Pages

03 October 2015

இரண்டு பப்பாளி பழங்களை திருடியவரை தேடும் போலீஸ்

டெல்லியில் உள்ள பிஜு ஜனதா எம்.பி. மாளிகையில் இருந்து  இரண்டு பப்பாளி பழங்களை திருடியவரை தீவிரமாக போலீஸ் தேடிவருகிறது.

ஒடிசாவை சேர்ந்த பிஜு ஜனதா எம்.பி. அர்ஜூன் சரண் சேத்தியின் டெல்லி மாளிகையிலிருந்து மர்ம நபர் ஒருவர் இரண்டு பப்பாளி பழங்களை திருடியுள்ளார். அவரை எம்.பி.யிம் மகனும், பாதுகாவலர்களும் பிடித்துள்ளனர். ஆனால் அந்த நபர் போலீஸ் வருவதற்குள் எப்படியோ தப்பிவிட்டார். 

தற்போது அந்த மர்ம நபர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அவரை தீவிரமாக தேடிவருகிறார்கள் டெல்லி காவல்துறையினர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



No comments:

Post a Comment