This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

20 December 2017

ஜெயலலிதா அப்பல்லோவில் பழச்சாறு அருந்தும் காட்யால் பரபரப்பு!

அப்பல்லோ வைத்தியசாலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட காணொளி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி 
உயிரிழந்தார்.‎இவரது இறப்பில் பல மர்மம் இருப்பதாகவும்,
 இது குறித்து விசாரணை நடத்தப்பட 
வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாணைகள் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், தற்போதும் அவர் வைத்தியசாலையில் இருக்கும் காணொளி 
வெளியாகியுள்ளது.20 நொடிகள் உள்ள அந்த காட்சியில், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே ஜெயலலிதா பழச்சாறு அருந்திக்கொண்டிருக்கிறார்.இந்த காணொளி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் என்பவர் வெளியிட்டுள்ளார். ஆர்கே நகர் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு 
நாளை(21) நடைபெறவுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>



14 October 2017

ஆசிரியர்களால் நியமிக்கப்பட்ட போலி ஆசிரியை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வேலம்பட்டி மலைக்கிராமத்தில் அரசுப்பள்ளியில் போலி ஆசிரியர் பணிபுரிந்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
வேலம்பட்டி அரசு ஆரம்ப பள்ளிக்கு நியமிக்கப்பட்ட இரண்டு ஆசிரியர்களும் பணிக்கு வருவதில்லை. இருவரும்  தமக்கு பதிலாக கர்நாடகத்தை சேர்ந்த பெண் ஒருவரை ரூ.5,000 சம்பளத்துக்கு 
நியமித்துள்ளனர். 
இரு ஆசியர்களால் நியமிக்கப்பட்டுள்ள கர்நாடக பெண்ணும் பல நாட்கள் பள்ளிக்கு வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல நாட்கள் பள்ளி பூட்டப்பட்டு கிடப்பதால் மலைக்கிராம குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. 
பொருளாதாரத்தால் பின்தங்கியுள்ள வேலம்பட்டியில் போதிய போக்குவரத்து வசதிகளும் இல்லை. உரிய வசதிகள் இல்லாததால் வேலமடபட்டி குழந்தைகள் கல்வி கற்க வேறெங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



01 October 2017

மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த விவசாயிகள் கைது

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி ஜந்தர்மந்தரில் இரண்டாவது கட்டமாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டம் 76 நாட்களை 
தாண்டி நீடிக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாள்தோறும் விதவிதமான போராட்டங்களை தமிழக விவசாயிகள் 
நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 76-வது நாளான நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தற்கொலைக்கு முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


28 September 2017

சாலையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண்..குழந்தை…

கொலையான தாய் அருகே அழுகையுடன் காணப்பட்ட தாயை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்பூர் அருகே கோவை – ஈரோடு சாலையில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அவரது அருகே ஆண் குழந்தை ஒன்று அழுகையுடன் காணப்பட்டது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசாருக்கு 
தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், பெண்ணின் உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அனாதையான ஒன்றரை வயது ஆண் குழந்தையை, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இறந்த பெண்ணும், ஆண் குழந்தையும் யார் என்பது குறித்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரித்து 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


26 September 2017

மாணவி பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு; வாலிபர் கைது

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி, தன் புகைப்படத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போலியான ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பதாக போலீஸில் புகார் அளித்து இருந்தார். புகாரில் அந்த பெண் தான் ஃபேஸ்புக் கணக்கு தொடங்கவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் போலி கணக்கு தொடங்கியவர் சஞ்சய் பட்டேல் என்பது தெரியவந்தது. அவர் கல்லூரியில் பயின்று வருகிறார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் 
அவரை கைது செய்தனர்.
அவர் பெண் பெயரில் போலி கணக்கு தொடங்கி பல பெண்களிடம் பேசி வந்ததுள்ளார். மேலும், புகார் அளித்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலம் பெற்றதாக சஞ்சய் 
தெரிவித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


06 September 2017

ஒரே மேடையில் மணமுடிப்பதாக அழைப்பிதழ் தாலி அக்காக்க! தங்கைக்கா?

அக்கா, தங்கச்சியை கட்டப் போவதாக சொன்ன இளைஞர்- விருதுநகர்: இரு பெண்களையும் ஒரே மேடையில் மணமுடிப்பதாக அழைப்பிதழ் அடிக்கப்பட்டு சமூகவலைதளங்களில் வேகமாக பரவியதால் ஒரு பெண்ணை மட்டும் மணந்தார் அந்த தொழிலாளி. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. 
இவருக்கு, ரேணுகா தேவி மற்றும் காயத்ரி ஆகிய இரு பெண்களுடன் செப்டம்பர் 4-ஆம் திகதி திருமணம் நடைபெற உள்ளதாக, திருமணப் பத்திரிகை அச்சடிக்கப்பட்டிருந்தது. இத் திருமண அழைப்பிதழ் சமூகவலைதளங்களில் மாவட்டம் முழுவதும் 
பரவியது.
இந்த தகவல், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் கிடைத்துள்ளது.ஊர்மக்கள் அறிவுரை இதைத் தொடர்ந்து ராமமூர்த்திக்கு ஊர் பெரியவர்கள் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு
 அறிவுறுத்தினர்.
இருவரை திருமணம் செய்வது சட்டப்படி தவறு என்றும், இதனால் தண்டனை கிடைக்கும் என்றும், திருமண வீட்டாரிடம் போலீஸாரும் எடுத்துக் கூறினர்.பெண்ணின் தந்தை விளக்கம் இந்நிலையில், ரேணுகா தேவியின் தந்தை அழகர்சாமி மற்றும் அவரது உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனர். பின்னர், சமூகநலத் துறை அலுவலர் ராஜத்திடம் மனு அளித்தனர்.
அதில், எனது மகள் ரேணுகா தேவிக்கும், எனது தங்கையின் மகன் ராமமூர்த்திக்கும் செப்டம்பர் 4 ஆம் திகதி திருமணம் நடைபெற உள்ளதாகவும் தவறுதலாக அச்சடிப்பு திருமண அழைப்பிதழில் எனது தம்பி மகள் காயத்ரியின் பெயரையும் தவறுதலாக அச்சடித்து விட்டோம். அவர், உடல் வளர்ச்சி குன்றிய பெண்.
எனவே, செப்டம்பர் 4 -ஆம் திகதி ரேணுகா தேவிக்கும், ராமமூர்த்திக்கும் மட்டுமே திருமணம் நடத்த உள்ளோம் என எழுதிக் கொடுத்தனர்.ஒரு பெண்ணுடன் மட்டும்… ரேணுகா தேவியுடன் மட்டும் திருமணம் செய்வது போல் அழைப்பிதழ் மாற்றி
 அச்சடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று ஊர் பெரியவர்கள் முன்பு பட்டதாரி பெண்ணான ரேணுகாவை ராமமூர்த்தி திருமணம் செய்து கொண்டார். பரபரப்பான இந்த திருமணத்தை சமூக நலத் துறை ஊழியர்களும் கண்காணித்து அவர் ஒரு பெண்ணை மட்டும் மணந்ததை மாவட்ட சமூக நலத் துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


25 August 2017

இறைவனும் இயற்கையும் வேறு வேறு இல்லை என்பதை உணர்த்தும் காளஹஸ்தி விநாயகர் சிலை!

விநாயகர் சதுர்த்தி  என்றாலே, விதவிதமான வடிவங்களில் விநாயகர் நம் தெருக்களில் வலம் வருவார். பொதுவாகவே, தற்போது விற்கப்படும்  விநாயகரின் சிலைகளில் செயற்கை வேதிப்பொருள்களும் ஃபேப்ரிக் நிறங்களும் நிறைந்திருக்கும். 
இப்படியான சிலைகளை கடலில் கரைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்.
சுற்றுச்சூழல் பாதிப்படையாத வண்ணம் காளஹஸ்தி கோயிலில் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  விநாயகர் சதுர்த்திக்கு இயற்கை வண்ணங்களால் ஆன விநாயகர் சிலையை வழிபாட்டுக்கு வைத்துள்ளனர். அந்த சிலைகளை வடிவமைத்தவர் ஜலகண்டேஸ்வரர். ஃபைன் ஆர்ட்  படித்த இவர் பாரம்பரியமாக மண்பாண்டம் செய்யும் குடும்பத்தைச்  சேர்ந்தவர். இந்த விநாயகருக்கு வண்ணம் தீட்டியவர் பண்டைய கால ஓவியங்கள் பற்றிய ஆராய்ச்சிசெய்யும் ஓவியர் ஏகன் ஏகாம்பரம். 

"விநாயகர் சதுர்த்திக்கு  செய்யப்படும் விநாயகர் சிலைகளில் பல வகையான கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன.அவற்றை கடலிலோ ஆற்றிலோ கிணற்றிலோ கரைக்கும்போது அதில் உள்ள கெமிக்கல்கள் தண்ணீருடன் கலந்து நீர் மாசுபாடு ஏற்படுகிறது; நீர் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இப்படியான சூழலை மாற்ற, நாம் சிறுசிறு முயற்சிகள் எடுத்தாலே போதும். அதன் ஆரம்பப் புள்ளியாகத்தான் காளஹஸ்தி கோயிலில் விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பாக செய்யப்பட்ட விநாயகர் சிலை. களிமண்ணால் செய்யப்பட்ட இந்த விநாயகர் சிலைக்கு இயற்கையான மூலிகைகள் கொண்டு வண்ணங்கள் தீட்டப்பட்டன.  வண்ணங்கள் கடுக்காய், கற்றாழை, சுண்ணாம்பு, செந்தூரம், காபி கட்டி, மரக்கோந்து போன்ற இயற்கைப் பொருள்கள் கொண்டு தயாரிக்கப்பட்டன.
இந்த இயற்கை வண்ணங்கள் மிகவும் பளிச்சென்று இருக்கும். இந்த இயற்கை வண்ணங்கள் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும், இந்த சிலைகளை கடலிலோ ஆற்றிலோ கிணற்றிலோ கரைப்பதால் நீர் மாசுபாடும் ஏற்படாது; நீர்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாது. 

இந்த இயற்கை களிமண் விநாயகர் சிலையை உருவமைக்க மூன்று நாள்கள் ஆனது. களிமண்ணின் ஈரத்தன்மை மற்றும் தட்ப வெப்பநிலை போன்றவற்றால் சிலையில் வண்ணம் தீட்டுவது சற்று சவாலாக இருந்தது. இதற்கு அதிக நேரங்கள் செலவிடவேண்டியிருந்தது. ஆனால், ஒரு புதிய முயற்சிக்கு சற்று கால அவகாசமும் வேண்டும்தானே."
 என்று உற்சாகத்துடன் கூறினார்.  

11 August 2017

டாஸ்மாக்கை எதிர்த்து போராட்டம்..கர்ப்பிணிப் பெண் மீது தடியடி!

நெல்லை : மக்கள் வந்து செல்லும் பாதையில் புதிதாக டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர், மேலும்
 கர்ப்பிணிப் பெண் ஒருவரும் இதில் தாக்கப்பட்டுள்ளதால் நெல்லை அருகே பதற்றம் ஏற்பட்டுள்ளது. நெல்லைமாவட்டத்திலுள்ள 
தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு
 எதிராக பெண்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


30 July 2017

டெல்லி உள்பட உள்ள 29 நகரங்கள் நிலநடுக்கங்கள் தாக்கும் அபாயத்தில்!

இந்திய தலைநகர் டெல்லி உள்பட நாட்டில் உள்ள 29 நகரங்கள் நிலநடுக்கங்கள் தாக்கும் அபாயத்தில் இருப்பதாக தேசிய நிலநடுக்க மையம் அதிர்ச்சி தலவலை வெளியிட்டுள்ளது.
நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கும் இமாலய அடுக்கில் டெல்லி மற்றும் 9 மாநிலங்களின் தலைநகரங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அந்த அமைப்பு
 கூறியுள்ளது.
உலக அளவில் நிலநடுக்க அபாயம் அதிகம் கொண்டதாக அறியப்படும் இமாலய அடுக்கில் உள்ள நகரங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லி, பாட்னா (பீகார்),
ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்), கொஹிமா (நாகாலாந்து), புதுச்சேரி, கௌகாத்தி (அசாம்), கேங்டாக் (சிக்கிம்), ஷிம்லா (ஹிமாச்சலப் பிரதேசம்), டேராடூன் (உத்தராகண்ட்), இம்பால் (மணிப்பூர்), சண்டிகர் (பஞ்சாப்) ஆகிய நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளை நிலநடுக்க அபாயம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக வைத்து இந்திய தரநிர்ணய ஆணையம் ஜோன் - 2 முதல் ஜோன் - 5 வரை 4 பகுதிகளாக
 பிரிக்கிறது.
நிலத்துக்கு அடியில் இருக்கும் தட்டுகளின் நகர்வு, கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட சேதங்கள் போன்றவைகளும் பகுதிகளைப் பிரிக்கும் போது கணக்கில்
 கொள்ளப்படும்.
இதில் ஜோன் - 2 என்பது குறைந்த நிலநடுக்க அபாயம் உள்ளதாகக் கருதப்படுகிறது. ஜோன் - 5 என்பது உச்சகட்ட நிலநடுக்க அபாயம் உள்ள பகுதியாக அறியப்படுகிறது.
ஜோன் 4 மற்றும் ஜோன் 5 ஆகியவை கடுமையான அல்லது மிகவும் கடுமையான நிலநடுக்க பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் கொண்ட பகுதியாகவும் வரையறுக்கப்படுகிறது.
மொத்த வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களின் ஒரு சில பகுதிகள் குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதிகள், பீகாரின் வடக்கு பகுதிகள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுக் கூட்டங்கள் போன்றவை ஜோன் - 5 பட்டியலில் 
இடம்பெற்றுள்ளன.
அதேபோல, டெல்லி, ஜம்மு காஷ்மீர் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் ஒருசில பகுதிகள், உத்தரப்பிரதேசத்தின் வடக்கு பகுதி, மேற்கு வங்கம், குஜராத் மற்றும் மகராஷ்டிரா மாநிலத்தின் சிறிய பகுதி போன்றவை ஜோன் 4ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


10 July 2017

நாட்டையே திரும்பி பார்க்க வைத்த கூட்டம்: எதற்காக கூடியது தெரியுமா?

GST வரியை திரும்பப் பெறக் கோரி நேற்று மாலை நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு குஜராத் மாநிலம் சூரத்தில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது.
ஜவுளிக்கு பெயர் போன ஊர் சூரத், ஜவுளி துறையில் 5 முதல் 18.5 சதவிகிதம் வரை GST வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜவுளி துறை பெரிய அளவில் பாதிக்கும் எனக் கூறி GST வரியை திரும்பப் பெறக் கோரி நேற்று சூரத் ல் கண்டன பேரணி நடைபெற்றது.
இதில் எதிர் பார்க்காத வண்ணம் ஜவுளி துறையை சார்ந்தவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் ஜிஎஸ்டி வரிக்கு எதிராக கோஷம் எழுப்பி கலந்து கொண்டதால் கண்ணுக்கு எட்டிய 
தூரம் வரை மனித தலைகளாக காட்சி அளிக்கும் வண்ணம் நாடே திரும்பி பார்க்கும் வகையில் பிரம்மாண்ட கண்டன பேரணியாக இந்த ஆர்ப்பாட்டம் மாறியது.
GST வரி நாட்டு மக்களிடம் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையே இந்த பிரம்மாண்ட கூட்டம் காட்டுவதாக பொருளாதார வல்லூணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


09 May 2017

நாளை ஒரே நேரத்தில் சூரியன் மறைவு– சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி கன்னியாகுமரியில் பார்க்கலாம்

கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு மற்றும் சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சியை நாளை காணலாம்.
சித்ரா பவுர்ணமியையொட்டி நாளை (புதன்கிழமை) கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். 
இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரியிலும், ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலையிலும் மட்டும் தான் காண முடியும். ஆப்பிரிக்கா கண்டத்தில் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல முடியாது. 
சுற்றுலா பயணிகள்      கூடுவார்கள்
கன்னியாகுமரியில் நாளை மாலை 6.32 மணிக்கு மேற்கு பக்கம் உள்ள அரபிக்கடல் பகுதியில் சூரியன் மறையும். அதே நேரத்தில் கிழக்கு பக்கம் உள்ள வங்கக்கடலில் சந்திரன் நெருப்புப்பந்து போல 
மேலே எழும்பும்.
இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் பார்ப்பார்கள். இதற்காக பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் கூடுவார்கள். அவர்களுக்கு வசதியாக நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. 

04 April 2017

இனி டீசல் - பெட்ரோல் தேவையில்லை மாட்டுசாண எரிவாயு பஸ் வந்தாச்சு!

இந்தியாவில் முதல் முறையாக மாட்டு சாணத்தால் தயாரிக்கப்படும் இயற்கை எரிவாயு கொண்டு இயங்கும் பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
ஜெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலையின் காரணமாக டிக்கெட் விலை விண்ணைத் தொட்டுவிடும் அளவுக்கு உயர்ந்துவருகிறது. ஆனால், இதுகுறித்து 
இனி கவலைப்படவே தேவையில்லை. மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை எரிவாயுவில் இயங்கும் பேருந்தை இந்தியாவிலேயே முதல் முறையாக தயாரித்து 
சாதனை படைத்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவைச் சேர்ந்த ‘போனிக்ஸ் இந்தியா ஆய்வு மற்றும் மேம்பாட்டு' நிறுவனம் மாட்டு சானத்தின் மூலம் தயாரிக்கப்படும் ‘பயோ-கியாஸ்' எனப்படும் இயற்கை எரிவாயுவை கொண்டு இயங்கும் பேருந்தை தயாரித்துள்ளது.
இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் இந்த பேருந்தை, 17 கி.மீ-க்கு இயக்க வெறும் ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும் என்பது ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கூட்டிச்செல்கிறது. மற்ற எந்த வாகனங்களைக் காட்டிலும் இந்தியாவிலேயே அதிக மைலேஜ் தரக்கூடிய வாகனமாக இந்த பேருந்து இருக்கப்போகிறது.
இதற்காக இந்த நிறுவனம் ‘அசோக் லேலாண்ட்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, சாண எரிவாயுவில் ஓடுவதற்காக பிரத்யேக பஸ்ஸை தயாரித்தது. இந்த பஸ்ஸின் விலை சுமார் 13 லட்ச ரூபாய் ஆகும்.
கொல்கத்தாவின் உல்டாடங்கா பகுதியில் இருந்து காரியா பகுதி வரை முதல்முறையாக சான எரிவாயுவினால் இந்த பஸ் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
மாட்டின் சாணம், காய்கறி, செடி ஆகிய கழிவுகள் கொண்டு பயோ-கியாஸ் தயாரிக்கப்படுகிறது. இதில், மீதேன் எனப்படும் வாயுவே மூலப்பொருளாக உள்ளது. இது மாசு இல்லாத, மனம் அற்ற வாயுவாகும். இதனை உபயோகப்படுத்தி வாகனங்களை இயக்குவதோடு மின்சாரமும் தயாரிக்கலாம். இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு
 விளைவிக்காத எரிபொருளாகும்.
இது தொடர்பாக இந்நிறுவனத்தின் தலைவர் ஜோதி பிரகாஷ் தாஸ் கூறுகையில், "மேற்குவங்காளத்தின் பிர்பும் மாவட்டத்தில் எங்கள் நிறுவனத்தில் இருந்து சான எரிவாயுவை தயாரிக்கிறோம்.இந்த வாயு ஒரு கிலோ தயாரிக்க எங்களுக்கு ரூ. 20 செலவாகிறது. ஒரு கிலோ எரிவாயு மூலம் 5 கி.மீ. வரை பஸ்ஸை இயக்கலாம். கொல்கத்தாவில் டீசலில் 17 கி.மீ.க்கு பஸ்ஸை இயக்க ரூ.12 செலவாகிறது. நாங்கள் தயாரிக்கும் இந்த எரிவாயு மூலம் பஸ்ஸை 17 கி.மீக்கு இயக்க வெறும் ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும்" என்றார்.
"நாங்கள் தயாரிக்கும் இந்த எரிவாயுவை வர்த்தக ரீதியாக விற்பனை செய்ய 100 விற்பனை நிலையங்கள் அமைக்க அரசிடம் அனுமதி பெற்றுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் 15-க்கும் மேற்பட்ட பேருந்துகளை சான எரிவாயு மூலம் இயக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்"
"15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை சாலையில் ஓட்டத் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வாகனங்களை வைத்து இருக்கும் உரிமையாளர்கள் டீசல் எஞ்சினை மாற்றிவிட்டு பயோ-கியாஸ் மூலம் இயங்கும் எஞ்சினை பொருத்தலாம்" என அவர் மேலும் கூறினார்.
இந்த பேருந்தில் உள்ள எரிபொருள் கலனில் 80 கிலோ பயோ-கியாஸை நிரப்பலாம். இதனைக் கொண்டு 1,600 கிமீ தூரத்தை கடக்கலாம். இயற்கை எரிவாயுவால் இயங்குவதால் அது பேருந்தின் ஆயுளையும் அதிகப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதிக விலை கொண்ட பெட்ரோல், டீசலுக்காக வெளிநாடுகளின் தயவை எதிர்பார்க்காமல், வீணாகும் மாட்டு சாணம் உள்ளிட்ட கழிவுகளை கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த, மிக மலிவான இந்த இயற்கை எரிவாயுவை அதிகம் உற்பத்தி செய்தால் நாட்டுக்கும், மக்களுக்கும் அதிக நன்மை தரக்கூடியதாக இருக்கும் என்பதே அனைவரின் விருப்பம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





25 March 2017

விபத்தில் 4 மாணவிகள் பலி - முதல்வர் ரூ.1 லட்சம் நிதியுதவி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் நடந்த சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், பத்மனாபபுரம் கிராமம், தேசிய நெடுஞ்சாலையில், தக்கலை அருகே புலியூர்குறிச்சி என்னும் இடத்தில் 24.3.2017 அன்று ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி
 மாணவிகளை ஏற்றி தக்கலை நோக்கி வந்து கொண்டிருந்த மகேந்திரா வேனும், நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் மோதிக் கொண்டதில், வேனில் பயணம் செய்த, கல்லூரி 
மாணவிகள் பரைக்கோடு, வைகுண்டபுரத்தைச் சேர்ந்த அர்ஜுணன் என்பவரின் மகள் மஞ்சு, திருவிதாங்கோடு, புங்கரையைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் சிவரஞ்சினி, 
சக்தி நகரைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள் தீபா மற்றும் மண்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மனைவி சங்கீதா ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சாலை விபத்தில் மூன்று மாணவிகள் காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

11 March 2017

சிறுமியை கற்பழித்த பொலிஸ் அதிகாரி: பதற வைக்கும் பின்னணி!

இந்தியாவில் 15 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே நகரில் Kamatipura காவல் நிலையத்தில் 48 வயதான பொலிஸ் அதிகாரி ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவியும் 5 குழந்தைகளும் உள்ளனர்.
இதே பகுதியில் தாய், தந்தையை இழந்த 15 வயது சிறுமி ஒருவரும் வசித்து வந்துள்ளார். சிறுமியை அவரது மூத்த சகோதரி வளர்த்து 
வந்துள்ளார்.
இதை அறிந்த பொலிஸ் அதிகாரி சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். மேலும், சிறுமியை தான் திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாக அவருடைய உறவினர்களிடம் 
தெரிவித்துள்ளார்.
சிறுமி தங்களுக்கு சுமையாக இருப்பதால் அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால், சிறுமியும் அவரது சகோதரியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 2-ம் திகதி வாகனத்தில் வந்த பொலிஸ் அதிகாரி சிறுமியை கட்டாயப்படுத்தி தூக்கிச் சென்றுள்ளார். இதே நகரில் உள்ள Shastripuram என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 
வைத்து பூட்டியுள்ளார்.
இதுமட்டுமில்லாமல், திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காத சிறுமியை அவர் தொடர்ந்து கற்பழித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது தங்கையை தூக்கிச்சென்ற பொலிஸ் அதிகாரி மீது சகோதரி 
புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்ற பொலிசார் சிறுமியை கடத்திய பொலிஸ் அதிகாரியை கைது செய்து விசாரணை செய்தபோது அவர் அனைத்து உண்மைகளையும் தெரிவித்துள்ளார்.
தகவல்களை பெற்ற பொலிசார் உடனடியாக சென்று வீட்டில் அடைக்கப்பட்ட சிறுமியை மீட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை 
நடைபெற்று வருகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

07 March 2017

ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு,வாயில் சிலிக்கான் திணிப்பு ?

27 கேமராக்கள் நிறுத்தப்பட்டன! 22 டாக்டர்கள் பணி நீக்கம். தினம் தினம் நர்சுகள் டார்ச்சர். மற்ற நோயாளிகளை வெளியே விரட்டினார்கள்.
லைவ் டே வாசகர்களே,  எதை அறிய வேண்டும் என்று துடித்தீர்களோ அது வெளிவர ஆரம்பித்துள்ளது.
அதுவும் அதிமுகவினர்கள் மூலமே வெளியாகி உள்ளது. இன்னும் நிறைய வெளிவரும் என்றும்  கூறுகிறார்கள். பொறுமையாக படியுங்கள்:
“செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் என்று மட்டும் சொன்னார்கள்.
அதன் பிறகு, 75 நாள்கள் யாரையும் பார்க்கவிடாமல் தடுத்துவிட்டு, திடீர் என அவர் இதயத் துடிப்பு முடக்கத்தால் மரணம் அடைந்துவிட்டதாகக் கூறினார்கள்.
இது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளோம். ‘பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்’, ‘இட்லி சாப்பிடுகிறார்’ என்று சொல்லிவிட்டு, அவருக்கு ‘செப்டிசீமியா’ என்ற நோய் இருப்பதாக அடுத்து அறிக்கைவிட்டது எதனால்?
சசிகலாவைத் தவிர யாரையும் அந்த அறைக்குள் அனுமதிக்கவில்லை. செப்டிசீமியா இருந்தாலும் ஒரு சிலரையாவது உரிய பாதுகாப்புக் கவசங்களுடன் அறைக்குள் அனுப்பியிருக்கலாம். கவர்னரைக் கூட அனுமதிக்காமல் அப்படி என்ன சிகிச்சை ?
ஜெயலலிதா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது, அப்போலோவில் இருந்த 27 சி.சி.டி.வி கேமராக்கள் செயல் இழக்க வைக்கப் பட்டுள்ளன.
அதன் பின் 22டாக்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். ஏன் அப்படிச் செய்யப்பட்டது? நர்சுகள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். ஒரு கேரளா டாக்டரிடம் ஜெ., “என்னை அடிக்கிறார்கள்” என்று அழுதுள்ளார்? அந்த கேரளா டாக்டர் எங்கே..?
‘‘ஜெயலலிதா மரணம் குறித்து பிரதமர் மோடிக்கு சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதாவைப் பார்க்க வருவதாக இரண்டு முறை மோடி சொன்னார்.
இரண்டு முறையும் தடுத்தார்கள். எனவே, உள்விஷயங்களை மோடியும் அறிவார். மேலும், சசிகலா குடும்பத்தினர் அ.தி.மு.க-வைக் கைப்பற்றத் துடிப்பதை மோடி ரசிக்கவில்லை என்றும்
 கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேச தேர்தல் முடிந்த பிறகு, தமிழக அரசியலில் மோடியின் பார்வை இருக்கும். அதற்கான முன்னோட்டம்தான் சசி சிறை சென்றதும்..பன்னீரை ஜனாதிபதி சந்தித்த
 நிகழ்வும்..!
இரண்டு மாதங்களில் இதற்கான வேலைகள் ஆரம்பம் ஆகும் என்றும் சொல்கிறார்கள்.
‘‘அப்போலோ மருத்துவமனை தந்த ஜெயலலிதாவின் டிஸ்சார்ஜ் அறிக்கையில், ‘அவர் கீழே விழுந்துதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்து 
உள்ளார்கள்.
அப்படியானால், ‘அவர் எங்கே, எப்படி கீழே விழுந்தார்? அவராக விழுந்துவிட்டாரா? அவரை யார் தள்ளிவிட்டது? எதற்காகத் தள்ளிவிட்டார்கள்? அதற்கு என்ன நோக்கம்?’ என்பதை
 விளக்க வேண்டும்.
போயஸ் கார்டனில் இருந்து டி.எஸ்.பி ஒருவர்தான் அப்போலோவின் 1066 என்ற ஆம்புலன்ஸ் எண்ணுக்கு போன் செய்து ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளார்.
அந்த ஆம்புலன்ஸ், போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழைந்ததும், ஜெயலலிதா அதில் ஏற்றப்பட்டதுமான காட்சிகள் கொண்ட சி.சி.டி.வி 
பதிவுகள் எங்கே?
அப்போலோ மருத்துவமனையில் இருந்து சென்ற ஆம்புலன்ஸில்தான் ஜெயலலிதா அழைத்துவரப்பட்டார் என்றால், அவருடன் பயணம் செய்தவர்கள் யார் ?
ஆம்புலன்ஸில் செல்லும் அளவுக்கு சீரியஸ் என்றால், ஆம்புலன்ஸ் உடனே புறப்படாமல் தாமதம் செய்யப்பட்டது ஏன்?
போயஸ் கார்டனுக்கு ஆம்புலன்ஸ் சென்ற அடுத்த சில மணி நேரத்தில் அப்போலோ மருத்துவமனையின் வெளியே, உள்ளே, இரண்டாம் தளம் ஆகியவற்றில் இருந்த 27 சி.சி.டி.வி கேமராக்கள் செயல் இழக்க வைக்கப்பட்டுள்ளன.
அப்போலோவில் கேமராக்கள் அகற்றப்பட்டாலும், போயஸ் கார்டன் உள்ளேயும் வெளியேயும் கேமராக்கள் உள்ளன. அந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஏன் இதுவரை  வெளியிடவில்லை?
ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கவனித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சாந்தாராம், 2016 மே மாதமே ‘உங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் சரியில்லாமல் இருப்பதால் பக்கவாதம் வரப்போகிறது’ என்று எச்சரித்துள்ளார்.
அதன்பிறகு அவரை போயஸ் கார்டன் பக்கமே அனுமதிக்காத மர்மம் என்ன?  2016-ம் ஆண்டு மே மாதம் ஆரம்பித்து, ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செப்டம்பர் மாதம் வரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நிறைய மர்மங்கள் புதைந்தது கிடக்கின்றன.
இந்தக் காலகட்டத்தில்தான் அவரது உடலில் சர்க்கரை அளவு உச்சபட்ச நிலையில் இருந்துள்ளது. இதற்கு என்ன சிகிச்சைகள் அளித்தார்கள்? கால் விரல்களை யாரை வைத்து அகற்றினார்கள்.
அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட உணவுகள் சோதனை செய்யப்பட்டு தரப்பட்டதா?
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த அந்த 75 நாள்களில், அவரைக் காண வந்தவர்கள் பற்றிய விவரங்களை காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் எடுத்துச் சென்றுவிட்டதாக சொல்கிறார்கள்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, அவரின் உடல் எடை 47 கிலோ குறைந்துள்ளது.  பற்கள்,  கால்கள்
 அகற்றப்பட்டுள்ளது.?
உடம்பு வற்றி துரும்பாக மாறிவிட்ட ஜெ., இறந்த பின் முகம் உப்பி காணப் பட்டார். வாயில் சிலிகான் வைத்து தாயகப்பட்டது உண்மையா ?
அதற்குக் காரணம் என்ன? யாரை வைத்து,யாரிடம் கையெழுத்து பெற்று அகற்றினார்கள்..? பற்கள் உடை பட்டிருந்தன.
வெளிநாட்டு மருத்துவர்கள் ஜெயலலிதாவைப் பார்க்க வந்தபோது, சசிகலா மட்டுமே உடன் இருந்துள்ளார். தமிழ் மட்டுமே தெரிந்த சசிகலா, தமிழே தெரியாத வெளிநாட்டு மருத்துவர்களோடு எவ்வாறு
 உரையாடினார்?
வாஸ்து சீனிவாசன் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் அதிரடி மாற்றங்களைச் செய்து, அந்த அறையை இருட்டாக 
ஆக்கியது ஏன்?
ஜெயலலிதாவுக்கு மருந்து கொடுக்கக்கூட, நல்ல நேரம் பார்த்துக் கொடு்த்த தவற்றைச் செய்தது ஏன்?
எய்ம்ஸ் மருத்துவக்குழு அப்போலோ வந்து, ஜெயலலிதாவின் நிலையைப் பார்த்துவிட்டு டெல்லிக்குக் கிளம்பியபோது அடித்த கமென்ட்டை இப்போது சிலர் சொல்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை ‘It is a secret service, not a medical service’ என்று அந்த மருத்துவர்கள் 
சொன்னார்களாம்.
2011-ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, ஜெயலலிதாவுக்கு உதவியாக ஒரு நர்ஸை அனுப்பியுள்ளார். ஆனால், அவர் சில மாதங்களில் இங்கிருந்து அனுப்பப்பட்டார்.
அப்போதே மோடி, “உங்களுக்கு அளிக்கப்படும் உணவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள்” என்று ஜெயலலிதாவிடம் அறிவுறுத்தி உள்ளார். ‘‘அதையும் இந்த சம்பவங்களையும் முடிச்சுப் போட்டுப் பாருங்கள்’’ என்கிறார்கள் ஒரு தரப்பினர்.
அப்போலோ மருத்துவமனை, ‘ஜெயலலிதாவின் மருத்துவச் செலவு ஐந்து கோடி ரூபாய்’ என்று சொல்லியிருந்தது.
ஆனால், அவருடைய சிகிச்சை செலவு 7.8 கோடி ரூபாய் என்கிறார்கள். அதில் உணவுச் செலவு மட்டும் 30 லட்ச ரூபாய் என்று கணக்குக் 
காட்டியுள்ளார்கள்.
‘‘30 லட்சம் ரூபாய்க்கு உணவுச்செலவு என்றால் தினமும் யார் யாரெல்லாம் அங்கு இருந்தார்களோ, அவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும்’’ என்று ஜனாதிபதியிடம் சொல்லப்பட்டிருக்கிறது.
‘சி.பி.ஐ வரும்போது, சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் சிவகுமாரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்’
கடந்த சில ஆண்டுகளாகவே ஜெயலலிதாவுடன் இருந்த சிவகுமார், சமீப காலமாக எங்கும் தலைகாட்டவில்லை. இதுவும் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.
மருத்துவமனையில் சசிகலாவின் நிழலாக இருந்தவர், அவருடைய உதவியாளர் கார்த்திகேயன். அவருக்கும் அனைத்தும் தெரியும்’’ என்கிறார்கள் இவர்கள்.
‘சி.பி.ஐ., எந்த நேரத்திலும் வந்து வளைக்கலாம்’ என்று சொல்கின்றன டெல்லி தகவல்கள். விரைவில் மன்னார்குடி கும்பல் மொத்ததும் உள்ளே போகும் என்கிறார்கள் பன்னீர் தரப்பினர்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



06 March 2017

பெண் நோயாளி ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர் கூறியதால் உயிருடன் எரிப்பு !

இந்தியாவில் பெண் நோயாளி ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர் தவறுதலாக கூறியதை தொடர்ந்து அப்பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே நகரில் Devesh Chaudhary(23) மற்றும் Rachna Sisodia(21) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் மனைவிக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை கணவர் மருத்துவமனையில்
 அனுமதித்துள்ளார்.
ஆனால், அவரது மனைவி அபாயக் கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி பெண் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக 
தெரிவித்துள்ளனர்.
நண்பர்களுடன் மனைவியின் உடலை எடுத்துச் சென்ற கணவர் மனைவியின் பெற்றோருக்கு கூட தகவல் தெரிவிக்கமால் சவத்தில் வைத்து எரிக்க ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இத்தகவல் அறிந்த மனைவியின் பெற்றோர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்து சுடுகாட்டிற்கு விரைந்துள்ளனர்.
ஆனால், இவர்கள் செல்வதற்குள் பெண்ணிற்கு தீயிட்டுள்ளனர். சவத்தில் எரிந்துக்கொண்டு இருந்த பெண்ணின் உடலை பொலிசார் இழுத்து வெளியேற்றியுள்ளனர்.
இருப்பினும், பெண்ணின் உடல் சுமார் 70 சதவிகிதம் வரை தீயில் எரிந்து உயிரிழந்துள்ளது.
எனினும், சந்தேகம் அடைந்த பொலிசார் எரிந்த சடலத்தை தடவியல் துறை மருத்துவர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
சடலத்தை மருத்துவர்கள் சோதனை செய்தபோது, நுரையீரல் மற்றும் மூச்சுக் குழாயில் சாம்பல் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
ஒருவரை உயிருடன் எரிக்கும்போது மட்டுமே சாம்பல் மூச்சுக் குழாய் வழியாக உடலுக்குள் செல்லும்.
எனவே, பெண்ணை எரிக்கும்போது அவர் சுவாசித்துக்கொண்டு இருந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்த கணவர் தற்போது தலைமறைவாக உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

21 February 2017

ஏழு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த முதியவர்!

ஆந்திரமாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மட்ட வானி தெருகு பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சனேயலு (வயது 60).

இவருக்கு இளம்வயதில் திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

ஆஞ்சனேயலு மனைவியை சித்ரவதை செய்ததால் அவர் கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

கூடவே 2 குழந்தைகளையும் அழைத்து சென்று விட்டார்.

அதன் பிறகு ஆஞ்ச னேயலு தனக்கு 6 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறி ராவி பாடு, தோடூர், அமலா புரம், ராஜாபடமரா, சகம்தெரு ஆகிய 5 பெண்களை தனித்தனியாக ஏமாற்றி திருமணம் செய்து கொண் டார்.

திருமண வாழ்க்கை கசந்ததும் அவர்களை விரட்டி விட்டார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்காய்கடம் பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணை ஆஞ்சனேயலு 7-வதாக திருமணம் செய்தார்.

தனக்கு 6 ஏக்கர் நிலம் இருப்பதாகவும் தனது வயதான தாயாரை கவனிக்க வேண்டும் என்று ஏமாற்றியும் திருமணம் செய்தார்.

இந்த நிலையில் கர்ப்ப மான மனைவி லட்சுமியை பிரசவத்துக்காக ஆஞ்ச னேயலு தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

லட்சு மிக்கு ஆண் குழந்தை பிறந் தது. குழந்தை பிறந்த பிறகு ஆஞ்சனேயலு மனைவி லட்சுமியை அழைத்து வரவில்லை.

இதனால் லட்சுமி விசாரித்த போது ஆஞ்சனேயலு ஏற்கனவே 6 முறை திருமணம் செய்த தாகவும் தான் 7-வது மனைவி என்றும் தெரியவந்தது.

இதையடுத்து லட்சுமி குழந்தையுடன் ஆஞ்சனேயலு வீட்டுக்கு சென்றார். அப் போது ஆஞ்சனேயலு தலை மறை வாக இருந்தார்.

அவரது வயதான தாய், லட்சுமியை வீட்டுக்குள் விட மறுத்தார்.

இதனால் லட்சுமி சுயதொழில் குழு பெண் களின்உதவியை நாடினார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து லட்சுமி கணவன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு மகளிர் சுயஉதவி குழுவினர் வீட்டு கதவை உடைத்து லட்சுமியையும், குழந்தையையும் வீட்டுக்குள்
 அனுப்பி வைத்தனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


20 February 2017

கொடூரமாக நகைகளுக்காக கொலைசெய்யப்பட்ட 3 வயது குழந்தை

தமிழகத்தில் எண்ணூர், சுனாமி குடியிருப்பு வசித்து வருபவர் பழனியின் 3 வயது மகள் ரித்திகா நேற்று முன்தினம் வீட்டு அருகில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணமல் போயுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை திருவொற்றியூர், மணலி வீதியில் குப்பை போடும் இடத்தில் சிறுமி வாயில் துணி திணிக்கப்பட்டிருந்த நிலையில் ரித்திகா கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தாள்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறித்த சம்பவம் பற்றி தகவறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் குழந்தை ரித்திகாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றபின் அப்பிரதேசத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ரித்திகா எதிர்வீட்டில் உள்ள ரேவதி என்ற பெண்ணின் வீட்டில் விளையாடியது தெரியவந்தது. எனவே ரேவதியை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ரேவதி தனது கள்ளக்காதலன் ராஜேசுடன் சேர்ந்து சிறுமி ரித்திகாவை கொலைசெய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ரேவதி கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளவர். அவருக்கு 3 வயதில் கமலி என்கிற பெண் குழந்தையுள்ளது.இந்த நிலையில் ரேவதிக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞனுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் அடிக்கடி ரேவதியின் வீட்டுக்கு வந்து செல்வார்.சிறுமி ரித்திகாவும் ரேவதியின் குழந்தை கமலியுடன் விளையாடுவதற்காக ரேவதியின் வீட்டுக்கு அடிக்கடி செல்வதாக அறியப்பட்டுள்ளது.
வழமைப்போல் நேற்று முன்தினம் மாலையிலும் ரித்திகா ரேவதியின் வீட்டுக்கு சென்றாள். அப்போது ரித்திகா அணிந்திருந்த நகைகள் மீது ஆசை கொண்ட ரேவதி குழந்தை ரித்திகாவின் நகைகளை தனது வீட்டில் வைத்தே அவர் கழற்றி எடுத்ததாகவும், இந்த நேரத்தில் ரேவதியின் கள்ளக்காதலன் ராஜேசும் மதுபோதை குழந்தை ரித்திகாவிடம் தகாதமுறையில் நடந்ததாகவும் ரேவதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது தான் சிறுமி ரித்திகா பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவளது உடலை வீட்டிலேயே ராஜேசும் ரேவதியும் மறைத்து வைத்து விட்டு அன்று இரவு குப்பை வீசும் இடத்தில் வீசியதை பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ராஜேசையும் ரேவதியையும் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், ரித்திகா அணிந்து இருந்த நகைகளை எண்ணூர் ராம கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு அடகு கடையில் இருவரும் 2200 ரூபாவிற்கு அடகு வைத்தமை தெரியவந்தது. அந்த நகைகளை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ரேவதியும் ,ராஜேசும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நகைக்காக 3 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் எண்ணூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லியை அடுத்த மகாநந்தபுரத்தில் 7 வயது சிறுமி ஹாசினி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்கும் முன்னரே சிறுமி ரித்திகா கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள்
 தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




15 February 2017

நீதிமன்றத்திற்கு சசிகலா உடைகள் கொண்டு வந்த கார் மீது தாக்குதல்!

 சசிகலாவின்  உடைகள் கொண்டு வந்த கார் மீது   பெங்களூர் நீதி மன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் கூட்டத்தினர் மீது தடியடி நடத்தினர்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையையும், ரூ.10 கோடி அபராதத்தையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 3 பேரும் பெங்களூர் விசாரணை நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதிகள்
 உத்தர விட்டனர். 
இன்று சசிகலா தரப்பு வக்கீல்கள் உடல் நிலையை காரணம் காட்டி சசிகலா சரண் அடைய 2 வார கால அவகாசம் வாய்மொழியாக கேட்டனர். ஆனால் இதற்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்தது. உடனடியாக அவர் பெங்களூர் கோர்ட்டில் சரணடைய உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து சசிகலா இன்று காலை 11. 40 மணிக்கு சசிகலா  போயஸ் கார்டனில் இருந்து மெரினா கடற்கரை சென்றார். அங்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சமாதியில் மரியாதை 
செலுத்தினார்.  அப்போது ஜெயலலிதா சமாதியில் ஓங்கி அடித்து, தனதுவாய்க்குள் முணு முணுத்தவாறு சபதம் செய்தார். சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என சசிகலா சபதம் ஏற்றார் என முன்னாள் அமைச்சர் கோகுல 
இந்திரா கூறினார்.
பின்னர் சசிகலா ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜிஆர். வீட்டிற்கு சென்றார். அங்கு ராமாவரம் இல்லத்தில் எம்ஜிஆர் படம் முன்பு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்து  கார் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் தண்டனை பெற்ற இளவரசியும் சென்றார். 
தொடர்ந்து பயணத்தை ஆரம்பித்த சசிகலா, இளவரசி மாலை 4.45 மணியளவில் ஒசூரை சென்றடைந்தது.
நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தனர். மாலை 5.15 மணியளவில் கார் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை பகுதிக்கு வந்து சேர்ந்தார்.  20 கார்கள் இவர்களது கார்களைப் பின் தொடர்ந்து வந்தன. இதில் சசிகலா உடைகள் கொண்டு வந்த கார் உள்பட தமிழக் பதிவு எண்கள் கொண்ட 5 கார்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து  போலீசார் கூட்டத்தினர் மீது 
தடியடி நடத்தினர்.
பெங்களூர் நகர 48-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி அஸ்வத் நாராயணா முன்னிலையில் சசிகலா, இளவரசி,ஆகிய 2 பேரும் சரண் அடைந்தனர். சுதாகர்ன் மட்டும் சரண் அடைய வில்லை. அவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர சரணடையவில்லை என அவர் சார்பில் மனு கொடுக்கபட்டு உள்லது. 
இதனிடையே மாலை 5 மணியளவில் சசிகலாவின் கணவர் நடராஜன் பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு வந்தார்.பார்ச்சூனர் காரில் அவருடன் நான்கு ஆதரவாளர்களும் வந்திருந்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் !

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில், சசிகலா, அவரது அண்ணி இளவரசி ஆகிய இருவரும் அடைக்கபட்டனர்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையையும், ரூ.10 கோடி அபராதத்தையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 3 பேரும் பெங்களூர் விசாரணை நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் 
உத்தர விட்டனர். 
இன்று சசிகலா தரப்பு வக்கீல்கள் உடல் நிலையை காரணம் காட்டி சசிகலா சரண் அடைய 2 வார கால அவகாசம் வாய்மொழியாக கேட்டனர். ஆனால் இதற்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்தது. உடனடியாக அவர் பெங்களூர் கோர்ட்டில் சரணடைய உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து, நண்பகல் கார் மூலம் சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களுரூவுக்கு புறப்பட்டுச்சென்றனர். மாலை 4.45 மணியளவில் இவர்கள் சென்ற கார் ஓசூர் சென்றடைந்தது. மாலை 5.15 மணியளவில் கார் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை பகுதிக்கு வந்து சேர்ந்தது. 20 கார்கள் இவர்களது கார்களைப் பின் தொடர்ந்து வந்தன. 
 பின்னர், பெங்களூர் நகர 48-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி அஸ்வத் நாராயணா முன்னிலையில் சசிகலா, இளவரசி,ஆகிய 2 பேரும் சரண் அடைந்தனர். இதையடுத்து, பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் அடைக்கப்பட்டனர். சசிகலாவுக்கு கைதி எண்  10711 -ம், இளவரசிக்கு  10712-ம் கைதி எண்  
 கொடுக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



20 January 2017

வரலாறு படைக்கும் நம் தமிழக இளைஞர்கள் கண் கொள்ளா காட்சி மெரினா – காணொளி

மெரினாவில் தற்போது லட்சக்கணக்கான மாணவர்கள், செல்போன் ஒளியை ஏந்தி தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இது போன்ற ஒரு அற்புதமான காட்சியை இதுவரை எந்த வரலாறு கண்டிருக்க வாய்ப்பில்லை. நம் தமிழக இளைஞர்கள் புது வரலாறு படைத்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. கண்கொள்ளா காட்சி!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

02 January 2017

கஞ்சப்பள்ளியில் ஆஞ்சநேயரின் அபிஷேகம் கண்டு களித்த மயில்!!

கோவையில் கஞ்சப்பள்ளி கிராமத்தில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து கொண்டு இருந்தபோது, அங்கு பறந்து வந்த மயில் அபிஷேகத்தை முழுவதும் பார்த்துக் கொண்டு இருந்தது பக்தர்களிடையே பரவசத்தை 
ஏற்படுத்தியுள்ளது. 
கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள கஞ்சப்பள்ளி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த வீர ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார்.கடந்த டிசம்பர் 28ஆம் தேதி அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது.
வீர ஆஞ்சநேயர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். முன்னதாக வீர ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பறந்து வந்த மயில் ஒன்று ஒவ்வொரு திரவியங்களால் 
வீர ஆஞ்சநேயருக்கு அபிஷேக பூஜைகள் நடைபெறுவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தது அங்கு கூடியிருந்த பக்தர்களை பரவசமடையச் செய்தது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர
முருகனுக்கு மயில் வாகனம் என்றபோதும், இங்கு அமில் ஆஞ்சநேயருக்கு நடந்த அபிஷேக பூஜைகளைப் பார்த்தது ஆச்சரியத்தை
 ஏற்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>