This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 January 2018

இந்திய நடிகையுடன் திருமணம் யாழ் இளைஞனுக்கு அடித்தது அதிஷ்டம்


இலங்கைத் தமிழர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்தியாவின் பிரபல சின்னத்திரை நடிகையான சரண்யா துரடி தொடர்பில் சில செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் பிரபல தனியார் தெலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகத்தில் நடிப்பவரே சரண்யா.
சென்னையை சேர்ந்த இவர் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் MA Broadcasting Communication படித்து, ஊடகவியலாளராக பணியாற்றியுள்ளார்.
பின்னர், பாபி சிம்ஹா நடித்த சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
இவர் தெலுங்கு மற்றும் 2 தமிழ் படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
இவர் இலங்கைத் தமிழரை காதலித்து மணமுடித்த நிலையில் இவர்களின் காதல் கதை தொடர்பில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டனில் வசிக்கும் அமுதன் என்பருடன் இவருக்கு திருமணம் நடந்துள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அமுதனின் குடும்பத்தினர் தற்போது லண்டனில் வசித்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் மயிலாப்பூர் – கபாலீஸ்வரர் கோவிலுக்கு அமுதனின் குடும்பத்தினர் வந்தபோது அமுதனை சரண்யா சந்தித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் மலர்ந்த நட்பு காதலாகி கல்யாணம் வரை சென்றுள்ளது.
லண்டனில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு மனவளம் குறித்து ஆலோசனைகள் வழங்கும் பொறுப்பில் என் கணவர் இருக்கிறார் என சரண்யா தெரிவித்திருக்கின்றார்.
மேலும், என்னுடைய கணவர் ஒரு சிறந்த மிருதங்க இசைக் கலைஞர். யோகா மற்றும் தியானக் கலையிலும் அவர் நிபுணர் எனவும் தனது காதல் கணவரைப்பற்றி கூறியுள்ளார்.
திருமணத்திற்குப் பின் இந்தியாவில் இருந்து செய்தி வாசிக்காவிட்டாலும் லண்டனில் இருந்து தனது பணியை தொடர்வேன் என்று அறிவித்திருந்த நிலையில், சென்னையில் தங்கி நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றமை
 குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



27 January 2018

மகாபலிபுரம் சாலையில் கார் ஓட்டுநரின் தற்கொலை முயற்சி

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் சீட் பெல்ட் அணியவில்லை என்று பொலிஸார் அடித்ததால் ஆத்திரம் அடைந்த கார் ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 65 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கார் ஓட்டுநரின் உடல்நிலை கவலைக்கிடமானதாக இருக்கிறது.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் ஹாலிடே இன் விடுதிக்கு அருகில் கார் ஓட்டுநர் ஒருவரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். அவர் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டவில்லை என்று போலீசார் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் தனக்குத் தானே உடலுக்கு தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் ஓட்டுநர் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ஓட்டுநரின் தற்கொலை முயற்சிச் சம்பவத்திற்கு பொலிஸாரே காரணம் எனக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர். நடுரோட்டில் பொலிஸாரை கண்டித்து கார் ஓட்டுநர் 
தீக்குளித்த சம்பவம் அந்தப் பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தீக்குளித்த கார் ஓட்டுநர் திருநெல்வேலியைச் சேர்ந்த மணிகண்டன் என்றும், தாம்பரத்தில் தங்கி வாடகை கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் தெரிய
 வந்துள்ளது. 
சென்னை தாம்பரம் எஸ்ஆர்பி டூல்ஸ் அருகே இன்று காரில் வந்த போது சீட் பெல்ட் அணியவில்லை என்று போக்குவரத்து காவலர்கள் 4 பேர் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் காரை சர்வீஸ் சாலையில் நிறுத்திவிட்டு, தனது வாகனத்தில் இருந்த
 பெட்ரோலை ஒரு வாட்டர் பாட்டிலில் நிரப்பி எடுத்து வந்து தன் உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து போக்குவரத்து 
போலீசார் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளனர்.
 சீட் பெல்ட் அணியவில்லை என்று கால் முறியும் அளவு பொலிஸார் அடித்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக மீட்கப்பட்ட போது மணிகண்டன்
 தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


03 January 2018

இரண்டு மணி நேரத்தில் 06 பேரை அடித்துக் கொன்ற நபர் கைது!

வட இந்தியாவின் ஹரியானா மாநிலம் பால்வால் நகரில் மர்ம நபர் இரும்பு கம்பியால் பலரை கொலை செய்துள்ளார். இதை சிசிடிவி மூலம் கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர். அவர் குறித்து 
நடத்திய விசாரணையில் கொலையாளி முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரிய வந்தது. அவர் சிறிது
 மனநலம் பாதிக்கப்பட்டவர்.நேற்று அதிகாலையில், இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது. 2 மணி நேரத்திற்குள் மூன்று வாட்ச்மேன்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 6 பேரை அவர் அடித்துக் கொன்றுள்ளார்.
 கொலைக்காக காரணம் இன்னும் கண்டறியப்பட வில்லை. கைது செய்ய முயன்ற போது நரேசுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் நரேஷ் படுகாயமடைந்தார்.ஈவு 
இரக்கமின்றி 6 பேர் இரும்பு கம்பியால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது பொலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>