Search This Blog n

06 January 2013

250 ஆண்டுகள் பழமைவாய்ந்த தனியார் வங்கி மூடல்

வரி ஏய்ப்புக்கு துணை போனதாக எழுந்த புகாரின்பேரில், ஸ்விட்சர்லாந்தின் வெக்லின் அண்ட் கோ(Wegelin & Co) என்ற தனியார் வங்கி மூடப்படுகிறது. 250 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த வங்கி, ரகசிய வங்கிக் கணக்குகள் மூலம் அமெரிக்கர்களின் கறுப்புப் பணத்தை சேமித்து வைப்பதற்கு உதவியதாக மான்ஹாட்டன் (Manhattan) நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 7,000 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ய உதவியதாக வங்கி நிர்வாகம் ஒப்புக் கொண்டது.
எனவே தமது கிளைகள் அனைத்தையும் நிரந்தரமாக மூடிவிடுவதாக வெக்லின் அண்ட் கோ (Wegelin & Co) வங்கி அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:

Post a Comment