், அதிகமாக உள்ள முத்தரையர் அல்லது முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர் ஒருவருக்குத்தான் சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

எனவே எந்த சிக்கலும் இல்லாத வேட்பாளராக இருக்க வேண்டும் என்று அதிமுக தலைமை உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், அதிமுக சார்பில் இங்கே போட்டியிடப்போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுடன் கூட்டாக சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட உடன் பிறவா சகோதரிகளான ஜெயலலிதா, சசிகலாவுடன் ஜெயிலுக்குப் போன இளவரசியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தான் அதிமுக வேட்பாளர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளவரசியின் இரண்டாவது மருமகன் ராஜராஜன் தான் அந்த வேட்பாளர் என அதிமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

27 November 2014

மண்ணில் உயிருடன் புதைந்த 3 பேர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 பேர் உயிருடன் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் பாகூர் மாவட்டத்தின் லித்திபாரா கிராமத்தை சேர்ந்த 3 தொழிலாளர்கள் பூமியில் குழி தோண்டி கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்து சிக்கி 3 தொழிலாளர்கள் உயிருடன் புதைந்து விட்டனர்.

மண் சரிந்த பகுதியில் இருந்து 3 பேரது உடல்களும் வெளியே எடுக்கப்பட்டு விட்டன என்று பொலிஸ் அதிகாரி கவுஷல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வீணா மாலிக் உள்ளிட்ட 4 பேருக்கு 26 ஆண்டுகள் சிறை!

பிரபல நடிகை வீணா மாலிக், அவரின் கணவர் உள்ளிட்ட 4 பேருக்கு, பாகிஸ்தான் நாட்டு தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றம் 26 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபாரதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டு நடிகை வீணா மாலிக் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பத்திரிக்கை ஒன்றில் நிர்வாண போஸ் கொடுத்த விவகாரத்தில் பெரிய

சர்ச்சையில் சிக்கியவர். கடந்த ஆண்டு மே மாதம் இவருக்கும், பஷீருக்கும் திருமணம் நடந்தது. அப்போது ஒரு பாடலுக்கு நடன நிகழ்ச்சி நடந்தது. அந்த நடன காட்சிகள் மதத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாகவும், மதத்தைக் கேலி செய்வது போன்றும் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது

பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிகழ்ச்சி பாகிஸ்தானின் பிரபலமான ஜியோ டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. அது மதவாதிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து

தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் மத அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. விசாரணை முடிவில் நடிகை வீணாமாலிக், அவரின் கணவர் பஷீர், ஜியோ டி.வி.யின் உரிமையாளர் மிர்ஷகில் உர் ரஹ்மான் மற்றும் டி.வி. நிகழ்ச்சித்

 தொகுப்பாளர் ஷகிஸ்த பிவாகித் ஆகிய 4 பேர் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், மத அவமதிப்பு செய்ததாக நடிகை வீணா மாலிக், அவரின் கணவர் பஷீர், ஜியோ டி.வி. உரிமையாளர் மிர் ஷகில் உர் ரஹ்மான், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஷசிஸ்தா வாசித் ஆகியோருக்கு தலா 26 ஆண்டு சிறைத் தண்டனை

விதிக்கப்பட்டது. மேலும் தலா ரூ. 13 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கு நடைபெற்ற காலத்தில் இவர்களுக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்து இருந்தனர். எனவே இவர்கள் அனைவரும் வெளிநாட்டுக்கு தப்பினர். ஜியோ டி.வி. உரிமையாளர் ரஹ்மான் இங்கிலாந்திலும் மற்ற 3 பேரும் பிற நாடுகளிலும் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புல்லட் ரயில்:டில்லி-சென்னைக்கு பணிகள் தீவிரம்

பீஜிங்:டில்லி-சென்னை இடையேயான புல்லட் ரயில் திட்ட பணிகளுக்காக இந்திய உயர்மட்டக்குழு சீனா சென்றிருக்கிறது.கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வந்திருந்த சீன அதிபர் ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி,டில்லி-சென்னை இடையே புல்லட் ரெயில் இயக்குவது குறித்த திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.

இந்நிலையில், டில்லி-சென்னை இடையே புல்லட் ரயில் திட்டம் இயக்குவது திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான, திட்ட செயலாக்கம் குறித்த இலவச பயிற்சிக்கு சீனா ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தப்படி இந்திய

ரெயில்வே அதிகாரிகள் 100 பேருக்கு பயிற்சி, தற்போதைய ரெயில் நிலையங்களை மறுமுன்னேற்றம் செய்தல், ரெயில்வே பல்கலைக்கழகம் நிறுவுதல் போன்றவற்றுக்கு சீனா உதவி செய்கிறது.இந்த பயிற்சிக்கான

திட்டங்களை வகுப்பதற்காக இந்திய ரெயில்வேயின் உயர்மட்ட அதிகாரிகள் சதீஷ் அக்னிகோத்ரி தலைமையில் சீனா சென்றுள்ளனர். அவர்கள் சீனாவின் அதிவேக ரயில் நிறுவன அதிகாரிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த திட்டத்துக்கான செயலாக்க பயிற்சியை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சீனா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு சுமார் ரூ.1 லட்சத்து 956 ஆயிரம் கோடி செலவாகும் என அந்நாட்டு பத்திரிகை தெரிவித்திருந்தது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

26 November 2014

திருப்பதி திருமலையை நவீன நகரமாக்க தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் திருமலை நகரை ஆன்மிக நகரமாகவும் டவுன்ஷிப் நகரமாகவும் மாற்ற தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி திருமலையை சுற்றி 12 கிலோ மீட்டர் பரப்பளவில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கவும், அதன் அருகிலேயே சாலை அமைக்கப்பட்டு தொடர்ந்து அந்த சாலைகளில் ரோந்து செல்லும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மலையில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தேவஸ்தானத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் தீ பரவாமல் தடுக்கவும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தேவஸ்தான அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். திருப்பதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் திருமலை நகர் உள்ளது. இதில் கோயில் தெப்பகுளம், அன்னபிரசாத கூடம், தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டா, பக்தர்கள் ஓய்வறைகள், உள்ளூர் பொதுமக்கள் தங்கும் பாலாஜி நகர் மற்றும் சாலைகள் நகர்ப்புறமாக உள்ளது.இங்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வாகனங்கள் வந்து செல்கின்றன. வருங்காலத்தில் வாகனத்தின் எண்ணிக்கையும், பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால், 50 ஆண்டுகளுக்கு பிறகு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பாதுகாப்பு வளையும் அமைக்கப்பட்டுள்ளது.இதற்காக திருமலையில் இருந்து திருப்பதி செல்லும் மலைபாதையில் உள்ள 57வது வளைவில் இருந்து பாலாஜி நகர் வழியாக ஜிஎன்சி சோதனை சாவடி வரை வெளிப்புற பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்க தேவஸ்தான பொறியாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில்

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயிலை ஓட்டிப் பார்த்துப் பரிசோதித்துள்ளனர். இந்த ரயிலை ஓட்டியவர் பெண் என்ஜின் டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மார்க்கத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தி்ல மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ளது. தண்டவாளம் அமைப்பு, சிக்னல்கள், மின்சார இணைப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படைப் பணிகளும் முடிந்து விட்டன. கோயம்பேடு, சி.எம். பி.டி, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல் மற்றும் ஆலந்தூர் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் உள்ளது. இங்கு டிக்கெட் கவுண்டர் உள்ளிட்ட அமைப்பது உள்ளிட்ட அனைத்துக் கட்டுமான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே ரயில்கள் இயக்கி பரிசோதனையும் நடந்து வருகிறது. சோதனையின்போது, சிக்னல், தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன. இந்த சோதனை வெற்றிகரமாக இருந்ததாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

இந்தியாமரண தண்டனைக்கு ஆதரவாக ஐ.நா., சபையில்

ஐக்கிய நாடுகள் :'மரண தண்டனைகள் கூடாது; கர்ப்பிணி, சிறார்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் போன்ற குறிப்பிட்ட சிலருக்கு, எந்த காரணத்தை கொண்டும் மரண தண்டனை விதிக்கக் கூடாது' என்ற, ஐ.நா., பொதுச் சபை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா ஓட்டளித்தது.கொடுமையான குற்றங்களை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என, வலியுறுத்தும் வரைவு தீர்மானத்தை, ஐ.நா., பொதுச்சபை, கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. அந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற, ஐ.நா.,வுக்கான இந்திய அமைப்பின் செயலர், மயாங் ஜோஷி, தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தார்.அந்த தீர்மானத்திற்கு, 114 ஓட்டுகள் ஆதரவாகவும், 36 நாடுகள் எதிராகவும், 34 நாடுகள், ஓட்டெடுப்பை புறக்கணிக்கவும் செய்தன. இதையடுத்து, இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய நாடுகள் :'மரண தண்டனைகள் கூடாது; கர்ப்பிணி, சிறார்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் போன்ற குறிப்பிட்ட சிலருக்கு, எந்த காரணத்தை கொண்டும் மரண தண்டனை விதிக்கக் கூடாது' என்ற, ஐ.நா., பொதுச் சபை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா ஓட்டளித்தது.கொடுமையான குற்றங்களை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என, வலியுறுத்தும் வரைவு தீர்மானத்தை, ஐ.நா., பொதுச்சபை, கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. அந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற, ஐ.நா.,வுக்கான இந்திய அமைப்பின் செயலர், மயாங் ஜோஷி, தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தார்.அந்த தீர்மானத்திற்கு, 114 ஓட்டுகள் ஆதரவாகவும், 36 நாடுகள் எதிராகவும், 34 நாடுகள், ஓட்டெடுப்பை புறக்கணிக்கவும் செய்தன. இதையடுத்து, இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

24 November 2014

சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிக்கு திருமணம்:

புழல் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிக்கு நாகூரில் திருமணம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் நாகூர் யூசூப் நைனா தெருவை சேர்ந்தவர் அப்துல்லா. இவருடைய மகன் முகைதீன் அப்துல்காதர் என்ற உமர்பாரூக் (வயது35). இவர் டிப்ளமோ முடித்துவிட்டு, ரெயில்வேயில் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 1999-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி திருச்சி உறையூர் அண்ணாமலை நகரை சேர்ந்த டாக்டர் ஸ்ரீதர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட உமர்பாரூக்குக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த உமர்பாரூக்குக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். எனவே திருமணத்துக்காக உமர்பாரூக்கை 2 மாதம் பரோல் விடுப்பில் வெளியே விட வேண்டும் என்று, அவரது தந்தை அப்துல்லா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன், உமர்பாரூக்கிற்கு நவம்பர் 22-ந் தேதி முதல் டிசம்பர் 2-ந் தேதி வரை 10 நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் விடுப்பில் வெளியில் வரும் அவருக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், திருமணம் மற்றும் அதை தொடர்ந்து நடைபெறும் வைபவங்களின்போது போலீசார் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சிறையில் இருந்த உமர்பாரூக் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான நாகூருக்கு வந்தார். நேற்று அவருக்கும் நாகூரை சேர்ந்த ஜாகிராபானு என்பவருக்கும் நாகூரில் திருமணம் நடைபெற்றது. அப்போது உளவு பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

22 November 2014

குளு குளு அறைகள்,மஜாஜ் படுக்கை சாமியார் ராம்பாலின் நீச்சல் குளம்,

கைதான சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் 24 குளு குளு அறைகளும், நீச்சல் குளமும் உள்ளன. ஏராளமான துப்பாக்கிகளும் வைத்துள்ளார்.

அரியானா மாநில சாமியார் ராம்பால், கடந்த புதன்கிழமை, கொலை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இதற்கிடையே, சாமியாரை கைது செய்ய சென்ற போலீசார், ஆசிரமத்தின் ஆடம்பரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சண்டிகார்&ஹிசார் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, 12 ஏக்கர் பரப்பளவில் அவரது ’சத்லோக் ஆசிரமம் அமைந்துள்ளது. அதன் நுழைவாயிலில் பக்தர்களை பரிசோதிக்க ’மெட்டல் டிடெக்டர்’ வைக்கப்பட்டுள்ளது. ஆசிரமம், கோட்டை போன்று கட்டப்பட்டுள்ளது. சுற்றிலும் உயர்ந்த காம்பவுண்டு சுவர்கள் உள்ளன. கண்காணிப்பு கோபுரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பக்தர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சாமியாருக்கு தனியார் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர். அவர்கள் தங்குவதற்கு சிறப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. 
ஆசிரமத்தின் மையப்பகுதியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரமாண்ட பிரார்த்தனை அரங்கம் கட்டப்பட்டது. அது, 50 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்டது. 

அரங்கத்தின் நடுவில், உயரமான மேடை போன்ற அமைப்பு உள்ளது. அங்கு குண்டு துளைக்காத கூண்டு பொருத்தப்பட்டுள்ளது. அதனுள் அமர்ந்துதான் சாமியார் ஆன்மிக போதனைகளை நிகழ்த்துவார்.  பிரார்த்தனை அரங்கத்தை சுற்றிலும் உறுதியான கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு புறம் ஆண்களுக்கும், மறுபுறம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சாமியாரின் போதனைகளை திரையில் காண்பிக்க 3டி புரொஜக்டர் வசதியும் உள்ளது.

ஆசிரமத்தில், 24 குளு குளு அறைகள் உள்ளன. அவை நட்சத்திர ஓட்டல் அறைகளைப் போன்று உள்ளன. அனைத்திலும் குளியலறை இணைப்பு உள்ளது. ஓர் அறையில் ’மசாஜ்’ படுக்கை உள்ளது. மற்றொரு அறையில் ’ட்ரெட்மில்’ வசதி உள்ளது. 4 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில், குளு குளு வசதியுடன் கூடிய ஒரு பிரமாண்ட நீச்சல் குளமும் அமைக்கப்பட்டுள்ளது. 

இதைவிட போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்த விஷயம் என்னவென்றால், ஆசிரமத்தில் ஏராளமான துப்பாக்கிகள் இருந்தன. ஒரு ரகசிய அறையில் இருந்த இரண்டு பீரோக்களில் கைத்துப்பாக்கி, குழல் துப்பாக்கி, எஸ்.எல்.ஆர்.ரக துப்பாக்கி என விதவிதமான துப்பாக்கிகள் இருந்தன. துப்பாக்கி தோட்டாக்களும் இருந்தன. இந்த அறை, சாமியார் ராம்பால் அமர்ந்து போதனை செய்யும் உயர்ந்த மாடத்துக்கு கீழே இருப்பதால் யாருக்கும் சந்தேகம் எழாத வகையில் உள்ளது.

ஆசிரமத்தில் பிரமாண்ட சமையல் அறை உள்ளது. அதில், ஒரு லட்சம் பேருக்கு ஒரு மாதத்துக்கு சமைத்துப்போட தேவையான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அங்கு ரொட்டி சுடும் எலெக்ட்ரானிக் எந்திரம் உள்ளது. அதில், ஒரே நேரத்தில் ஆயிரம் ரொட்டிகள் தயார் செய்யலாம். 
இதுதவிர, நவீன மருத்துவமனையும் உள்ளது. 10&க-கும் மேற்பட்ட பஸ் மற்றும் வாகனங்களும் உள்ளன.

சோதனையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது எங்களது சோதனை இன்னும் முடிவடையவில்லை. ஆசிரமம் மிகப்பெரியதாக இருப்பதால் சோதனை நட்டத்த அதிக நாட்களாகும் என கூறினார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

கொட்டும் மழையில் விவசாயிகள் போராட்டம்!


காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையில் டெல்டா மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரியின் குறுக்கே 2 அணைகளை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு அதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு, அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக, 650 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும், இதில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் எனவும் விவசாயிகள் சங்கத்தினர் கூறியிருந்தனர். மேலும், திருவாரூர், நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய இடங்களில் ரயில் மறியல் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு வர்த்தகர் சங்கங்களும், தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன்படி, 3 மாவட்டங்களில் விவசாயிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டம் இன்று காலை தொடங்கியது. விவசாயிகளுக்கு ஆதரவாக வனிகர்களும் தங்களது கடைகளை அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் பேருந்துகள் ஓடாமல் ஒருசில அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியலில் விவசாயிகள் ஈடுபட்டனர். முழு அடைப்புப் போராட்டம் நடந்து வரும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்து வருகிறது. நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. மழையை பொருட்படுத்தாமல் ஆங்காங்கே விவசாயிகள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை சுற்றுவட்டார கிராமங்களில் கொட்டும் மழையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார்குடி சுற்றுவட்டாரத்திலும் மழையை பொருட்படுத்தாமல், பெருகவாழ்ந்தான், மணலி, விளக்குடி உட்பட 10 கிராமங்களில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். பரவாக்கோட்டை, கோட்டூரிலும் அரசு, தனியார் வாகனங்களை மறித்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

20 November 2014

சட்டவிரோதமாக 4.50 லட்சம் பேர் இந்தியர்கள் உள்ளார்களாம்!



அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரில் 4.50 லட்சம் பேர் இந்தியர்கள் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வருபவர்களில், 4 சதவீதம் பேர் இந்தியர்கள் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு இடைவெளியில் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக இடம் பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், அதேசமயம், 2012ம் ஆண்டின்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக இடம் பெயர்ந்து வாழ்வோரின் எண்ணிக்கை 1.12 கோடியாக இருந்தது என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தற்போது அதே அளவில் உள்ளது. இன்டியானாவில் உள்ள சட்டவிரோத இந்தியர்களின் எண்ணிக்கை 4 சதவீதமாக உள்ளது. இரண்டாவது சட்டவிரோத குடியேறிகளாக இந்தியர்கள் உள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. மெச்ஸிகனில் 14%, மின்னசோட்டாவில் 9%, நியூ ஜெர்சியில் 11%, ஓஹையோவில் 11%, பென்சில்வேனியாவில் 11%, வாஷிங்டனில் 5%ஆக இந்தியர்களின் எண்ணிக்கை உள்ளது. அலாஸ்கா 4%, அரிஸோனா 2%, டெலவரே 7%, இல்லினாய்ஸ் 5%, கான்சாஸ் 5%, மாசசூசட்ஸ் 10%, மிசவுரி 9%, ஓரிகான் 2 சதவீதமாக உள்ளது. இங்கு 3வது பெரிய சட்டவிரோத குடியேறிகளாக இந்தியர்கள் உள்ளனர். ஆசியா, கரீபிய தீவுகள், மத்திய அமெரிக்கா ஆகிய பகுதிகளிலிருந்து வருவோரின் எண்ணிக்கை கூடியுள்ளது. டாப் 10 வரிசையில் 3 லட்சம் பேருடன் சீனா முதலிடத்தையும், 2 லட்சம் பேருடன் பிலிப்பைன்ஸ் 2வது இடத்தையும், 1.80 லட்சம் பேருடன் தென் கொரியா, 1.70 லட்சம் பேருடன் டொமினிக்கன் குடியரசு, 1.50 லட்சம் பேருடன் கொலம்பியா ஆகிய நாடுகள் மூன்றாவது, நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

19 November 2014

ஜெயா சிறையில் “சீருடை அணியவில்லை? புதிய சர்ச்சை!

சட்டத்தின் முன் அனைவரும் சமம். தண்டனை என்பது எல்லோருக்கும் பொதுவானதே. ஆனால், கர்நாடக சிறைத் துறை மட்டும் இதற்கு விதிவிலக்கானது. சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு அவர் கைதி என்பதையே மறந்து சலுகைகளை அள்ளித் தந்திருக்கிறது. இது எதற்காக? என்று விளக்கம் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பி
பதிலும் வாங்கியிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நரசிம்மமூர்த்தி. பெங்களூரில் இருந்த அவரை சந்தித்தோம். ”பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவுக்காக வெஸ்டன் டாய்லெட், ஏ.சி மற்றும் வெளியிலிருந்து உணவு முதலியன தரப்பட்டன என ஊடகங்களில் தகவல்கள் வந்தன.

ஆனால், இதையெல்லாம் மறுத்து அறிக்கைவிட்டார் சிறைத் துறை அதிகாரி ஜெயசிம்ஹா. அதனால் என்னைப் போன்ற வெகுஜன மக்களுக்கு யார் சொல்வதை நம்புவது என்று புரிந்துகொள்ள முடியாததால், நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஐந்து கேள்விகள் கேட்டிருந்தேன். அதற்கு, கடந்த வாரம் கர்நாடக சிறைத் துறை பதில்கள் அனுப்பியது.

1. நீதிமன்றம் தண்டனை விதித்த பிறகு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் ஜெயலலிதாவை அடைத்த தேதி, நேரம் என்ன?
பதில்: 27.9.2014 மாலை 6:00. கைதி நம்பர்: 7402.
2. சிறைக்குள் ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் என்னென்ன?
பதில்: தண்டனைக் கைதியாக ஜெயலலிதா உள்ளே வந்ததில் இருந்து வெளியே சென்றதுவரை சிறைத் துறை அவருக்கு எந்தச் சலுகைகளும் கொடுக்கவில்லை.

3. ஜெயிலுக்குள் இருந்தபோது ஜெயலலிதா எத்தனை நபர்களைச் சந்தித்தார்? அவர்களின் பதவிகள் என்ன? அவர்கள் உறவினர்களா? வழக்கறிஞர்களா? நலம் விரும்பிகளா? அதிகாரிகளா? மந்திரிமார்களா? என்பதைத் தெளிவாகக் கொடுக்க வேண்டும்?
பதில்: அவரை யாரும் சந்திக்கவில்லை.
4. ஜெயலலிதா சிறைக்குள் எந்தெந்த அதிகாரிகளின் மேற்பார்வையில் இருந்தார்?
பதில்: ஜெயலலிதா பெண் தண்டனைக் கைதி என்பதால் பெண்களுக்கான ப்ளாக்கில் அடைக்கப்பட்டார். அவரை பெண் எஸ்.பி., பெண் ஜெயிலர், பெண் பாதுகாப்பு அதிகாரி, பெண் தலைமை வார்டன் மற்றும் சிறைத் துறை இயக்குநர் மேற்பார்வையில் இருந்தார்.

5. தண்டனைக் கைதிகளுக்குச் சீருடை கொடுக்கப்பட வேண்டியது சிறைத் துறை விதி. அப்படிச் சீருடை கொடுக்கப்படவில்லை என்றால், அதற்கான காரணம் என்ன?

பதில்: கர்நாடக சிறைத் துறை 350 விதிப்படி ஒரு தண்டனைக் கைதிக்குச் சீருடை களும், படுக்கை விரிப்புகளும் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், சாதாரண தண்டனைக் கைதிகள் இந்தச் சீருடைகளை அணியத் தேவையில்லை. ஆனால், கொடூரமான தண்டனைக் கைதிகள் கட்டாயம் இந்தச் சீருடைகளைத்தான் அணிய வேண்டும். ஜெயலலிதா சாதாரண தண்டனைக் கைதி என்பதால், அவர் வெள்ளைச் சீருடை அணியவில்லை எனத் தகவல் சொல்லி இருக்கிறார்கள்.
ஜெயலலிதாவுக்கு எந்தச் சலுகைகளும் கொடுக்கவில்லை என்கிறார்கள். ஆனால், சிறைத் துறை அதிகாரியே பத்திரிகைகள் கொடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அதேபோல உணவும் வெளியிலிருந்து போனதை போட்டோவோடு பத்திரிகைகளில் வெளி வந்ததே. அது தவறான படங்களா?

ஒரு தண்டனைக் கைதிக்கு நம்பரும், சீருடையும் வழங்கப்பட வேண்டும். அதைக்கூட அணியாவிட்டால், இந்த தண்டனைக்கு என்ன அர்த்தம்?
எந்த அடிப்படையில் கைதிகள் தரம் பிரிக்கப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. அதே பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் இருந்த 132 பெண் கைதிகளுக்கும் சீருடை வழங்கப்பட்டிருக்கிறது. அதையணிந்த அந்த 132 பெண் சிறைக் கைதிகளும் கொடூரக் கைதிகளா? என்பதை சிறைத் துறை விளக்க வேண்டும். மீண்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மேல்முறையீடு செய்வேன். சொல்வதைப்போல தண்டனைக் கைதிகளுக்கும் பாகுபாடு இருக்கிறது என்றால், அதனை நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்பேன்என்றார்.

கர்நாடக சிறைத்துறை அதிகாரி டி.ஐ.ஜி ஜெயசிம்ஹாவிடம் பேசினோம். ஜெயலலிதா யூனிஃபார்ம் அணியாததைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் நாங்கள் ஃபாலோஅப் பண்ணமுடியும். நாங்களாக எதையும் செய்ய முடியாது. ஜெயலலிதா கர்நாடக சிறைத் துறை விதிகளுக்கு உட்பட்டு உள்ளே கொடுக்கப்பட்ட உணவுகளைத்தான் சாப்பிட்டார். வெளியில் இருந்து உணவுகள் வரவழைக்கப்படவில்லை. சாதாரண தண்டனைக் கைதிகள் சீருடை அணியத்தேவையில்லை. அவர்களிடம் துணிகள் இல்லாதபோது நாங்கள் கொடுக்கும் சீருடையை அணிந்து கொள்கிறார்கள் என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

18 November 2014

மூவரை படுகொலைசெய்த ஏழு இராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை

   இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு அப்பாவி இளைஞர்கள் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 7 இராணுவ வீரர்களுக்கு இந்திய இராணுவ நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 3 அப்பாவி இளைஞர்களை சுட்டுக் கொன்றிருந்த இராணுவ வீரர்கள், இந்தப் படுகொலையை மறைப்பதற்காக இளைஞர்களின் சடலங்கள் மீது கறுப்பு பெயின்ட்டை ஊற்றி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போட்டிருந்ததுடன், வெளிநாட்டிலிருந்து ஊடுருவ முயன்ற பங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிக்கையொன்றையும் தயாரித்து கையளித்திருந்தனர்.
எனினும் ராஃபியாபாதில் காணாமல் போன ஷேஷாத் அகமத், ரியாஸ் அகமத், முகமத் ஷபி ஆகிய 3 இளைஞர்களே இராணுவ வீரகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்திருந்தது.
இதனை அடுத்து இறந்த இளைஞர்களின் உறவினர்களின் கோரிக்கையை அடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படட்ட 11 ராணுவ வீரர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
2010-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் இடம்பெற்ற இந்த சம்பவத்திற்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்திய இராணுவத்தை எதிர்த்து போராட்டங்களில் ஈடுப்பட்டவர்கள் மீது சி.ஆர்.பி.எப். மற்றும் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 120 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிடனர்.
இதனால் இந்த சம்பவம் தேசிய அளவில் மாத்திரமன்றி சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு மீதான இறுதி விசாரணையின் முடிவில் இன்று தீர்ப்பை அறித்துள்ள இந்திய இராணுவ நீதிமன்றம், படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என ஏழு இராணுவ வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தண்டனை வழங்கப்பட்டுள்ள 7 இராணுவ வீரர்களில் இருவர் உயர் இராணுவ அதிகாரிகள் என்றும், இந்த இராணுவ வீரர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் நடந்த இந்த துயர சம்பவத்துக்கு காலம் கடந்த பின்னர் வரவேற்கத்தக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் , “காஷ்மீரில் உள்ள யாரும் நம்ப முடியாத ஒன்று நடந்துள்ளது. இது போன்ற வழக்குகளில் மிகவும் அரிதாக நீதி கிடைக்கின்றது.
மச்சில் சம்பவம் போலான போலி என்கவுண்டர் இனி நடக்கக் கூடாது. இந்த தீர்ப்பு இத்தகைய செயலில் ஈடுபடுவோருக்கு பாடமாக இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

16 November 2014

நெடுஞ்சாலை விளக்குகள்: மின்சாரம் விரயமாகும் அவலம்

திருவள்ளூர்- திருத்தணி நெடுஞ்சாலை, ஜே.என்.சாலை உள்ளிட்ட பகுதிகளில் பகலில் எரியும் மின் விளக்குகளால் மின்சாரம் விரயம் ஏற்பட்டு வருகிறது. இதைத் தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியான திருத்தணி நெடுஞ்சாலையில டோல்கேட் முதல் ஜே.என்.சாலையில் ஆயில்மில் பகுதி வரை சாலையோரம் மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகளை நகராட்சி நிர்வாகத்தினர் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், நாள்தோறும் மாலை 6 மணிக்கு எரியத் தொடங்கும் இந்த விளக்குகள் மறுநாள் காலை 11 மணி வரையில் எரிவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே, மின்பற்றாக்குறை உள்ள நிலையில் இதுபோல் பகலில் விளக்குகள் எரிவதால் மின்சாரம் விரயம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நகராட்சி பொறியாளர் பாபு கூறியதாவது: நகராட்சி அதிகாரிகள் காலை 8 மணி முதல் 10 மணி வரை நகர்ப் பகுதிகளில் மேற்பார்வையிட்டு வருகின்றனர். மாதத்தில் 2 நாள்கள் மின் விளக்குகள் பகல் நேரத்தில் எரியும். அந்த நேரத்தில் நகராட்சி மின் ஊழியர்கள் அந்த விளக்குகளின் தன்மை குறித்து சோதனை செய்வர் என்றார் அவர இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

14 November 2014

ஆர்ப்பாட்டம், ஏழைகளின் வயிற்றில் அடித்து

பால் விலை உயர்வால் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், ஏழைகளின் வயிற்றில் அடித்து விட்டார்கள் என்று வசனங்கள் எல்லாம் எழுந்த வண்ணம் இருந்தன.
ஆளும்கட்சி உயர்த்திய பால் விலையை, கையில் ஆயுதமாக எடுத்துக் கொண்டு, பல கட்சிகள் ஆங்காங்கே போராட்டங்கள் என்ற பெயரில் பழமொழிகளை உதிர்த்து வந்தன.
ஆனால் இந்த பால் விலையால் மாடு வளர்க்கும் மக்கள் எவ்வளவு பயனடைந்திருப்பார்கள் என்றால் கூட்டி பார்த்தால் லாபம் கொஞ்சமே.
ஆம்…ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இதனையும் பால் உற்பத்தி விவசாயிகளின் கோரிக்கைபடி உயர்த்தப்பட்டுள்ளது என்று அரசு கூறியுள்ளது.
மாட்டுத் தீவனமான பருத்திக்கொட்டை, புண்ணாக்கு போன்றவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்கள் தற்போது வழங்கப்படுவதில்லை.
அவற்றை தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கும் அவலநிலைக்கு பால் உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு ஆவின் பால் விலை உயர்வால், கால்நடை வியாபாரிகள் லாபம் அடைந்து விட்டார்கள் என்று சொன்னால் அது முற்றிலும் தவறாகும்.
ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.10, பயணங்களில் போது நாம் குடிக்கும் பெப்ஸி பாட்டில் 1 லிட்டர் ரூ.75 இவ்வாறு, வெறும் எனர்ஜிடிக் பானத்திற்காக இவ்வளவு தொகை செலவழிக்கும் நாம், ஏன் ஆரோக்கியம் வழங்கும் ஆவின் பால் விலையை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
ஏழைகளின் வயிற்றில் அடித்து விட்டார்கள் என்று வசனங்கள் கூறினால், அங்கு கால்நடை வியாபாரியும் ஒரு ஏழைதான்.
எதுவாயினும் காற்றைக் கூட காசு கொடுத்து வாங்கக்கூடிய நிலையில் இருக்கும் நாம், அரசியல்வாதிகள் எத்தனை எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும், ஜனநாயக நாட்டில் வசிக்கும் நாம் விழித்துக்கொண்டு உண்மை நிலைமையை அறிந்து கொள்வது அவசியம்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து!

5 தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இலங்கை அதிபர் ராஜபக்சே ரத்து செய்ய உத்தரவிட்டிருப்பதாக மலையக தமிழ் எம்பியும், அமைச்சருமான செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.
பின்னர் 5 பேரும் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த கொழும்பு உயர்நீதிமன்றம் 5 மீனவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்தது.

இதனால், தமிழகம் முழுவதும் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன.
பின்னர் இலங்கை நீதிமன்றத்தில் அங்குள்ள இந்திய தூதரகத்தால் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே தமக்குள்ள அதிகாரத்தின்படி 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டிருப்பதாக அந்நாட்டு அமைச்சர் செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த தொலைபேசி பேட்டியில், 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உரிய உத்தரவை நீதித்துறைக்கு ராஜபக்சே பிறப்பித்துள்ளார்.
இருப்பினும் இந்தியத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றால்தான் இது நடைமுறைக்கு வரும் என்றும், இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

09 November 2014

உலக டென்னிஸ் போட்டி: லண்டனில் இன்று தொடக்கம்

சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆண்டின் கடைசியில் ஆண்களுக்கான ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதில் உலக தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
இதன்படி இந்த ஆண்டுக்கான உலக டூர் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடக்கிறது. இதில் களம் காணும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
‘ஏ’ பிரிவில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு), மரின் சிலிச் (குரோஷியா) ஆகியோரும், ‘பி’ பிரிவில் 2-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), நிஷிகோரி (ஜப்பான்), ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), மிலோஸ் ராவ்னிக் (கனடா) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள். 2012, 2013-ம் ஆண்டு சாம்பியனான ஜோகோவிச், இந்த முறையும்
வாகை சூடினால், 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டியில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.
6 முறை சாம்பியனான 33 வயதான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் மல்லுகட்டி நிற்கிறார். இந்த போட்டியிலும் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஜப்பானின் நிஷிகோரி, அமெரிக்க ஓபன் சாம்பியனான மரின் சிலிச், கனடாவின் மிலோஸ் ராவ்னிக் ஆகியோர் கவுரவமிக்க இந்த போட்டிக்குள் அடியெடுத்து வைப்பது இதுவே முதல் முறையாகும். முதல் நாளில் நிஷிகோரி-முர்ரே, ரோஜர் பெடரர்-ராவ்னிக் மோதுகிறார்கள். 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிரபல நடிகர் மீசை முருகேசன் மரணம்


பிரபல குணசித்திர நடிகர் மீசை முருகேசன். இவர் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வடபழனி குமரன்காலனி 9-வது தெருவில் உள்ள பாலாஜி அபார்ட்மென்டில் குடும்பத்துடன் வசித்தார்.
இரு வாரங்களுக்கு முன்பு வீட்டு குளியல் அறையில் மீசை முருகேசன் வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மூளையில் ரத்தம் உறைந்து இருந்தது. சர்க்கரை வியாதி மற்றும் சிறுநீர் பாதிப்புகளும் அவருக்கு இருந்தன.
தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். ஆனாலும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தார்.
 அவரை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்களும் கைவிரித்தனர். இதையடுத்து மீசை முருகேசனை குடும்பத்தினர் வீட்டுக்கு கொண்டு சென்றனர். நேற்று மாலை 4 மணிக்கு உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 85.
மரணம் அடைந்த மீசை முருகேசன் ஆரம்ப காலத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்குழுவில் தவில் கலைஞராக பணியாற்றினார். மோர்சிங் வாசிப்பதில் வல்லவராக இருந்தார். பல்வேறு இசை ஒலிகளையும் எழுப்புவார்.
திருமால் பெருமை உள்ளிட்ட பழைய படங்களில் சிறுசிறு வேடங்களில் தலைகாட்டினார். மோகன், நதியா நடித்த உயிரே உனக்காக படத்தில் தான் முழு நடிகரானார். விஜய்யுடன் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை படங்களில் நடித்து பிரபலமானார். விஜயகாந்துடன் பெரியண்ணா படத்தில் நடித்தார். கடைசியாக சேரனுடன் பிரிவோம் சந்திப்போம் படத்தில் நடித்தார். தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்.
வெளிநாடுகளுக்கும் இசை நிகழ்ச்சிகளுக்காக சென்று வந்தார். டி.வி. நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். பெரிய மீசை வைத்து இருந்ததால் இவரை மீசை முருகேசன் என்று அழைத்தனர்.
மரணம் அடைந்த மீசை முருகேசனுக்கு கண்ணம்மா என்ற மனைவியும் ஜோதி குமார், நாகராஜன் என்ற மகன்களும், சரஸ்வதி, செல்வி என்ற மகள்களும் உள்ளனர். அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று மாலை உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வடபழனி ஏவி.எம் ஸ்டூடியோ பின்புறம் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

போலி டாக்டர்கள் 4 பேர் கைது - மக்களிடையே அதிர்ச்சி!

தருமபுரியில் போலி டாக்டர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பிக்கிலி மலைக்கிராமத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் சந்தோஷ். இவருக்கு சில நாட்களுக்கு முன் கீழே விழுந்ததில் கண்ணில் அடி பட்டிருக்கிறது. அதைச் சரி செய்வதற்காக சந்தோஷை அழைத்துக்கொண்டு அவரது அப்பா பட்டாபிராமன், அந்த பகுதியில் கிளினிக் வைத்திருந்த ஜீவா கணேசனை அணுகியிருக்கிறார்கள். ஜீவா கணேசனும் அதற்கு உரிய சிகிச்சை வழங்குவதாக கூறி சிகிச்சை அளித்திருக்கிறார், இதில், சந்தோஷுடைய முகம் வீங்கி கண்களில் தண்ணீர் வர ஆரம்பித்திருக்கிறது.
    அடுத்த கட்டமாக பாப்பாரப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சந்தோஷை பரிசோதித்த டாக்டர் கண் பார்வை பாதிக்கப்படும் நிலையில் உள்ளதை கண்டுபிடித்திருக்கிறார். இதையடுத்து, சந்தோஷுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பரிந்துரைத்திருக்கிறார். அதன் பிறகுதான் ஜீவா கணசேன் தவறான சிகிச்சை கொடுத்தது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து, சந்தோஷின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்,
 ஜீவாகணேசனின் கிளினிக்கில் சோதனை நடத்தினர். இதில், ஜீவா கணேசன் டாக்டரே இல்லை என்ற உண்மை தெரிய வந்திருக்கிறது.
மேலும், அதே பிக்கிலி பகுதியில் பச்சியம்மாள் என்பவர் வைத்திருந்த கிளினிக்கை சோதனை நடத்த அவர் ப்ளஸ் டூ வரை தான் படித்திருந்தார். அதேபோல், காரிமங்கலத்தில் நடந்த சோதனையில், செந்தில் மற்றும் சண்முகம் ஆகிய இருவர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சையளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து ஜீவா கணேசன், பச்சியம்மாள், செந்தில், சண்முகம் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலி டாக்டர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

08 November 2014

திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்தக் கோரிய மனு தள்ளுபடி

பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்தக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தக் கோரி வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும், ஆணின் திருமண வயதை 21ல் இருந்து 25 ஆக உயர்த்த வேண்டும்
 என்றும் கோரியிருந்தார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமண வயதை அதிகரிப்பது போன்ற விவகாரம் அரசின் கொள்கை முடிவு என்று கூறிய நீதிபதி, திருமண வயதை உயர்த்தக்கோரிய வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.  

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மக்கள் சாதிவாரி கணக்கெடுப்புக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

 சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்தக் கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை
எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது.
சாதிவாரி கணக்கெடுப்பு எதிர்ப்பும், ஆதரவும் - உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பா.ம.க, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், தமிழக பா.ஜ.க.வோ இது நியாயமான தீர்ப்பு என்று கூறியுள்ளது. சாதிவாரி புள்ளி விவரங்கள் தேவையில்லை என்பதை நீதிமன்ற தீர்ப்பு வலியுறுத்துகிறது என்று பாஜனதா கட்சியின் தேசிய செயலாளர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அரசியல் அமைப்பு கூட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

04 November 2014

மரண தண்டனை கைதிகள் பரிமாற்ற மனு இன்று விசாரணைக்கு

 இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களையும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கைதி பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் இந்தியாவுக்கு அழைக்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மேல்நீதிமன்றத்தில் இந்த மனு நேற்று  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி எஸ் எம் ஆனந்த முருகன் தாக்கல் செய்த இந்த மனுவில் இரண்டு நாடுகளும் செய்து கொண்டுள்ள கைதி பரிமாற்ற உடன்படிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த ஐந்து மீனவர்களும் இந்தியாவின் கரையில் இருந்து 12 கிலோ மீற்றருக்குள் வைத்தே இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

யாத்திரை பக்தர்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமையில் நேரடி தரிசனம் ரத்து

திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க வார விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.
தர்ம தரிசனம் செய்ய பக்தர்கள் சில நாள் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பாத யாத்திரை பக்தர்கள் நேரடியாக தரிசனத்துக்கு (திவ்யதரிசனம்) அனுமதிக்கப்படுவதால் இந்த நிலை ஏற்படுவதாக தேவஸ்தானம் கருதுகிறது.
இதனால் சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு நேரடி தரிசனத்தை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. விரைவில் இது அமுல்படுத்தப்படும் என்று கோவில் கூடுதல் நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசராஜ் தெரிவித்தார்.
அவர் கூறும்போது, ‘‘பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தர்ம தரிசன பக்தர்களை மணிக்கணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் வசதிக்காக சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் திவ்ய தரிசனத்தை ரத்து செய்ய முடிவு செய்து உள்ளோம்’’ என்றார்.
திருப்பதி கோவிலில் நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 41,815 பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். அதன் பிறகு 18 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். இவர்களுக்கு தரிசனத்துக்கு 16 மணி நேரம் ஆனது. பாத யாத்திரை பக்தர்கள் தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்து நின்றனர்.
கோவிலில் இன்று சால கட்லா கைசிக துவாதசி ஆஸ்தானம் கொண்டாடப்பட்டது. இன்றைய தினம் பெருமாளுக்கு ஆரத்தி எடுத்து வழிபடுவது விசேஷமாகும்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

03 November 2014

தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளுக்கு எச்சரிக்கை !

தமிழக அகதி முகாம்களில் உள்ள ஈழ அகதிகள் வெளிநாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கோரி செல்வது தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கடலோர காவற்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றனர்.
அவுஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளுக்கு தமிழகத்தில் உள்ள அகதிகள் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பயனிக்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கின்றவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று காவற்துறையினர் அகதிகளிடம் கோரியுள்ளனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக பயணிப்பதால் பல்வேறு ஆபத்துக்களை சந்திப்பதுடன், உரிய இடத்துக்கு போய் சேர முடியாது என்றும் அவர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

02 November 2014

அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்தது!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் நேற்று 136 அடியை தாண்டியது. 35 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்து உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. இந்த அணையில் இருந்து பெறப்படும் நீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் மொத்த நீர்மட்ட உயரத்தை 152 அடியாக உயர்த்துவது தொடர்பாக தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த அணை 100 ஆண்டுகள் பழமையானது என்றும், எனவே அதில் கூடுதலாக நீரைத்தேக்க முடியாது என்றும் கூறப்பட்டது. இதன் காரணமாக கடந்த 1979–ம் ஆண்டு அணையின் நீர்மட்டம் 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. அதற்காக அணையில் உள்ள மதகுகள் மேலே ஏற்றப்பட்டன. அதன் பின்னர் கடந்த 2006, 2007 மற்றும் 2011–ம் ஆண்டுகளில் பெய்த மழை காரணமாக அணையில் 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் கேரள அரசு அணையினை பாதுகாக்க வேண்டும் என்று கூறி, அதற்கு மேல் நீர்மட்டம் உயராத வகையில் கூடுதலாக வந்த தண்ணீரை வீணாக வெளியேற்றியது. இதற்கிடையே அணை பலமாக இருப்பதாகவும் அதனால், கூடுதல் தண்ணீரை தேக்குவதற்கு உத்தரவிடக்கோரியும் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மே மாதம் 7–ந் தேதி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் 3 பேர் அடங்கிய கண்காணிப்பு குழுவினை மத்திய அரசு அமைத்தது. இந்த குழுவினர் அணையை ஆய்வு செய்தனர். அப்போது அணைக்கு தண்ணீர் வரும் நிலையில் அதன் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் வகையில் 13 மதகுகளும் இறக்கி வைக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் எதிரொலியாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 135.80 அடியாக உயர்ந்தது. பின்னர் மாலையிலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால், அணையின் நீர்மட்டம் 136.10 அடியாக உயர்ந்தது. தற்போது 142 அடிவரை நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதால், 35 ஆண்டுகளுக்கு பிறகு அணையில் 136 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. தற்போது அணைக்கு 1,916 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 456 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 6 ஆயிரத்து 66 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. நேற்று மாலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்து காணப்பட்டது. அணையில் 136 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்திருப்பது தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இங்குஅழுத்தவும்மற்றைய செய்திகள்

01 November 2014

நின்ற லாரி மீது வேன் மோதியதில் 4பேர் பலி

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்த ஐஸ்டின் என்பவருக்கு சொந்தமான வேன் உள்ளது. இதன் டிரைவராக அக்காள்மடத்தை சேர்ந்த அருண் (வயது25) என்பவர் உள்ளார். வேனில் ஏற்பட்ட பழுதை நீக்க மதுரை கொண்டு வரப்பட்டு பழுது நீக்கிய பின் நேற்று இரவு பாம்பனுக்கு ஓட்டி சென்றார். வரும் வழியில் புதிய பஸ் ஸ்டாண்ட் வெளியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் வேனை நிறுத்தி அங்கு நின்று கொண்டிருந்த உச்சிப்புளி, மண்டபம் பயணிகளை ஏற்றினார்.
உச்சிப்புளியில் சில பயணிகளை இறக்கிவிட்டு மண்டபம் நோக்கி வேன் வந்து கொண்டிருந்தது. அரியமான் விலக்கு அருகே நேற்று இரவு வந்தபோது முன்னாள் சிமிண்ட் மூட்டைகளை ஏற்றிய ஒரு லாரி பழுதாகி நின்றது. கண் இமைக்கும் நேரத்தில் வேன் பயங்கரமாக நின்ற லாரி மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.
இதனால் மதுரை–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதில் வேனில் பயணம் செய்த மண்டபம் காந்திநகரை சேர்ந்த ராணி (வயது35) சம்பவ இடத்திலேயே பலியானார்.
பாம்பனை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அமல்ராஜ் (28) ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மண்டபம் சவரத்தொழிலாளி புகழேந்தி (41), மண்டபம் காந்தி நகரை சேர்ந்த 3மாத குழந்தை யுவிராஜ் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர்.
வேன் டிரைவர் தங்கச்சி மடம் அருண் (21), மண்டபம் சிந்து (18), சேவியர் (29), சுந்தரமுடையான் புல்லாணி (43), அழகுசுந்தரி(35), புதுமடம் சசிகலா (27), அக்காள்மடம் ரூபன் (22), பாம்பன் லட்சுமணன் (35) ஆகிய 9 பேரும் பலத்த காயமடைந்த நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் மண்டபம் சிந்து (18), பாம்பன் லட்சுமணன் ஆகிய 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு வரப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அன்வர்ராஜா எம்.பி., ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரடியாக வந்து பணியில் இருந்த டாக்டர் கண்ணனை சந்தித்து விபத்துக்குள்ளானவர்களின் நிலை குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அங்கு கதறி அழுது கொண்டிருந்த இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பேஸ்புக்கில் போலி தகவல்களை கொடுத்து கணக்கு தொடங்கிய ஊழியர் கைது

 ஐதராபாத்தில் போலி தகவல்களை கொடுத்து பேஸ்புக் கணக்கு தொடங்கி பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த ஐ.டி. நிறுவன ஊழியரை சைபராபாத் போலீசார் கைது செய்தனர். ஐதராபாத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வாலிபர் டேட்டாபேஸ் புரோகிராமராக பணியாற்றி வந்துள்ளார்.
திரிபுரனெனியை சேர்ந்த சிவ கிருஷ்ணா என்பவர்
போலி தகவல்களை கொண்டு பேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ளார். அவர், போலி தகவலில் பெண் ஒருவரது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். இதனையடுத்து பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் சிலர் குறிப்பிட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட தன்னை பிரண்ட்ஸ் - ஆக சேர்த்துக் கொள்ளுமாறு பேசி தொந்தரவு கொடுத்துள்ளனர்.
 
எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண் தனது செல்போன் எண், போலி பேஸ்புக் கணக்கில் தெரிவிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் கொடுத்தார். புகாரின்படி விசாரணை நடத்திய போலீசார் சிவ கிருஷ்ணாவை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவலை குற்றவாளி, வேலைவாய்ப்பு தொடர்பான இணையத்தள டேட்டாபேஸில் இருந்து எடுத்துள்ளார். என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சிவ கிருஷ்ணா, புகார் அளித்த பெண்ணின் செல்போன் எண்ணை கண்டதும், அழைப்பு விடுத்து பேசியுள்ளார். எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். ஆனால் பெண் பதில் அளிக்கவில்லை. பெண் பதில் எதுவும் கூறாத நிலையில் எரிச்சல் அடைந்த சிவ கிருஷ்ணா அவரது செல்போன் எண்ணை கொண்டு போலி பேஸ்புக் கணக்கை தொடங்கியுள்ளார். ஆன்லைனில் ஆள்மாறாட்டம் செய்து பாதிக்கப்பட்ட பெண்ணை போன்றே தகவல்கள் பரிமாறிக் கொண்டுள்ளார்," என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

நோக்கியா தொழிற்சாலை இன்று முதல் மூடப்படுகிறது

 பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் நோக்கியா செல்போன் தொழிற்சாலை இயங்கி வந்தது. உலக அளவில் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலைகளில் ஒன்றான இங்கு நேரடியாக 8 ஆயிரம் பேரும், மறைமுகமாக 25 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர்.
இந்த நோக்கியா தொழிற்சாலை கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கியது. இதைத்தொடர்ந்து இந்த ஆலையை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு விற்க நோக்கியா நிறுவனம் முடிவு செய்தது. இது தொடர்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால் வரி ஏய்ப்பு காரணமாக பல்வேறு சிக்கல்கள் நீடித்ததால், இந்த ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து இந்த நிறுவனத்தை நவம்பர் 1-ந் தேதி (இன்று) முதல் மூடப்போவதாக நோக்கியா நிறுவனம் அறிவித்தது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவியது. இது தொடர்பாக கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சிகள், இந்த தொழிற்சாலையை மத்திய அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
இந்தநிலையில் நோக்கியா தொழிற்சாலை இன்றுடன் மூடப்படுவதாக நோக்கியா நிறுவனம் நேற்று உறுதியாக அறிவித்தது. இது தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>