Search This Blog n

02 January 2017

கஞ்சப்பள்ளியில் ஆஞ்சநேயரின் அபிஷேகம் கண்டு களித்த மயில்!!

கோவையில் கஞ்சப்பள்ளி கிராமத்தில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து கொண்டு இருந்தபோது, அங்கு பறந்து வந்த மயில் அபிஷேகத்தை முழுவதும் பார்த்துக் கொண்டு இருந்தது பக்தர்களிடையே பரவசத்தை 
ஏற்படுத்தியுள்ளது. 
கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள கஞ்சப்பள்ளி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த வீர ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார்.கடந்த டிசம்பர் 28ஆம் தேதி அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது.
வீர ஆஞ்சநேயர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். முன்னதாக வீர ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பறந்து வந்த மயில் ஒன்று ஒவ்வொரு திரவியங்களால் 
வீர ஆஞ்சநேயருக்கு அபிஷேக பூஜைகள் நடைபெறுவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தது அங்கு கூடியிருந்த பக்தர்களை பரவசமடையச் செய்தது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர
முருகனுக்கு மயில் வாகனம் என்றபோதும், இங்கு அமில் ஆஞ்சநேயருக்கு நடந்த அபிஷேக பூஜைகளைப் பார்த்தது ஆச்சரியத்தை
 ஏற்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment