This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

29 April 2013

பெண் என்பதால் என்னை தேர்தல் ஆணையம்

:
தேர்தலில் போட்டியிடும் தனது கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதின் கை பையை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாயாவதியின் கை பையில் இருந்த பர்சில் ரூ. 1 லட்சம் இருந்தது. இந்தப் பணத்துக்கு கணக்குக் கேட்டு அதிகாரிகள் கேள்வி கேட்டதையடுத்து பரபரப்பு மேலும் அதிகமானது.
கர்நாடகத்தில் வரும் மே 5ம் திகதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 180 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக மாயாவதி நேற்று குல்பர்கா மாவட்டம் வந்தார். அங்குள்ள ஜேவர்கி நகரில் அமைக்கப்பட்ட ஹெலிபேட்டில் மாயாவதி பயணம் செய்த ஹெலிகாப்டர் தரை இறங்கியது.
ஹெலிகாப்டரை விட்டு மாயாவதி இறங்கியதும் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட பறக்கும் படையினர் ஹெலிகாப்டரை தீவிரமாக சோதனையிட்டனர். பின்னர், மாயாவதியின் கையில் இருந்த கைப் பையை சோதனையிட்ட போது, உள்ளே ரூ.1 லட்சம் இருந்தது.
இந்தப் பணம் எதுக்கு வைத்துள்ளீர்கள், இவ்வளவு பணத்தை கொண்டு செல்லக் கூடாது என்று அவர்கள் கூறவே, இது என்னுடன் வந்துள்ள கட்சிக்காரர்களுக்கு சொந்தமான பணம். ஒரு நபர் ரூ.50,000 வரை பணம் வைத்திருக்க அனுமதி உள்ளது என்று மாயாவதி விளக்கியதையடுத்து அந்த அதிகாரிகள் அவரை அனுமதித்தனர்.
இதனையடுத்து பிரசார மேடை அருகே மாயாவதி காரை விட்டு இறங்கியதும் அவரது காரையும் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். இதனால் மாயாவதி கடும் எரிச்சலடைந்தார். பின்னர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மாயாவதி என்னிடம் இன்று சோதனை நடத்தியது போல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கர்நாடகத்தில் பிரசாரத்திற்காக வந்தபோது பறக்கும் படையினர் ஏன் சோதனை நடத்தவில்லை?. நான் தலித் பெண் என்பதற்காக என்னிடம் மட்டும் சோதனை நடத்துகிறார்கள் என ஆவேசமாக பேசினார்.
 

அவுஸ்திரேலிய வர்ணனையாளர்கள் தான் காரணம்: ஜெசிந்தா


இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் மனைவி கேதே மிடில்டன் கடந்த வருடம் லண்டன் கிங் எட்வர்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அப்போது அங்கு தொடர்பு கொண்ட ஆஸ்திரேலிய வானொலியின் நகைச்சுவை வர்ணனையாளர்கள், இளவரசியின் குடும்ப உறுப்பினர்கள் போல் பேசி, இந்தியாவைச் சேர்ந்த நர்ஸ் ஜெசிந்தாவிடம் (46) இருந்து இளவரசி தொடர்பான மருத்துவக் குறிப்புகளை பெற்றனர்.
பின்னர் அந்த செய்தியை ஆஸ்திரேலிய வானொலியில் ஒளிபரப்பினர். இச்செய்தி நர்ஸ் ஜெசிந்தாவிற்கு தெரியவர அரச குடும்பத்தின் செய்தியை வெளியிட்டுவிட்டோமே என்று மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது அவர் எழுதிய தற்கொலை குறிப்பு ஒன்றில் ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களை கண்டித்துள்ளார். அவரது தற்கொலைக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தயவு செய்து எனது தவறுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.
நான் உண்மையில் வருந்துகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவிற்காக நன்றிகள். இளவரசியின் ரகசியங்கள் பற்றி ஒளிபரப்பிய மெல் கிரெய்க், மைக்கேல் கிருஸ்டியன் ஆகியோர்களின் செயல்களே இதற்கு பொறுப்பு என நான் உறுதியாக நம்புகிறேன் என்னை மன்னித்துவிடுங்கள் என தற்கொலை குறிப்பில் எழுதியுள்ளார்
 

28 April 2013

பொலிசாருக்கும்-மக்களுக்கும் இடையே பயங்கர?


வங்கதேச தலைநகர் டாக்காவில் சமீபத்தில் நடைபெற்ற கட்டிட இடிபாடு விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இவ்விபத்து தொடர்பாக பொது மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை கலைப்பதற்காக தடியடி நடத்திய போது பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பொலிசாருக்கும்-மக்களுக்கும் இடையே பயங்கர 
இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
 

27 April 2013

இரண்டாவது திருமணம் தேவையா?: நகையை ???

 மனைவியை இழந்த 60 வயதான முதியவர் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்ய விளம்பரம் செய்துள்ளார். அவரை கூப்பிட்டு  அடித்து நகையை பறித்துள்ளது ஒரு கும்பல்.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் தங்கரத்தினம் ஓய்வு பெற்ற பேராசிரியர். இவரது மனைவி சில ஆண்டு முன்பு காலமானார்.
பிள்ளைகள் இல்லை, கவனிக்க யாரும் இல்லாமல் அவதிப்பட்ட தங்கரத்தினம், நாளிதழ் ஒன்றில் 2வது திருமணம் செய்ய பெண் தேவை என விளம்பரம் கொடுத்தார். இதை பார்த்து, ஒரு இளம்பெண் தங்கரத்தினத்தை தொடர்பு கொண்டு எனக்கு 25 வயது ஆகிறது, உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன், அம்பத்தூருக்கு வாருங்கள் என கூறியுள்ளார்.
தங்கரத்தினம் அம்பத்தூர் வந்தார். அந்த பெண் அவரை ஒரு ஆட்டோவில் கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அவரும், அவரது கணவன் மற்றும் 2 பேரும் சேர்ந்து தங்கரத்தினத்தை இந்த வயதில் உனக்கு 2வது திருமணம் கேட்கிறதா என கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்து கொண்டு யாரிடமாவது இதை தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் என கூறி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தங்கரத்தினம் புகார் செய்தார்.
அம்பத்தூர் பொலிசார் விசாரித்தனர், தங்கரத்தினத்தை தாக்கி நகையை பறித்தது அயனாவரத்தை சேர்ந்த நிக்கோலா, அவரது கணவன் வில்லியம், ரேகா, முத்துக்குமார் ஆகியோர் என தெரியவந்தது. 4 பேரையும் பொலிசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர், 5 சவரன் நகை மீட்கப்பட்டது.
 

வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு திடீர் நிறுத்தம்,,,

டாக்டர் ராமதாஸ் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு திடீரென திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாமக தலைமை நிலையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அளிக்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பு திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.
மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடந்து கொண்டிருந்த போதே எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
ராமதாசின் பாதுகாப்புக்காக மேடையில் இருந்த காவலர்களும், தைலாபுரம் தோட்ட இல்லத்தில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த காவலர்களும் திரும்பப் பெறப்பட்டனர்.
ராமதாசின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கான காரணம் எதையும் தமிழக காவல்துறை தெரிவிக்கவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது,
 

பலமிக்க நாடுகளில் இந்தியாவுக்கு 8வது இடம்


உலகின் மிக பலம் வாய்ந்த 27 நாடுகளின் பட்டியலில் இந்தியா 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
 இராணுவ செலவினம், எரிபொருள் பாதுகாப்பு, தனிநபர் வருமானம், மக்கள் தொகை, தொழில் நுட்ப ஆளுமைத் திறன் போன்ற தகுதிகளின் அடிப்படையில் சர்வதேச அளவில் பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியலை புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தையும், சீனா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தியா பொருளாதார பலத்தில் 8வது இடத்திலும், இராணுவ பலத்தில் 7-வது இடத்திலும், தொழில் நுட்ப ஆளுமைத்திறன் 17-வது இடத்திலும், எரிசக்தி பாதுகாப்பு 20-வது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

26 April 2013

மின்சாரம் உற்பத்தி செய்வோருக்கு 20 ஆயிரம் ரூபாய் ,,,,

 
முதல்வர் ஜெயலலிதா, வீட்டு கூரைகளில் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்வோருக்கு ஒரு கிலோ வாட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டு மானியம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
சட்டசபையில் 110வது விதியின் கீழ் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலம் தமிழகத்தில் 7,140 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன.
சூரிய சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதில் தமிழகத்தை முன்னிலையில் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுளளன. மூன்றாண்டுகளில் 3,000 மெகா வாட் சூரிய மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சூரிய மின் உற்பத்தியை மக்கள் இயக்கமாக மாற்றவும் திட்டமிடப்பட்டு உள்ளது. வீட்டு கூரைகள் மீது சூரிய மின் உற்பத்தி சாதனைங்களைப் பொருத்தவும் ஊக்குவிக்கப்படுகிறது.
இதற்கு புதிய மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி அமைச்சகம் 30 சதவீத மானியம் வழங்குகிறது. இதோடு சேர்த்து யூனிட்டிற்கு முதல் இரு ஆண்டுகளுக்கு 2 ரூபாயும் அடுத்த இரு ஆண்டுகளுக்கு 1 ரூபாயும் மேலும் இரு ஆண்டுகளுக்கு 50 பைசாவும், தமிழக அரசின் சார்பில் ஊக்கத் தொகையாக அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் சூரிய மின் உற்பத்திக்கு முதலீட்டு மானியம் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதை ஏற்று வீட்டு கூரைகள் மீது சூரிய மின் உற்பத்தி செய்வோருக்கு ஒரு கிலோ வாட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டு மானியம் அளிக்கப்படும். இதன்மூலம் முதல் கட்டமாக, 10 ஆயிரம் வீட்டு மின் நுகர்வோர் பயன் பெறுவர்.
காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தியால் கிடைக்கும் மின்சாரத்தை மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் மின் உற்பத்தி அதிகரிக்கும் போது உபரி மின்சாரத்தை செலுத்தும் வகையில் மின் தொடரமைப்பு இல்லை. இதனால் கிடைக்கும் மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த முடிவதில்லை என்றார்.
இந்த குறையைப் போக்க மாநிலத்தின் தென் பகுதியில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்த நெல்லை மாவட்டம் கயத்தாறிலிருந்து சென்னைக்கு மின்சாரத்தை கொண்டு வர 1,488 கி.மீ. நீளத்துக்கு 400 கிலோ வாட் மின் பாதை 2,300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.
இதைப் போல் கோவை,உடுமலைப்பேட்டை, தேனி பகுதிகளில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை கொண்டு வர மின்பாதை அமைக்கப்படும். இதற்காக தேனி தப்பகுண்டு கோவை ஆனைக்கடவு, ராசிபாளையம் ஆகிய இடங்களில் 400 கிலோவாட் திறன் கொண்ட துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
இதை கடத்திச் செல்ல 788 கி.மீ. நீளமுள்ள, 400 கிலோ வாட் மின் பாதை அமைக்கும் பணிகள் துவங்கப்படும். இத்திட்டத்திற்கு 1,230 கோடி ரூபாய் செலவிடப்படும். இவற்றோடு, நெல்லை கானார்பட்டியில் 150 கோடி ரூபாய் செலவில் 400 கிலோவாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
மின் பற்றாக்குறையைப் போக்க புதிய மின் உற்பத்தி நிலையங்களை துவக்குவதுடன் பற்றாக்குறையை 85 சதவீதம் வரை ஈடு செய்ய நீண்ட கால அடிப்படையில் மின் கொள்முதல் செய்ய ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும். முதல்கட்டமாக ஒக்டோபர் மாதம் முதல் மாதத்துக்கு 1,000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். மாதந்தோறும் செய்யப்படும் கொள்முதல் அடுத்த 15 ஆண்டுகள் நீடிக்கும் என்று ஜெயலலிதா கூறினார்
 

மகளின் முகபுத்தக சுயவிபரத்தை நீக்க நீதிமன்றம்


அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சினையினால் மரணமடைய நேரிட்ட 24 வயதுப் பெண் ஒருவரின் சுய விபரமிட்ட பக்கத்தை முகபுத்தகத்திலிருந்து உடனடியாக நீக்குமாறு பிரேசில் நாட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பிரேசிலின் மத்தியப் பகுதியில் உள்ள காம்போ கிராண்டே என்ற இடத்தில் 24 வயதான ஜூலியானோ ரிபைரோ காம்போஸ் என்ற பெண், பத்திரிகையாளராகப் பணி புரிந்து வந்தார்.
அவர், கடந்த வருடம் மே மாதம் அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சினையினால் உயிரிழந்தார். அதற்கு முன்னர் அவர் சமூக இணையதளமான முகபுத்தகத்தில் தனக்கென சுயவிபரமிட்ட பக்கத்தைத் தொடங்கிருந்திருக்கிறார்.
இதில் அவரது நண்பர்களும், உறவினர்களும் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அவரைப் பற்றிய செய்திகள், அவருக்கான பாடல்கள் போன்றவற்றை அனுப்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால் இது தனக்கு மிகவும் துன்பத்தைத் தருவதால் அந்தப் பக்கத்தை நீக்கும் படி முகபுத்தக நிறுவனத்திடம் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் அவரது தாயார் டோலோரெஸ் பெரைரா குடின்கோ(50) கூறியுள்ளார்.
ஆனால் அந்நிறுவனம் இறந்தவரின் நினைவுப் பக்கமாக அதனைத் தொடர்ந்துள்ளது. ஏழு மாதங்கள் தொடர்ந்து முயற்சி செய்தும் முடியாமல் போனதால் அந்தத் தாய் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார்.
நீதிபதி வனியா டி பவுலா ஆரண்டீஸ், மார்ச் மாதம் 19ம் திகதி ஒருமுறையும், ஏப்ரல் 10ம் திகதி ஒருமுறையும் ஜூலியா யானோவின் சுயவிபரப்பக்கத்தை மூடும்படி முகபுத்தக நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். மீண்டும் இந்த வாரம் 48 மணி நேரத்திற்குள் அந்தப்பக்கத்தை மூடாவிட்டால், சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று உத்தரவு பிறப்பித்த பின்னரே ஜூலியானோவின் பக்கம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், அவரது நண்பர்களுக்கு மட்டும் அந்தப்பகுதி நினைவுப் பகுதியாகத் தொடர்ந்திருக்கும்படி அந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
 

குழந்தை உயிரோடு எரித்து நரபலி: தாய் உட்பட?


சிலி நாட்டில் உள்ள வல்பரைசோ துறைமுகத்துக்கு அருகில் கொல்லிகுவே என்ற மலை பாங்கான பகுதிக்கு கடந்த நவம்பர் மாதம் 21ம் திகதி அன்று வந்த 4 பேர் கொண்ட கும்பல், பிறந்து 3 நாளே ஆன ஒரு குழந்தையை உயிரோடு எரித்து நரபலி கொடுத்துள்ளனர்.
இந்த கும்பலின் தலைவர் ரமோன் கஸ்டாவோ என்பவர் அந்த குழந்தை மதத்துக்கு எதிரானது என்றும் இதனால் உலகம் அழியப் போகிறது எனவும் கூறி மற்றவர்களை நம்ப வைத்துள்ளார்.
இதையடுத்து அந்த குழந்தையின் தாயையும் நம்பவைத்து இந்த கொடூர உயிர் பலியை அரங்கேற்றியுள்ளனர்.
பொலிசார் நடத்திய விசாரணையில் இந்த உண்மை வெளியாகி இருக்கிறது. கொலைசெய்யப்பட்ட குழந்தையில் தாய் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிறந்து 3 நாட்களே ஆன அந்த குழந்தையின் உடையை அகற்றி பலகையில் வைத்து ஆவிகளை அழைப்பதாக கூறி பூஜை நடத்தியுள்ளனர். மேலும் குழந்தை சத்தம் போடாமல் இருக்க வாயில் டேப் சுற்றிய பின்னர் குழந்தையை உயிரோடு எரித்து பலி கொடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
சிலி நாட்டில் கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கும்பலில் 12 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இது போன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

24 April 2013

மர்மமான முறையில் இறந்து கிடந்த இந்திய பெண்:?


பிரிட்டன் தலைநகர் லண்டனிலுள்ள மிட்கிராப் ரூயிசிலிப்பி என்ற பள்ளி ஒன்றில் குஜராத்தை சேர்ந்த ஹீனா சோலங்கி(34) என்ற பெண் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார்.
அவருடன் பெண் குழந்தைகள் ஜேஸ்மின் (9), பிரிஷ் (4) மற்றும் அவரது கணவரின் பெற்றோர்கள் வசித்து வந்தனர். கணவரின் பெற்றோர்கள் வெளியூர் சென்றிருந்தபொழுது சோலங்கியும், அவரது பெண் குழந்தைகள் இருவரும் கடந்த 12ம் திகதியன்று வீட்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து கிடந்தனர்.
லேப் டெக்னீசியான அவர் தனது குழந்தைகளுடன் விஷமருந்து குடித்து இறந்தாரா? அல்லது கேஸ் கசிவு ஏற்பட்டு இறந்தனரா என்கிற கோணத்தில் ஸ்காட்லாண்டு பொலிசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இருந்தும், இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாமல் இருந்தது.
இந்நிலையில், தற்பொழுது நடைபெற்று வந்த சோதனை குறித்து ஸ்காட்லாண்டு யார்டு பொலிசார் கூறுகையில், சில விஷமருந்துகள் கலந்திருத்த சந்தேகிக்கப்படும் மூன்று டம்ளர்களை பரிசோதித்து வருகின்றோம்.
இறப்பதற்கு முன் அவர் தனது கணவருக்கு எழுதிய கடிதம் ஒன்றை கண்டுபிடித்துள்ளோம். மேலும் பிரேத பரிசோதனைகள் குறித்த முழு அறிக்கைக்காகவும் காத்துகொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்
 

23 April 2013

ரகசியமாக அத்துமீறி நுழைந்த சீன இராணுவம் .,.,


இந்திய எல்லைக்குள் சீன இராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அருணாசலபிரதேச மாநிலத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீன இராணுவம் அடிக்கடி இந்திய எல்லைகளில் ஊடுருவி வருகிறது.
கடந்த வாரம் சீன மக்கள், விடுதலைப் படையைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் லடாக் பகுதியில் ஊடுருவிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
வடக்கு லடாக் பகுதிக்குள் நுழைந்த இராணுவ வீரர்கள், இந்திய எல்லைக்குள் சுமார் 6 மைல்(10 கிலோ மீட்டர்) தூரத்துக்கு வந்துள்ளனர்.
மலைப் பாங்கான ஒரு இடத்தில் வெட்டவெளியில் அவர்கள் முகாம் ஒன்றையும் அமைத்ததுடன், சுமார் 20 வீரர்கள் அந்த முகாமில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் இந்திய இராணுவத்தின் 5-வது பட்டாலியன் படைப்பிரிவு அங்கு விரைந்து, சீன இராணுவம் அமைத்த முகாமில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தற்காலிக கூடாரம் அமைத்துள்ளது.
இதற்கிடையே மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாக பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன
 

20 April 2013

ஆறு குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்,.

,.

கடந்த நான்கு மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக தைவான் அரசு 6 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பளித்து அதனை நிறைவேற்றியுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டில், தைவானின் நீதித்துறை அமைச்சராக செங் யன்க்பூ பதவியேற்றார். அதன் பின்னர் நான்கு முறை மரண தண்டனைகள் மொத்தமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. மரண தண்டனை அளிக்கப்பட்ட குற்றவாளிகளை சுட்டுக் கொல்வது தைவானில் வழக்கமாகும்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தைவானின் நான்கு நகரங்களின் சிறையில் இருந்த 6 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தார். நேற்று வெள்ளி அன்று இரவு இத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாக நீதித்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த குற்றவாளிகள் பல்வேறு கொலைகளில் ஈடுபட்டவர்கள் என்றும் இத்தகைய குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்கியே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் நீதித்துறையின் துணை அமைச்சர் செங் மிங் டங் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 21ம் திகதி 6 மரண தண்டனைகள் ஒன்றாக நிறைவேற்றப்பட்டன. தற்போது நான்கு மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக 6 பேர் ஒன்றாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

குண்டுவெடிப்புடன் தொடர்புடைய குற்றவாளி ?

 
பாஸ்டன் நகரில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திலிருந்து, 10 கி.மீ.,தூரத்தில் உள்ளது வாட்டர்டவுன் பகுதி. இங்குள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப மையத்தில் நேற்று முன்தினம் இரவு பொலீஸாருக்கும், பாஸ்டன் நகரில் குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படு்ம் குற்றவாளிகளுக்கும் பொலீஸுக்குமிடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு பொலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார்.அந்த வழியாக சென்ற காரை மறித்து தப்பி சென்ற இரண்டு தீவிரவாதிகளையும் பொலீஸார் துரத்தி சென்றனர். இதில் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். மற்றொருவன் தப்பி சென்று விட்டான். கார் டிரைவர் காயமின்றி தப்பினார்.
தப்பி சென்றவனை பொலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி போலீசார் தெரிவித்துள்ளனர்
அமெரிக்காவின், பாஸ்டன் நகர குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஒருவனை போலீசார் சுட்டு கொன்றனர். மற்றொருவன் தீவிரமாக தேடப்பட்டு வருகிறான்.அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், சமீபத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில், மூன்று பேர் பலியாயினர்; 170 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை, எப்.பி.ஐ., அதிகாரிகள், தீவிரமாக தேடி வந்தனர். குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் இருந்த, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தனர்.மாரத்தான் போட்டி நடக்கும் பாதையில், குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களின் படத்தை பொலீஸார் வெளியிட்டுள்ளனர். இவர்கள் நீண்ட முடியுடன் தொப்பி அணிந்துள்ளனர். இந்த நபர்களின் பெயர், எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

19 April 2013

பெண்ணை தாக்கிய பொலிஸ் அதிகாரியின் வேலை


 டெல்லி காந்தி நகரில் 5 வயது சிறுமி பக்கத்து வீட்டில் வசித்த நபரால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை மோசமாக உள்ளது.
அவருக்கு டெல்லி தயான்சந்த் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று மருத்துவமனையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் ஒரு பெண் மீது உதவி பொலீஸ் கமிஷனர் தாக்கினார். இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.
காவல்துறையின் இந்த அத்துமீறலைக் கண்டித்து போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணை தாக்கிய உதவி போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
 

வழக்கிற்கு முதன் முறையாக சிறைதண்டனை,.,


நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் முதல் முறையாக தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் 2 பேருக்கு 1 ஆண்டு மற்றும் 1 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் ஏராளமான நில அபகரிப்பு வழக்குகள் புற்றீசல் போல் பெருக தொடங்கின. பொலிசாரும் வழக்குப் பதிவு செய்து பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை மீட்டனர். பல வழக்குகளில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இதே போன்ற ஒரு வழக்குதான் தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளியை சேர்ந்த சைலேந்தர் என்பவர் தொடுத்தார். சைலேந்தரும் அவரது தம்பி சிவக்குமாரும் கொண்டேன் அள்ளி கிராமத்தில் 3 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை கடந்த 2006-ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த சிவஞானம் என்பவரிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்திற்கு விலைக்கு வாங்கி அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர்.
இந்நிலையில் அவர்களின் பக்கத்து நிலத்துக்காரர்களான ஆனந்தன், அவருடைய சகோதரர் பெருமாள் ஆகியோர் அந்த நிலத்தை குறைந்த விலைக்கு கேட்டு அடிக்கடி மிரட்டி வந்தனர். கடந்த 14.8.2011 அன்று சைலேந்தர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது ஆனந்த், பெருமாள் ஆகியோர் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக சைலேந்தர் தர்மபுரி நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவில் புகார் செய்தார். இதுதொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ஆனந்த், பெருமாள் ஆகிய 2 பேருக்கும் 2 பிரிவுகளில் ஒரு ஆண்டு மற்றும் ஒரு மாத சிறை தண்டனை விதித்து முதன்மை குற்றவியல் நடுவர் குணசேகரன் தீர்ப்பு அளித்தார்.
இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது. தமிழகத்தில் நில அபகரிப்பு வழக்கில் முதல் முறையாக 2 பேருக்கு தண்டனை கிடைத்திருப்பது தர்மபுரியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது
 

செல்வாக்கு படைத்தவர் பட்டியலில் நடிகர் அமீர்



 உலகின் செல்வாக்கு படைத்தோரின் 100 பேர் கொண்ட பட்டியலில் நமது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நடிகர் அமீர் கான் மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலா போன்றோர் இடம் பெற்றுள்ளனர்.

நியூயார்க்கில் இருந்து வெளிவரும் ‘டைம்’ இதழ் ஆண்டுதோறும் அரசியல், கலை, சமூகம் உள்ளிட்ட துறைகளில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மத்திய நிதியமைச்சரும் தமிழக அரசியல் தலைவர்களுள் ஒருவருமான ப.சிதம்பரம், இந்தி நடிகரும் சமூக ஆர்வலருமான அமீர் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ப.சிதம்பரம் குறித்தான்ன அறிமுகக் கட்டுரையில், அவரது அரசியல் மற்றும் நிதி நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் டைமின் கவர் ஃபோட்டோவில் இடம் பெற்றுள்ள அமீர் கானின் சிறப்புகள் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அமீர் கான் தனது ‘சத்யமேவ ஜெயதே’ சமூக விழிப்பு உணர்வு நிகழ்ச்சி மூலம் உலக அளவில் கவனத்தை ஈர்த்ததை ‘டைம்’ சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு இந்தியர் – சமூக ஆர்வலர் விருந்தா குரோவர் (வழக்கறிஞரான இவர், டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில் நீதிக்காக குரல் கொடுத்தவரில் முக்கியமானவர்), இந்திய வம்சாவளி கலிஃபோர்னியாவின் அடார்னி ஜெனரல் கமலா ஹாரிஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது ‘டைம்’ இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் பாகிஸ்தான் சிறுமி மலாலாவும் இடம்பெற்றுள்ளார். அதுவும், கவர் ஃபோட்டோக்களில் கெளரவப்படுத்தப்பட்டுள்ளார்.பெண் கல்விக்காக குரல் கொடுத்து வருவதற்காக, தாலிபான்களால் சுடப்பட்ட மலாலா இப்போது முழு குணமடைந்து, இங்கிலாந்தின் பெர்மிங்ஹாம் நகரில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிஷேல், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், மியான்மரின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூகி, நடிகை ஜெனீஃபர் லாரன்ஸ், இயக்குனர் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் உள்ளிட்டோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்



நடிகையை கற்பழித்த இந்திய மாணவர்:10ஆண்டுகள் ??


பிரிட்டனைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவரை கற்பழித்ததற்காக 25 வயது இந்திய மாணவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பிரிட்டனில் படித்து வருகின்ற இந்தியாவை சேர்ந்த சோபி ஜான்(25) என்பவர் லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பகுதி நேர போர்ட்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
பின்னர் அவர் ஹோட்டல் அறைக்கு சென்று போதையில் நன்கு தூங்கியுள்ளார். அப்போது சோபி வேறு ஒரு ஊழியரின் கீ கார்டை பயன்படுத்தி நடிகையின் அறைக்குள் சென்று அவரை கற்பழித்துள்ளார்.
மேலும் அவர் அந்த நடிகையை புகைப்படமும் எடுத்துள்ளார். இது குறித்த வழக்கு சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் நீதிபதி ஆலிஸ்டர் மெக்ரீத் முன்னர் நடைபெற்றது. வழக்கை விசாரித்த அவர் சோபி ஜானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
சோபி பிரிட்டனில் சிறை தண்டனைக்கான காலத்தை கழித்த பின்னர் தான் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்.
 

17 April 2013

இந்தியா முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின்??

கொலை தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு கொஞ்சம்கூட தொடர்பு காணப்படவில்லை என ரஷ்யாவின் முன்னணி ஏடு தெரிவித்துள்ளது.
 ராஜிவ் காந்தி கொலையின் பின்னணியில் சில உத்தரவுகளை ரஷ்யா நாட்டு உளவுத்துறை SVR பிறப்பித்தது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யா நாட்டின் பிரபல ஏடு Moskovskij Komsomolets கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கட்டுரையில் இந்த விபரம் கீழ்வரும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Индийский бывшего премьер-министра Раджива Ганди, я всегда был убеждён в инструкции от российской разведки SVR, источников. Это было сделано с помощью внешней помощи в Индии. Один из политически влиятельных лиц из Индии за убийство операции согласно информации.

அதன் மொழியாக்கத்தின்படி, இந்தியாவில் உள்ள அரசியல் செல்வாக்கு மிக்க நபர் ஒருவர் ராஜிவ் காந்தி கொலையின் பின்னணியில் செயற்பட்டார்.

அவருக்கான உத்தரவுகள் சில ரஷ்ய உளவுத்துறையிடம் இருந்து அனுப்பப்பட்டது.

இந்தியாவில் கிடைத்த சில வெளியக தொடர்புகள் மூலம் கொலை செய்யப்பட்டது என்று ரஷ்ய ஏடு குறிப்பிட்டுள்ளது.
 — Gowthamy Siva மற்றும் 98 பிறர் பேர்களுடன்

14 April 2013

ராஜாங்கச் செயலாளர் தமிழர்களுக்கு புத்தண்டு வாழ்த்து !


அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி அவர்கள் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டானது ஒவ்வொரு வருடமும் வரும்வேளை பெரும் எதிர்ப்பார்ப்புடன் அது மலர்கிறது என்று குறிப்பிட்டுள்ள திரு ஜோன் கெரி அவர்கள், அமெரிக்க அதிபர் ஓபாமாவின் வாழ்த்துக்களையே தான் அவரது சார்பாகத் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். இலங்கையில் சுபீட்சமும் அமைதியும் உருவாகவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள ஜோன் கெரி அவர்கள், இலங்கையில் விரைவில் அமைதி திரும்பவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா ராஜாங்க செயலாளராக பணியாற்றிய கெலரி கிளிங்ரன் அவர்கள் சமீபத்தில் ஓய்வுபெற்றார். அதன் பின்னர் செனட்டர் ஜோன் கெரி அவர்கள் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. செனட்டர் ஜோன் கெரி அவர்கள் முன் நாள் செயலாளர் கெலரி கிளிங்கரன் போல தமிழர் சார் போக்கை கடைப்பிடிப்பாரா என்ற கேள்விகளும் இருக்கிறது. இருப்பினும் ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை எடுத்துரைத்து அவரையும் தமிழர்களுக்கு ஆதரவாக திரட்டி எமது நோக்கங்கள் நிறைவேற நாம் பயன்படுத்துவதே, மதி நுட்ப்பமாகும்.

சிறையை தகர்த்து தப்பி ஓடிய கைதி:


பிரான்சில் வெடிகுண்டால் சிறையை தகர்த்து தப்பிய ரேடோன் பெய்ட் என்ற கைதி பாதுகாப்பாக வார்டன்களையும் பிணை கைதியாக பிடித்து சென்றுள்ளார்.
வடக்கு பிரான்ஸ் பகுதியை சேர்ந்த இவர் கார்களை கொள்ளையடித்து விற்று வந்துள்ளார். எனவே அவரை பொலிசார் கைது செய்து சி கியூடின் நகரில் உள்ள சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று அவர் சிறையை குண்டு வைத்து தகர்த்தியதில் சிறையில் இருந்த ஐந்து கதவுகள் நொறுங்கின. பின்னர், அவன் அங்கிருந்து தப்பி செல்லும் பொழுது சிறை வார்டன்கள் ஐந்து பேரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளார்.
அப்போது, சிறையில் இருந்து வெளியேறியவுடன் ஒரு வார்டனையும், சிறிது தூரம் சென்ற பின்னர் இரண்டு வார்டனையும் விடுதலை செய்தார். மீதியிருந்த இரண்டு பேரை நெடுஞ்சாலையில் இறக்கி விட்டு மாயமானார்.
இதற்கிடையே, வெடிகுண்டு மூலம் சிறையை தகர்த்து விட்டு தப்பிய பெய்டை ஹெலிகொப்டர் மூலம் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நேற்று முன்தினம் பெய்டை பார்க்க அவரது மனைவி சிறைக்கு வந்திருந்தார். அவர் தான் இவருக்கு வெடிகுண்டுகளை மறைமுகமாக வழங்கியிருக்க வேண்டும் என்று பொலிசார் கருதுகின்றனர்.
 

அமெரிக்காவிற்கு உதவுவோம்: பிலிப்பைன்ஸ்



வடகொரியா சமீபத்தில் இரு அணுகுண்டு சோதனைகளை நடத்தி உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய நிலையில் தற்பொழுது தென்கொரியா மீது போர் தொடுப்போம் என்றும் மிரட்டல் விடுத்து வருவதால் அமெரிக்கா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
இச்சம்பவங்களைத் தொடர்ந்து வடகொரியா, அமெரிக்காவிடையே போர் மூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வடகொரியா மீது தாக்குதல் நடத்த முன்னாள் அமெரிக்காவின் காலனி நாடான பிலிப்பைன்ஸ் முன் வந்துள்ளது.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் டெல் ரொசாரியோ கூறுகையில், அமெரிக்கா அல்லது பிலிப்பைன்ஸ் மீது தாக்குதல் நடத்தப்படும் விடயத்தில், இருநாடுகளும் இணைந்து செயல்படுவது என்று கடந்த 1951ம் ஆண்டே பரஸ்பர ராணுவம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, கொரிய தீபகற்ப பகுதியில் போர் மூழ்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தப்படி எங்களின் மீதோ அல்லது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள எந்த ஒரு நாட்டின் மீதோ தாக்குதல் நடத்தப்படுமானால், எங்கள் ராணுவ தளங்களை பயன்படுத்தி கொள்ள அமெரிக்காவிற்கு அனுமதி அளிக்கப்படும். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தென் சீனக்கடலில், சீனா அத்துமீறி வருகின்ற நிலையில் பிலிப்பைன்ஸ் அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தங்களை புதுப்பித்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்சின் 8000 ராணுவவீரர்கள் அங்கு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது
 

13 April 2013

மரண தண்டனையை இரத்துச் செய்யுங்கள்: ??


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், உச்சநீதிமன்றத்தில் புல்லர் வழக்கில் அவருக்கு மரண தண்டனை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது தனக்கு பயத்தையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது என்றார்.
உலக நாடுகளில் மரண தண்டனைக்கு தடை விதித்துள்ள நிலையில், அகிம்சாவாதியான காந்தியடிகள் பிறந்த இந்தியாவில் தடை விதிக்காதது வேதனையளிக்கிறது என்ற அற்புதம்மாள், தமிழகத்திலேயாவது மரண தண்டனையை ஒழிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டு, இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக ஆக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சட்டப்பேரவையை கூட்டி மரண தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரிடம் மனு அளித்து தனது மகனை தன்னிடம் ஒப்படைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்தார்.
 

12 April 2013

இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்



எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது  தந்திடுவீர்
முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும்உடன்
தொடர்புகொள்ள E M ,, navatkiri@ hispeed .ch அல்லது ,,பேஸ்புக்கில்navatkiricom navatkiri ,,,தொடர்புகொள்ளவும் நன்றி,,,

http://www.navarkiri.com/ navatkirinew.blogspot.ch / navakiri.blogspot.ch/ http://navakirithevan.blogspot.ch/
navakirinilavarai.blogspot.ch /http://navarkirionriyam.blogspot.ch/http://lovithan.blogspot.ch/{www.srimanikkappilliya.com}http:/


கங்கதேவி பள்ளி - முன்மாதிரி கிராமம்

ஆந்திர மாநில தலைநகர் ஹைதரா பாத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கங்கதேவி பள்ளி என்னும் பெயர் கொண்டக் கிராமம். இந்தக் கிராமத்தில் 1,300 பேர்தான் வசிக்கின்றனர். அனை வரும் கல்வியறிவு பெற்றவர்கள். தெருவின் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை, விஞ்ஞானபூர்வமாக சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வசதி, 24 மணி நேர மின் வசதி, கான்கிரீட் சாலைகள், சாலையோர மரங்கள் என அதிசய கிராமமாக திகழ்கிறது.
இந்தக் கிராமத்தில் ஒரு குடும்பத்தில்கூட இரண்டு குழந்தைகளுக்கு மேல் கிடையாது. சரியாக காலை 9 மணிக்குத் துவங்கும் பள்ளிக்கூடம் மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. ஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வருவது போல பள்ளிக்கு “மட்டம்’ போடும் மாணவரும் இங்கு கிடையாது.
அனைத்துக் குழந்தைகளுக்கும், நோய்த் தடுப்பு மருந்து, ஊசி போன்றவை, முறையாக வழங்கப்படுகின்றன. ஆண் - பெண் விகிதாசாரமும் சரிசமமாக உள்ளது. ஒவ்வொரு வீட்டுத் தலைவரும் தினமும் உழைக்கிறார். மாதம் தோறும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் சேமிப்பு செய்கிறார்.

மதுபானக் கடைகள் அறவே கிடையாது. அனைவருக்கும் ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, முதலுதவி முதல் பெரிய அளவிலானச் சிகிச்சைகள் அளிப் பதற்கும் வசதி கொண்ட மருத்துவ மையங்கள் எனக் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாத அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது இந்தக் கிராமம்

ஆட்சி மாற்றம் தேவையில்லை:



பாஹாங் நகர சீரமைப்பு நிலையத்தைத் திறந்துவைத் துப் பேசிய அவர், “அற்பத் தனமாக ‘மாற்றம்’ என்ற ஒரு சொல்லைக் கூறிக்கொண்டு சிலர் திரிந்து வருவதை அறிந்திருக்கிறேன். ஆனால் உண்மையான மாற்றத்தை அவர்களால் கொண்டுவர முடியுமா? ஒரு கப்பலில் மூன்று மாலுமிகள் இருக்கும்போது, எப்படி அவர்களால் இதைச் சாத்தியமாக்க முடியும்? என்ன நடக்கும் என்று அவர்களால் யூகிக்க முடியுமா? கப்பல் மூழ்கிவிடும்,” என்று கூறினார். மாற்றத்தைக் கொண்டுவரும் திட்டங் களின் மூலம், தேசிய முன்னணி தன்னை நிரூபித்துள்ளது என்று அவர் சுட்டினார்.
 ஆட்சியை மாற்றாமலேயே நாட்டின் வளர்ச்சியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். தேசிய முன்னணி ஆட்சியின் கீழ் உண்மையான மாற்றங்களும் முன்னேற்றமும் மலேசியாவில் நிகழ்ந்து வருவதால், அதிகார மாற்றம் தேவையில்லை என்று நஜிப் குறிப்பிட்டார்.
 

11 April 2013

மீனவர்கள்: இலங்கை சிறையிலிருந்து விடுதலை,,,,


கடலில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் மீது இலங்கை கடற் படையினர் தாக்குதல் நடத்திவரும் சம்பவம் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றது.
பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும், அதனை கண்டுகொள்ளாத இலங்கை கடற்படையினர் அவ்வப்போது மீனவர்களை கைது செய்து வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி ராமேசுவரம் மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
இலங்கை அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 19 மீனவர்களும் இன்று காலை தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இலங்கை அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 19 பேரும் மீனவர்கள்தான். வேறு எந்த குற்றச்சாட்டும் அவர்கள் மீது இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து மீனவர்கள் 19 பேரையும் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலையான மீனவர்கள் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊர் திரும்புவார்கள். இதை தவிர, மேலும் இலங்கை சிறையில் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் விடுவிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன
 
 

கடும் புயல் காரணமாக மேகாலாயவில் ??


மேகாலயா மாநிலத்தின் மேற்கு காசி மலை
காற்றின் வேகத்தில் மரங்கள் அடியோடு சாய்ந்தன. தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரக் கம்பங்கள் விழுந்ததில் பல இடங்களில் தொடர்புகள் அறுந்தன. இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் இறந்துள்ளதாகவும், 50-ற்க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். 50-ற்க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ப் பகுதியில் வீசிய புயல் காற்றாலும், பெரும் மழையாலும், 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்த மக்கள் வீடுகளை இழந்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தொலைத்தொடர்புத் துறையினரும், மின்சார வாரியமும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளன என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக, மாநில அரசு, ரூ.25 லட்சம் அளித்துள்ளதாக, இயற்கைப் பேரிடர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.சி.லாலு தெரிவித்தார்

இரும்புப் பெண்மணி ஜெயலலிதா: அமெரிக்கா பாராட்டு


ஜெயலலிதாவை இரும்பு பெண்மணி என்று அமெரிக்க தூதரகம் பாராட்டியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுக்க ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள், அந்த நாட்டின் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து உடனுக்குடன் அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதை நடைமுறையாக கொண்டுள்ளன.
தூதரகங்களுக்கும் வோஷிங்டனில் உள்ள அமெரிக்க தலைமையகத்துக்கும் இடையே மிக, மிக இரகசியமாக நடந்து வந்த இந்த தகவல் பரிமாற்றத்தை ``விக்கிலீக்ஸ்'' என்ற இணையத்தளம் அம்பலப்படுத்தியது.
ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும் எந்தெந்த விஷயங்களில், எப்படி நடந்து கொண்டனர் என்பவை எல்லாம் விக்கிலீக்ஸ் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அந்த வரிசையில் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளிடம் 1980, 1990களில் விடுதலைப்புலிகள் எத்தகைய செல்வாக்கு பெற்றிருந்தனர், இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்ற பிறகும், அதன் பிறகும் விடுதலை புலிகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி பற்றி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் வோஷிங்டனுக்கு அனுப்பிய தகவல்களை தற்போது விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதமும், 2009-ம் ஆண்டு மார்ச் மாதமும் அனுப்பப்பட்ட தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் விஷயத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் எப்படி மாறுபட்ட வகையில் செயல்பட்டனர் என்று விரிவாக கூறப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதர் ஆண்ட்ரூ டி சிம்கின் அனுப்பிய தகவல் தொகுப்பில் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி புகழ்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
அவர் அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் முதல்வராக பொறுப்பு ஏற்ற ஜெயலலிதா, தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளை ஒடுக்க உத்தரவிட்டார். அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் வெளிப்படையாக செயல்பட்டு வந்தனர்.
இது தொடர்பாக தமிழக காவல் துறையில் மிக உயரிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``என்ன ஆனாலும் சரி... தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளை முற்றிலும் ஒடுக்க எங்களுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தேவைப்பட்டால் விடுதலைப்புலிகளை அழிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறார்'' என்றார்.
இதை வைத்து பார்க்கும் போது ஜெயலலிதா இரும்பு பெண்மணியாக திகழ்வது தெரிகிறது. அவரது துணிச்சலான, உறுதியான நடவடிக்கைகளால்தான் தமிழ் நாட்டில் நீண்ட காலமாக இருந்த விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது' என இவ்வாறு அந்த தகவல் தொகுப்பில் கூறப்பட்டு இருந்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றியும் சென்னை தூதரகம் சில தகவல்களை வோஷிங்டனுக்கு அனுப்பி இருந்தது. அதையும் விக்கி லீக்ஸ் வெளியிட்டு இருக்கிறது.
அதில் விடுதலைப்புலிகள் மீதான பயம் காரணமாகவே, கருணாநிதி அந்த அமைப்பை ஆதரித்தார் என்ற சந்தேகம் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் கருணாநிதியின் விடுதலைப்புலி ஆதரவு நிலை எப்போதும் சர்ச்சையை ஏற்படுத்தியதாக சென்னை தூதரகம் தகவல் அனுப்பியது தெரிய வந்துள்ளது
 

வசந்தகாலம் தொடங்கியும் சுவிட்சர்லாந்தில் ??



சுவிட்சர்லாந்தில் வசந்தகாலம் கடந்த மார்ச் 21ம் திகதி அளவில் தொடங்கிவிட்ட பொழுதும் உண்மையில் இன்னும் பனிக்காலமே தொடர்கிறது.
கடந்த மார்ச் 20ம் திகதி முதல் மேற்கிலிருந்து வருகின்ற உஷ்ணக் காற்று தெற்கு நோக்கி வீசுவதால் மலைப்பகுதியின் பனி உருகி குளிர்ச்சியாக உள்ளது.
இதனால் வடகிழக்கில் இருந்து வீசும் கடும் வாடைக் காற்று எங்கும் குளிரைப் பரப்பி வருகின்றது என்று மீட்டியோ சுவிஸ் எனப்படும் தட்பவெப்ப ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த ஆய்வு மையம், தெற்கு ஆல்ப்ஸ் மலையில் சனிக்கிழமை வரை 18 முதல் 20 வரை டிகிரி வெப்பம் நிலவும் என்றும் அடுத்தவாரம் சுவிட்சர்லாந்து முழுக்க இதமான வசந்தத்தை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளது.
 

செல்ல வேண்டாம்: அமெரிக்கா வெளியுறவுத்துறை,,,



பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கர்கள் அவசர தேவையில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்ட பயண அறிவுரையை திரும்பப் பெற்ற அமெரிக்கா, ”சமீபத்தில் கிடைத்துள்ள தகவல்களின் படி, பாகிஸ்தானில் வசிக்கும் அல்லது சுற்றுலா செல்லும் அமெரிக்கர்கள் மற்றும் வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் அங்குள்ள பல்வேறு நாட்டை சேர்ந்த தீவிரவாதிகள், சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்” என எச்சரித்துள்ளது.
இது மட்டுமின்றி, பணத்துக்காக அமெரிக்கர்களை கடத்தும் சம்பவங்களும் தற்போது அதிகரித்துக் கொண்டே வருகின்றன. எனவே, தங்களது உயிருக்கு எந்நேரமும் ஆபத்து வரலாம் என கருதும் அமெரிக்கர்கள், எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பாகிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும்.
இதேபோல், அவசர தேவையில்லாமல் பாகிஸ்தான் செல்வதையும் அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவு துறை நேற்று எச்சரித்துள்ளது.

10 April 2013

சிசுவின் சடலம் புத்தூர் மேற்கில் மீட்பு???

 புத்தூர் மேற்கில் உயிரிழந்த 7 மாதக் குழந்தையின் சடலம் உரிய விசாரணைகளுக்கு உட்படுத்தப்ப டாமல் மயானத்தில் புதைக் கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அச்சுவேலிப் பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

புத்தூர் மேற்கைச் சேர்ந்த அன்ரன் ஜெனித்தாஸ் தனுஷன் (வயது 07 மாதம்) என்ற குழந்தையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. “குறித்த குழந்தையின் தாய் கணவரைப் பிரிந்து மிக வறுமையான நிலையில் வாழ்ந்து வருகின்றார்.
இதன் போது குழந்தைக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது. எனினும் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்காமல் ஆலயத்துக்கு நேர்த்தி வைத்துவிட்டு தாயார் அலட்சியமாக இருந்ததால் குழந்தை உயிரிழக்க நேரிட்டது. இதன் பின்னர் சடலத்தை உரிய விசாரணைக்கு உள்ளாகாமல் புத்தூர் மேற்கு கிந்திட்டி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.” என்று பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

09 April 2013

ஆண் குழந்தையின் சடலத்தை நாய் கவ்விச் சென்றதால் பரபரப்பு??


தென்காசியில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் பிறந்து சில நாட்களேயான ஆண் குழந்தையின் சடலத்தை நாய் கவ்விச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி அருகே நெடுவயல் பகுதியை சேர்ந்த மாடசாமி, நாகம்மாள் ஆகியொருக்கு கடந்த 2ம் திகதி இடைகால் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் ஆண்குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்தவுடன் மூச்சுதிணறல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக தென்காசி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை அனுமதித்துள்ளனர்.
குழந்தை சிகிச்சை பலனின்றி கடந்த 6ம் திகதி இரவு உயிரிழந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர்கள் குழந்தையின் சடலத்தை மருத்துவமனை வளாகத்திலேயே புதைத்துவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலையில் ஒரு ஆண்குழந்தையின் சடலத்தை நாய் ஒன்று கவ்விகொண்டு சென்றுள்ளது. அந்த உடலில் குழந்தையின் தலை மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த தம்பதியினர் குழந்தையைப் புதைப்பதற்கு வெட்டிய குழி ஆழமானதாக இல்லாததால் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து தென்காசி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

காந்தி வீட்டில் அமெரிக்க உளவாளி: அம்பலப்படுத்தியது


இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அவரது வீட்டில், அமெரிக்க உளவாளி பதுங்கி இருந்ததாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

1975 மற்றும் 1977 காலப்பகுதியில் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போதே இந்திரா காந்தி வீட்டில் அமெரிக்க உளவாளி பதுங்கியிருந்ததாக, பிரதமர் இல்ல தகவல்கள் இதை உறுதி செய்வதாகவும் சமீபத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1975ம் ஆண்டு ஜூன் 26ம் திகதி இந்திரா காந்தி அவசர நிலை கொண்டு வந்ததன் பின்னணியில் அமெரிக்க உளவாளி இருந்ததாகவும், அவருக்கு உதவியாக இந்திராவின் மகன் சஞ்சய்யும், அவரது செயலாளர் ஆர்.கே.தவான் ஆகியோரும் இருந்ததாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

 

08 April 2013

7 தீவிரவாதிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் ,,,,


ஈராக் நாட்டில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டு வீசி தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொலை செய்த 7 தீவிரவாதிகளுக்கு மக்கள் முன்னிலையில் நேற்று தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது.
தீவிரவாத குற்றவாளிகளை முறையான விசாரணையில்லாமல் ஈராக் அரசு தூக்கிலிட்டு வருவதை உலக நாடுகள் கண்டித்து வருகின்ற வேளையில், தற்போது 7 பேர் தூக்கிலிடப்பட்ட சம்பவம் கடுமையான மனித உரிமை மீறலாகும் என்று ஈராக்கில் உள்ள ஐ.நா. மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி கூறியுள்ளார்.
கடந்த 2003ம் ஆண்டு வரை ஈராக் அரசின் நிர்வாகம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அப்போது வரை தூக்கு தண்டனை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த 2004ம் ஆண்டில் ஈராக்கை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் ஏராளமான தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
 

07 April 2013

அட இதுக்குமா ? மாத்தளை எலும்புக்கூடுக்கும்-?

 
ஜனாதிபதி ஆணைக்குழு ! நாட்டில் ஒரு பாரிய குற்றச்செயல் நடந்தால் அதனை சர்வதேச நாடுகள் கண்டிக்க முன்னர் அதனை அப்படியே மூடி மறைக்க, இந்தியா போன்ற நாடுகளில் விசாரணைக் கமிஷன் என்று ஒன்றை வைப்பார்கள். இந்த விசாரணைக் கமிஷன் அப்படியே பல ஆண்டுகளைக் கடத்தும். பின்னர் இத்துப்போன ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும். பின்னர் அப் பிரச்சனை அப்படியே மூடிமறைக்கப்படும். இது தான் பல நாடுகளில் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மாத்தளையில் சுமர் 150 மனித எலும்புக்கூடுகள் ஒரு புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கே சுமார் 150 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.
பொலிசார் விசாரணைகளை நடத்திவரும் இவ்வேளை மகிந்தர் தான் ஒரு குழுவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் இனி ஜனாதிபதி ஆணைக்குழுவே மாத்தளை புதைகுழி விடையத்தை விசாரிக்கும் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனி இந்த விசாரணையும் எல்.எல்.ஆர்.சி போல பிசுபிசுத்துப் போகவுள்ளது என்பது திண்ணம்

கைப்பேசிகளை சார்ஜ் செய்வதற்கான ,,,


இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றினால் மின்சாரம் துண்டிக்கப்டும் சந்தர்ப்பங்களில் ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்வதற்கென SOS Charger அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எளிமையான முறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியதாகக் காணப்படும் இந்த நவீன சாதனமானது 1500mAh மின்னோட்டத்தினை வெளிவிடுவதோடு 3 தொடக்கம் 5 நிமிடங்கள் வரை சார்ஜ் செய்த பின்னர் 5 தொடக்கம் 12 நிமிடங்கள் வரை அழைப்புக்களை தொடர்ச்சியாக ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு மின்னை உற்பத்தி செய்கின்றது.
மேலும் இச்சாதனத்தையும் கைப்பேசியையும் இணைப்பதற்காக USB இணைப்பி காணப்படுகின்றதுடன் சார்ஜ் செய்யப்படும் அளவுகளை அறிந்து கொள்வதற்கொன LED மின்குமிழ்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இச்சாதனத்தின் பெறுமதியானது 35 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது{ காணொளி, புகைபடங்கள்,.}

06 April 2013

இலங்கை செல்லும் இந்தியக் குழு


இந்திய எம்.பி.க்கள் குழு வருகிற 8ம் திகதி இந்திய தொழில் மற்றும் வர்த்தக நிறுவனம் சார்பில் இலங்கை புறப்பட்டு செல்கிறது.
அக்குழுவில் சுகதாராஸ் (திரிணாமுல் காங்கிரஸ்), சந்தீப்தீக்ஷிந் (காங்கிரஸ்), அனுராக்தாகூர் (பா.ஜனதா), தனஞ்சய்சிங் (பகுஜன் சமாஜ் கட்சி), கவுடுயாஸ்கி (காங்கிரஸ்), பிரகாஷ் ஜவாதகார் (பா.ஜனதா) ஆகிய 6 எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர், தமிழக எம்.பி.க்கள் யாரும் இடம்பெறவில்லை.
இவர்களுடன் இந்திய தொழில் மற்றும் வர்த்தக நிறுவனத்தை சேர்ந்த 2 பிரதிநிதிகளும் உள்ளனர். இவர்கள் இலங்கையில் மூத்த மந்திரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் அந்நாட்டு எம்.பி.க்களை சந்தித்து பேசுகின்றனர். வருகின்ற 12ம் திகதி வரை இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அப்போது கொழும்பு மற்றும் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் பகுதிகளுக்கும் செல்கின்றனர்.
யாழ்ப்பாணம் செல்லும் அவர்கள் அங்கு இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டபணிகளை ஆய்வு செய்கின்றனர். குறிப்பாக தமிழர்களுக்கு கட்டித் தரப்படும் வீடுகளை நேரில் பார்வையிடப்போவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது
 

மருமகனின் மோசடிகள்: அம்பலப்படுத்திய அதிகாரி


44வது முறையாக இடமாற்றம்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிலமோசடியை அம்பலப்படுத்தி அரசியல் புயலை உருவாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி 44 வது முறையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கேம்கா என்பவரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, கடந்த வருடம் ஹரியானா மாநிலத்தில் ஏராளமான விளைநிலத்தை அடிமாட்டுக்கு வளைத்துப் போட்டு அதை டிஎல்ப் நிறுவனத்துக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தார் என்று முறைப்பாடுகள் எழுந்தன.
இது அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியது. விவசாயிகளிடம் நிலம் பலவந்தமாக பறிக்கப்பட்டது என்று வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்து வந்ததால் ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கேம்கா, அப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் ஓராண்டுக்குள் 3 முறை வெவ்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
கடைசியாக ஹரியானா விதை அபிவிருத்தி கழகத்தில் நிர்வாக மேலாளராக அவர் பணியாற்றி வந்தார். அங்கும் கேம்கா சும்மா இருக்கவில்லையே..விதை கொள்முதல் ஊழலை வெளிக்கொண்டு வந்து சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரைத்தார்.
மேலும் இது தொடர்பான பொதுநலன் வழக்கு ஒன்றில் ஏப்ரல் 12ம் திகதிக்குள் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது.
நிச்சயம் அரசுக்கு எதிராகத்தான் கேம்கா அறிக்கை தாக்கல் செய்வார் என்று எண்ணியதால் அவரை திடீரென தொல்லியல் துறைக்கு கேம்கா டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்கிறார்.
அவரது 20 வருட அரசுப் பணி காலத்தில் இது 44-வது பணியிட மாற்றம் என தெரிவிக்கப்படுகிறது

 

பிரதமர் ஆவதை வரவேற்கிறேன்: மன்மோகன்,,,,

 

பிரதமர் பதவியில் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியும் வெகுகாலம் தொடர்ந்து பதவியில் இருக்க முடியாது.
மாற்றங்கள் கண்டிப்பாக வரவேண்டும், அதனைத் தொடர்ந்த தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கருத்து வெளியிட்டார்.
ஆனால் இதை காங்கிரஸ் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி நிராகரித்திருப்பதை தொடர்ந்து  இந்த  பிரச்சினை மைய விவாதப்பொருளாகி இருக்கிறது.
இந்த நிலையில், டெல்லியில் நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த பத்ம விருது வழங்கும் விழாவின் இடையே நிருபர்களிடம் பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். அப்போது அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி:- நீங்கள் மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்பீர்களா?
பதில்:- இது யூகத்தின் அடிப்படையில் எழுப்பப்படுகிற கேள்வி. நாங்கள் எங்கள் பதவி காலத்தை நிறைவு செய்ய வேண்டி உள்ளது.
கேள்வி:- மீண்டும் பிரதமர் பதவி வகிக்க உங்களுக்கு வாய்ப்பு இல்லை என்றுகருதுகிறீர்களா?
பதில்:- நான் மீண்டும் பிரதமர் பதவி வகிக்க வாய்ப்பு உள்ளது என்றும் சொல்வதற்கில்லை. இல்லை என்றும் சொல்வதற்கு இல்லை.
கேள்வி:- திக்விஜய் சிங் கருத்தை அடுத்து இரு அதிகார மைய பிரச்சினை விவாதப்பொருளாகி இருக்கிறதே?
பதில்:- இதெல்லாம் ஊடகங்களின் வேலை ஆகும். இது ஒன்றுக்கும் பலனற்ற விவாதம்.
கேள்வி:- ராகுல் காந்தி பிரதமர் ஆவதை வரவேற்கிறீர்களா?
பதில்:- ஓ... ஆமாம். எந்த நாளிலும் (அவர் பிரதமர் ஆவதை வரவேற்கிறேன்.)

கேள்வி:- டெல்லியில்இந்திய தொழிற்கூட்டமைப்பு ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சு எப்படி அமைந்திருந்தது?
பதில்:- மிக சிறப்பாக இருந்தது.
 

05 April 2013

சகோதரிகள் 4 பேர் மீது மர்ம நபர்கள் அசிட் வீச்சு


உத்தர பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சகோதரிகள் மீது  2 மர்ம நபர்கள் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளமை அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாம்லியில் வசிக்கும் குடும்பத்தை சேர்ந்த 4 சகோதரிகளில் 3 பேர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியைகளாக பணியாற்றுகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை இவர்கள் பணி முடிந்து வீட்டுக்கு ஒன்றாக நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் வேலை செய்யாத மற்றொரு சகோதரியும் வந்தார்.
அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் இவர்களை ஆபாசமாக கிண்டல் செய்ததுடன்,அவர்கள் கொண்டு வந்திருந்த ஆசிட்டை எடுத்து அப்பெண்கள் மீது வீசெியுள்ளனர்.
அது சகோதரிகள் 4 பேர் மீதும் பட்டதால், வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர். அந்த வழியே சென்றவர்கள்ஈ சகோதரிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சகோதரிகளில் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதால், அவர் டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்த சம்பவத்தால், உத்தர பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த மர்ம நபர்கள் 2 பேரும் தப்பி விட்டனர். அவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
 

விபத்துக்குள்ளாக்கிய காஷ்மீர் பள்ளத்தாக்கு: 3 பேர் ?


பள்ளி முடிந்து வீடுகளுக்கு செல்லும் மாணவர்கள் பயணம் செய்த பேருந்து பெரும் விபத்துக்குள்ளான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நாக்கில் இருந்து தியால்காமுக்கு இன்று தனியார் பள்ளி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பள்ளி முடிந்து வீடுகளுக்கு செல்லும் மாணவர்கள் அதில் பயணம் செய்தனர். அந்த பேருந்து, தியால்காம் மலைப்பாதையில் உள்ள வளைவில் திரும்பியபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொலிசாரும் அப்பகுதி மக்களும் இணைந்து உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 4 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. பேருந்து சாரதி உள்ளிட்ட 13 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  சாரதி உள்ளிட்ட 8 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.