Search This Blog n

27 April 2013

வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு திடீர் நிறுத்தம்,,,

டாக்டர் ராமதாஸ் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு திடீரென திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாமக தலைமை நிலையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அளிக்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பு திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.
மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடந்து கொண்டிருந்த போதே எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
ராமதாசின் பாதுகாப்புக்காக மேடையில் இருந்த காவலர்களும், தைலாபுரம் தோட்ட இல்லத்தில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த காவலர்களும் திரும்பப் பெறப்பட்டனர்.
ராமதாசின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கான காரணம் எதையும் தமிழக காவல்துறை தெரிவிக்கவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது,
 

0 கருத்துகள்:

Post a Comment