This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

26 June 2020

தாஜ்மஹால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடுவதற்கு தீர்மாம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தாஜ்மஹாலை பார்வையிடுவதற்கு அதிகளவானவர்கள் வந்து செல்வது வழக்கமாகும்.
இதனால் அதிகளவானவர்கள் ஒன்று கூடும் போது நோய் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மார்ச் மாத இறுதிவரை தாஜ்மஹாலை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



25 June 2020

பிகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் மின்னல் தாக்கி 107 பேர் பலி

இந்தியா – பிகாரில் இன்று (25) இரவு 7 மணி வரையிலான 12 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் உத்தர பிரதேசத்தில் 24 பேர் 
உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்படும் என்று பிகார் அரசு 
அறிவிவித்துள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


09 June 2020

முசாபர்பூரில் இறந்து கிடந்த தாயை தட்டி எழுப்ப முயன்ற குழந்தை

  ஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து வசதி கிடைக்காத நிலையில், பலர் நடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. இவ்வாறு செல்லும்போது
 உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவமும் தொடர்ந்து அரங்கேறுகின்றது.இந்தநிலையில் கடந்த 27-ம் திகதி குஜராத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் பீகார் மாநிலம் முசாபர்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த ஒரு பெண் இறந்துவிட்டார். சரியாக 
சாப்பிடாததால் ரெயிலில் ஏறும்போதே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பசி, உடல் வெப்பம் அதிகரிப்பு மற்றும் நீர்ச்சத்து குறைந்த நிலையில், ரெயில் முசாபர்பூரை நெருங்கும்போது அவர் இறந்துள்ளார்.அவரது உடல் ரெயில்நிலைய
 பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தாய் இறந்ததை அறியாத அவரது பச்சிளம் குழந்தை, தாயை எழுப்ப முயற்சித்தது. தாய் மீது போர்த்தப்பட்டிருந்த துணியை இழுத்தது. அந்த குழந்தையை மூத்த குழந்தை தடுத்து வெளியே இழுத்தது. இதைப் பார்த்த
 அனைவரும் கண்ணீர் விட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.பசியினாலும், தாகத்தினாலும் அந்தப் பெண் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். தாயின் மரணத்தை கூட அறிய முடியாத குழந்தையின் நிலையை நினைத்து 
மக்கள் வருத்தமடைந்தனர்.இந்தக் காட்சிகளை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் குழந்தைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார். அவர் நடத்தும் மீர் அறக்கட்டளை மூலம் இந்த உதவிகள் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மீர் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட டுவிட்டர் 
பதிவில்:-
பீகார் ரெயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை எங்கள் அறக்கட்டளையை வந்து சேர உதவிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி. அந்தக் குழந்தை, இறந்து கிடந்த தனது தாயை எழுப்ப முயன்ற காட்சிகள் மனதை கலங்க வைத்தது. தற்போது தனது தாத்தாவின் அரவணைப்பில் இருக்கும் அந்த குழந்தைக்கு உதவ நாங்கள் முன்வந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளது.மேலும், தங்களை 
குழந்தையுடன் தொடர்பில் வைக்க உதவியவர்களுக்கு நடிகர் ஷாருக்கானும் நன்றி தெரிவித்துள்ளார். தாயை இழந்த 
இந்த துரதிருஷ்டமான சூழலில், குழந்தைக்கு மன வலிமை கிடைக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம் எனவும் அவர் கூறியுள்ளார். நமது அன்பைபும், ஆதரவையும் அந்தக் குழந்தைக்கு வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார். தாயை பிரிந்து வாடும் குழந்தைக்கு ஆதரவுக்கரம் நீட்டிய ஷாருக்கானை பலரும் பாராட்டி 
வருகின்றனர்.


இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

02 June 2020

கோடிக்கணக்கில் சொத்துச் சேர்த்த தமிழருக்கு சொந்த ஊரில் காத்திருந்த அதிர்ச்சி

வெளிநாட்டில் 38 ஆண்டுகள் பணி செய்து கோடிக்கணக்கில் சொத்துச் சேர்ந்த நபர் ஊருக்கு திரும்பியதும் குடும்பத்தினரால் வீட்டை விட்டு துரத்தப்பட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு குமரி என்ற 
மனைவியும், இரண்டும் மகன்களும் 
மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர்.ஐக்கிய 
அரபு அமீரகத்தில் எலக்ட்ரிகல் கேபிள் துறையில் வேலை செய்த நாகராஜன், மாடி வீடு வணிக வளாகம் உள்ளிட்ட 2 கோடி மதிப்பிலான சொத்துகளைச் சேர்த்து வைத்துள்ளார்.மகன்கள் இருவரும் வெளிநாட்டு வேலையில் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.38 ஆண்டுகளாக குடும்பத்திற்காக
 வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த நாகராஜன் தற்போது முதுமை காரணமாகச் சொந்த வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.ஊருக்கு வந்த அவரிடம் சொத்துக்களை தங்கள் பெயரில் மாற்றித்தர மனைவியும், குடும்பத்தினரும் வற்புறுத்தியதாகத் தெரிகிறது
.ஆனால், சொத்துக்களை 
எழுதித்தர நாகராஜன் மறுத்துள்ளார், இதையடுத்து சொத்துக்களை அபகரித்து கொண்டு அவரை வீட்டிலிருந்து விரட்டி அடித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.சொந்த ஊரில் நிம்மதியாக வாழலாம் என நினைத்த நாகராஜனுக்கு 
இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதனால் அவர் சாலையில் சுற்றி திரிகிறார்.இது குறித்து நாகராஜன் கூறுகையில், நான் நிம்மதியாக வாழ வேண்டிய நேரத்தில் என் குடும்பத்தார் என்னை அடித்து துரத்தி சாலையில் பிச்சையெடுக்க வைத்துவிட்டனர்.நானும் எவ்வளவு தான் அவர்களை எதிர்த்து 
போராட முடியும் என அழுது கொண்டே கூறியுள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மறுத்துள்ளனர் 
என தெரியவந்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>