This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

30 September 2012

ஒபாமாவின் தாய் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியீடு

30.09.2012.By.Rajah.அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சியின் வேட்பாளராக மிட் ரோம்னியும், ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் போட்டியிடுகின்றனர்.
ஒபாமாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் மிட் ரோம்னி போட்டியிடும் ஓஹியோ மாகாணம் மற்றும் நிவேதா, நியூ ஹாம்ஷைர் ஆகிய மாகாணங்களில் லட்சக்கணக்கான
வாக்காளர்களுக்கு டி.வி.டி.க்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
அதில் ஒபாமாவின் தாயான ஆன் டன்ஹாம் இளம் வயதில் நிர்வாண நிலையில் காட்சி கொடுத்துள்ள புகைப்படங்கள் அடங்கியுள்ளன.
இது குறித்து ஜனநாயக கட்சியின் ஆலோசகர் ஸ்டீவ் மர்பி கூறுகையில், எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவரை எந்தவித ஆதாரமும் இல்லாமல் தரம் தாழ்ந்த வகையில் குற்றம்சாட்டுவதாகும் என்று கூறியுள்ளார்.
மேலும் இத்தகைய செயலுக்கு பின்னால் இன பாகுபாடு மற்றும் பண அதிகாரம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

டெலிபதி மூலம் மனைவியை கற்பழித்து விட்டார்: பக்கத்து வீட்டுக்காரரரை சுட்ட கணவர்

30.09.2012.By.Rajah.தனது மனைவியை டெலிபதி மூலம் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி பக்கத்து வீட்டுக்காரரை ஒருவர் துப்பாக்கியால் சுட்ட வினோத சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் சென்டர்வில்லியில் வசிப்பவர் மைக்கேல் செலினட் (வயது 54). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த டோனி பியர்ஸை சுட்டுக் கொன்றார்.
இது குறித்து மைக்கேல் கூறுகையில், எனது மனைவியை பியர்ஸ் டெலிபதி முறை மூலம் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இது எனக்குத் தெரிய வந்ததால், சுய பாதுகாப்புக்காக பியர்ஸை சுட்டேன் என்றார்.
தன்னையும் டெலிபதி மூலம் மிரட்டியதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இதையடுத்து கொலை முயற்சி, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இவரை பொலிசார் கைது செய்தனர்.
இளம் வயதில் மைக்கேல் சாலை விபத்தில் சிக்கியுள்ளார். அப்போது அவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால்தான் மைக்கேல் இவ்வாறு நடந்து கொண்டதாகவும், இதுபோல பலமுறை அவர் மன ரீதியான பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளதாகவும் மைக்கேலின் சட்டத்தரனி கூறியுள்ளார்.
மருத்துவர்களும், மைக்கேல் மன ரீதியாக உடல் நலம் சரியில்லாதவர் என்று கூறியுள்ளனர். அவர் தனது வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் இருப்பார் என்றும் அவரை குணப்படுத்த முடியாது எனவும் அவர்கள் சான்றளித்துள்ளனர்.

ஒரு வயது குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பெண்

30.09.2012.By.Rajah.அபுதாபியில் ஒரு வயது குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக வேலைக்கார பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரேபியர் ஒருவரின் வீட்டில் ஆசியாவை சேர்ந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று கணவன், மனைவி இருவரும் வெளியே சென்ற பிறகு அந்த குழந்தையை கீழே படுக்க வைத்து, அவன் மீது ஏறி உட்கார்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
அப்போது அக்குழந்தை கதறி அழுததும், குழந்தையை அடித்துள்ளார். பின்னர் தலையணையை எடுத்து குழந்தையின் வாயில் அமுத்தி அடக்கப் பார்த்துள்ளார்.
இந்த செயல்கள் அனைத்தும் வீட்டில் இருந்த ரகசியக் கமெராவில் பதிவாகி விட்டது. அந்தப் பெண் நிர்வாண கோலத்தில் குழந்தையை நாசப்படுத்திய காட்சியை பெற்றோர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
அதை போட்டு காட்டிய போது, நான் தான் இதைச் செய்தேன் என்று அப்பெண் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அப்பெண்ணுக்கு 15 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இளம் கால்பந்தாட்ட வீரரை குத்தி கொன்ற 14 வயது பெண் கைது

30.09.2012.By.Rajah.தெற்கு லண்டனில் இளம் கால்பந்தாட்ட வீரரை கத்தியால் குத்தி கொன்றதாக 14 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிக்ஸ்ட்டன் நகரில் லோபோரோ எஸ்டேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே 15 வயது கால்பந்தாட்ட வீரர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், இறந்து கிடந்தார்.
இக்கொலைக்கும், 14 வயது இளம் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததையடுத்து, அப்பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட இந்த பெண் நீதிமன்றத்திற்கு நாளை அழைத்து வரப்படுவாள் என்று பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் 16 வயது சிறுவன் ஒருவனை கைது செய்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே என் மகனை கொலை செய்த நபரை யாராவது பார்த்திருந்தாலோ, இக்கொலை குறித்து யாருக்கும் ஏதேனும் விபரம் தெரிந்தாலோ உடனடியாக பொலிசாரிடம் தெரிவிக்கும்படி இறந்து போன சிறுவனின் தாய் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிறந்து, 20 நாட்களேயான பெண் குழந்தை விற்க முயற்சி. தாய், புரோக்கர்அதிரடி கைது


 Sunday30September2012.By.Rajah.பிறந்து, 20 நாட்களேயான பெண் குழந்தையை, 5,000 ரூபாய்க்கு விற்க முயன்ற தாய் மற்றும் புரோக்கரை போலீஸார் கைது செய்தனர்.திருச்சி உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். கார் டிரைவர். இவரது மனைவி கலைவாணி, 20. கலைவாணி, கர்ப்பமாக இருந்த போது அவரது கணவர் பிரிந்து சென்று விட்டார்.கடந்த, 20 நாட்களுக்கு முன், கலைவாணிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. கணவர், உறவினர்கள் துணை இல்லாததால், குழந்தையை வளர்க்க முடியாமல் கலைவாணி கஷ்டப்பட்டார்.முதலியார்சத்திரம் நடுத்தெருவைச் சேர்ந்த ராஜூ மனைவி பானு, 27விடம், கலைவாணி தன் நிலையை கூறினார். "குழந்தையை யாரிடமாவது விற்றுவிடலாம்' என, பானு ஆலோசனை கொடுத்தார்.

பீமநகர் கோரிமேடு கூனிபஜாரைச் சேர்ந்தவர் பரமசிவம்- முத்துலட்சுமி தம்பதியருக்கு, மூன்று மகன்கள். பெண் குழந்தை இல்லாததால், பானு, கலைவாணியின் பெண் குழந்தையை, முத்துலட்சுமியிடம் கொண்டு போய் கொடுத்தார்.முத்துலட்சுமிக்கும், அவரது மகன்களுக்கும், குழந்தையை பிடித்திருந்தது. குழந்தையை வளர்க்கும் எண்ணத்துடன் இருந்த முத்துலட்சுமியிடம், பானு, 5,000 ரூபாய் கேட்டார். அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி, பாலக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.பாலக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து, பெண் குழந்தையை பணத்துக்கு விற்க முயன்ற பானு, குழந்தையின் தாய் கலைவாணி ஆகியோரை கைது செய்தனர்.திருச்சி அரசு மருத்துவனையில் உள்ள, அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தையை ஒப்படைத்தனர்.

ஆயிரக்கணக்கிலான மக்கள் திரண்டிருந்தனர் வல்லிபுர ஆழ்வாரின் திருவிழாவில்!


Sunday30September2012.By.Rajah.பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடை சூழ வல்லிபுர ஆழ்வாரின் தீர்த்த உற்சவம் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

வல்லிபுர ஆழ்வாரின் திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 15 நாளான
நேற்று தீர்த்த உற்சவம் வழமை போல பக்தர்களின் ஆரோகரா கோசத்துடன் கடலில் நடைபெற்றது.

தீர்த்த உற்சவத்தைக் காண்பதற்காக பலபாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கிலான மக்கள் திரண்டிருந்தனர்.

 

29 September 2012

மனித உரிமை மாநாட்டில் நிச்சயம் இலங்கைக்கு ௭திராக கடும் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்!வசந்த பண்டார


Saturday29September2012.By.Rajah. இலங்கைக்கு அண்மையில் விஜயத்தை மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் ஹெனி மெகாலி தலைமையிலான குழு வரும் 2013 மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் நிச்சயம் இலங்கைக்கு ௭திராக கடும் தொனியிலான அறிக்கையை சமர்ப்பிக்கும் ௭ன்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு ௭திராக பிரேரணை கொண்டு வரப்படுமானால் அதற்கான முழுப் பொறுப்பையும் வெளிவிவகார அமைச்சர் ஜீ. ௭ல். பீரிஸே ஏற்றுக்கொள்ள வேண்டும் அத்துடன், ஐ.நா. வில் இலங்கையை ஆதரித்த நாடுகளை அரசாங்கம் நட்டாற்றில் விட்டுவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெளிவுபடுத்துகையில்,
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார்.
இலங்கைக்கு ௭திராக பிரேரணை முன் வைக்கப்பட்டிருக்கும் இவ்வாறானதோர் பிரேரணையூடாக யுத்தக் குற்றச்சாட்டு விசாரணைகளுக்கான கடும் அழுத்தத்தை பிரயோகிப்பதே மேற்கத்திய நாடுகளின் திட்டமாகவிருந்தது.
இவ்வாறானதோர் சூழ் நிலையிலேயே ஜனாதிபதி ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொண்டார்.
ஆனால் இலங்கைக்கு அண்மையில் விஜயத்தை மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் தொழில்நுட்பக் குழுவான ஹெனி மெகாலி தலைமையிலான குழு ௭திர்வரும் 2013 மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் நிச்சயம் இலங்கைக்கு ௭திராக கடும் தொனியிலான அறிக்கையை சமர்ப்பிக்கும்.
இதன் பின்னர் இலங்கை தொடர்பான யுத்தக் குற்றங்களுக்கான சர்வதேச புலன் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு அக்குழு இங்கு வரும் சாத்தியங்களும் உள்ளன.
அத்தோடு அவ்வாறான புலன் விசாரணைக்குழு இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளாது விசாரணைகளை நடத்தக் கூடிய அதிகாரமும் உள்ளது.
இதுவே நாம் ௭திர்நோக்கியிருக்கும் பயங்கரமான நிலைமையாகும்.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு ௭திராக அமெரிக்கா பிரேரணையை கொண்டு வந்தபோது ௭மக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டோம்.
அப்போது 13 நாடுகள் அமெரிக்காவின் பிரேரணையை ௭திர்த்து ௭மக்கு ஆதரவு வழங்கியது. அமெரிக்காவின் பிரேரணையை ௭திர்த்தே ஆதரவு கேட்டோம். ஆனால் இன்று ௭ன்ன நடந்துள்ளது ௭ன்று கேள்வி ௭ழுப்பினார்.

யாழில் கொள்ளைச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளது!


Saturday29September2012.By.Rajah.யாழ்ப்பாணத்தில் சென்ற வாரத்தில் மட்டும் 56 கொள்ளைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுண்டுக்குழிப் பகுதியில் கடை உடைக்கப்பட்டு 17,200 பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன,
டக்கா வீதியிலுள்ள கடை ஒன்றில் 21,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன, சுன்னாகம் குப்பிளான் கிழக்கு பகுதியில் வீட உடைக்கப்பட்டு 2,77,500 பெறுமதியான வீட்டுப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன, சாவகச்சேரியில் முத்துக்குரார் கடை உடைக்கப்பட்டு நிறப்பூச்சு திருடப்பட்டுள்ளது.
கைதடி தொழில் பயிற்சி நிலையத்திலுள்ள கணினி உதிரிபாகங்கள் கொள்ளயிடப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரப்பகுதியில் பட்டப்பகலில் கடை உடைக்கப்பட்டு 12,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியில் சென்று கொண்டு இருந்த பெண்ணின் தங்கச்சங்கிலி மோட்டார் சைக்கிளில் சென்ற இனம் தெரியாத நபர்களினால் அறுத்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 55,000 ரூபா என முறையிடப்பட்டுள்ளது.
கோப்பாய் பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த கொள்ளையர் குழு வீட்டைத் தீவைத்து கொழுத்திவிட்டு வீட்டில் உள்ள மோட்டார் சைக்கிள்களைத் திருடிச் சென்றுள்ளது. இச் சம்பவதுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டு யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்

கணவன் மனைவிக்கு இடையில் சண்டை குழந்தை அடித்துக் கொலை!


Saturday29September2012.By.Rajah.இரண்டு வயது மற்றும் 2 மாதம் நிரம்பிய குழந்தையை தாக்கி கொலை செய்த சந்தேகத்தில் கணவன் - மனைவி ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகலெவ - வீரகொல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் இக்கொலை இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த குழந்தையை அதன் தந்தை கற்குகை ஒன்றுக்குள் மறைத்து வைத்துள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து குழந்தையை பெற்றுத் தருமாறு தாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து குழந்தை கொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் குருநாகல் சட்ட வைத்திய அதிகாரி காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மீகலெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு!


Saturday29September2012.By.Rajah.கிளிநொச்சி-கொக்காவில் பகுதியில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தபோது கனரக வாகனம் மோதியதில் மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்வம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த தம்பிராசா எழில்வேந்தன்(வயது19) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். வாகனங்களை மறித்து விட்டுக் கொண்டிருந்த சமயம் பின்னால் வந்த பக்கோ கனரக வாகனம் இளைஞரின் மீது மோதி அவர் மீது ஏறியுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். தற்போது இவரது சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணை களை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை வீதிப்புனரமைப்பினால் இடம்பெற்ற 4வது விபத்துச்சம்பவமும், உயிரிழப்புச் சம்பவமும் இதுவாகும், இதற்குக் காரணம் வீதிப்புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள் ள தென்னிலங்கை நிறுவனங்கள் போதியளவு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்வதில்லை.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து பொலிஸாரும், பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் கூட நடவடிக்கை எடுப்பதில்லை, கண்டுகொள்வதுமில்லை என்பது இங்கு குறிப்பிடத்ததக்க விடயமாகும்.

யாழில் கொள்ளைச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளது!


Saturday29September2012By.Rajah..யாழ்ப்பாணத்தில் சென்ற வாரத்தில் மட்டும் 56 கொள்ளைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுண்டுக்குழிப் பகுதியில் கடை உடைக்கப்பட்டு 17,200 பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன,
டக்கா வீதியிலுள்ள கடை ஒன்றில் 21,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன, சுன்னாகம் குப்பிளான் கிழக்கு பகுதியில் வீட உடைக்கப்பட்டு 2,77,500 பெறுமதியான வீட்டுப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன, சாவகச்சேரியில் முத்துக்குரார் கடை உடைக்கப்பட்டு நிறப்பூச்சு திருடப்பட்டுள்ளது.
கைதடி தொழில் பயிற்சி நிலையத்திலுள்ள கணினி உதிரிபாகங்கள் கொள்ளயிடப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரப்பகுதியில் பட்டப்பகலில் கடை உடைக்கப்பட்டு 12,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியில் சென்று கொண்டு இருந்த பெண்ணின் தங்கச்சங்கிலி மோட்டார் சைக்கிளில் சென்ற இனம் தெரியாத நபர்களினால் அறுத்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 55,000 ரூபா என முறையிடப்பட்டுள்ளது.
கோப்பாய் பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த கொள்ளையர் குழு வீட்டைத் தீவைத்து கொழுத்திவிட்டு வீட்டில் உள்ள மோட்டார் சைக்கிள்களைத் திருடிச் சென்றுள்ளது. இச் சம்பவதுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டு யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் கவனிக்கப்படவில்லை: ஐ.நா சபையில் கரன் பார்கர் அம்மையார்!


Saturday29September2012.By.Rajah.இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கும் விடுதலை புலிகளுக்கும் எதிராக சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்ட பாரியளவிலான மனித உரிமைச் சட்ட மீறல்கள் பயனுள்ள முறையில் இன்னமும் கவனிக்கப்படாமல் உள்ளதென்பதனை ஐ.நா மனித உரிமைச்சபையோருக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என மனித உரிமை பேராளர் கரன் பார்கர் அம்மையார் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்துள்ள ஜெனீவா- ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 21வது கூட்டத் தொடரில் உரையாற்றும்போதே அவர் இக்கூற்றினைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான நீதியினைக் கோரி ஐ.நா மனித உரிமைச் சபையில் அவர் ஆற்றிய உரையில், எங்களின் பார்வையில் சிறிலங்கா அரசின் முயற்சிகள்
உண்மையை கண்டறிதல், நீதி வழங்கல், நட்ட ஈடு வழங்கல், மேலும் இவை நடக்காதவாறு செய்தல் ஆகிய விடயங்களிலும் போதாமையாக உள்ளதோடு உண்மையை கண்டறிவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் அது ஆபத்தானதாகும் என ஐ.நா மனித உரிமைச் சபையோருக்கு எடுத்துரைத்துள்ளார்.
இலங்கைத்தீவில் 100 000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் உயிர் இழந்ததை சிறிலங்கா அரசாங்கம் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனைச் சுட்டிக்காட்டிய கரன் பார்கர், “சிங்கள வெற்றிப் பெருமிதம்” என்று ஐ.நா பொதுச் செயலரின் நிபுணர் குழுவினர் கூறியதைப் நினைவில் கொள்ளும் போது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் உண்மை, நீதி, நட்ட ஈடு, தீர்வு என்பன கிடைக்கப் போவதில்லை என்ற அச்சத்தினையும் ஐ.நா மனித உரிமைச் சபையோருக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைச்சபையின் சிறப்பு கண்காணிப்பாளர்களை சிறிலங்காவுக்கு விரைவில் செல்ல ஐ.நா அனுமதி கோரும் என நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.
கரன் பார்கர் அம்மையார், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச் சபைக்கான வளஅறிஞர் குழுவின் பிரதிநிதியாகவும் நா.த.அரசாங்கத்தின் மதியூரைஞர் குழுவின் பிரதிநிதியாகவும் உள்ளார்.

28 September 2012

இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களால் செய்யப்பட்ட புட்பால் ஆர்டரை கேன்சல் செய்தது ஆஸ்திரேலியா நிறுவனம்.



Friday28September2012By.Rajah.ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ளது ஷெரின் புட்பால் கம்பெனி. இந்த கம்பெனி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள புட்பால் தயாரிப்பு கான்ட்ராக்டரிடம் புட்பால் தைத்து கொடுக்க ஆர்டர் கொடுத்தது. அதன்படி, புட்பால்கள் தைத்து அனுப்பப்பட்டன.
அவை ஆஸ்திரலியாவின் பல பகுதிகளில் விற்பனையாயின. மெல்பர்ன் நகரில் வசிக்கும் 6 வயது சிறுவனின் தந்தையும் ஒரு புட்பால் வாங்கி உள்ளார். அதில், தையல் ஊசி ஒன்று வெளியில் நீட்டிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஷெரின் நிறுவனத்தில் புகார் தெரிவித்தார்.
இதே போல் வாடிக்கையாளர்கள் சிலரும் புகார் கூறியதால், உடனடியாக ஷெரின் நிறுவனம் தீவிர விசாரணை நடத்தியது. அப்போது, ஜலந்தரில் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தி புட்பால் தயாரித்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஷெரின் நிறுவன நிர்வாக இயக்குனர் கிறிஸ் லம்பெர்ட் கூறுகையில், இந்த ஆண்டு மட்டும் 9,000 புட்பால்களை தைத்து கொடுக்க இந்திய கான்ட்ராக்டருக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அவை குழந்தை தொழிலாளர்களால் தைத்து வழங்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. எனவே, அவற்றை நிராகரித்து விட்டோம். மேலும், 4.5 லட்சம் புட்பால் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அதையும் ரத்து செய்துவிட்டோம் என்றார்

இலங்கை,இந்தியா ஆகிய நாடுகளில் இருந்த பெண்கள், துபாயில் விபச்சாரம்!

          
 
Friday28September2012.By.Rajah.இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து பெண்களை துபாய்க்கு அனுப்பி அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த விபசார வர்த்தக செயற்பாடு ஒன்று குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய குற்றப் புலனாய்வுத்துறையினர் இது தொடர்பில் பூனலூரில் சாந்தா என்ற பெண் முகவர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
கடந்த 5 வருடங்களில் மாத்திரம் தாம் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து 120 பெண்களை துபாய்க்கு அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல பெண்கள் ஒரு கடவுச்சீட்டை பயன்படுத்தி துயாய்க்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வேலைவாய்ப்பு என்றுக்கூறி அனுப்பப்பட்ட பெண்கள் துபாயில் விபசார தொழில்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண்களி;ல் பலர் நாடு திரும்பியுள்ள போதும் சமூகத்துக்கு பயந்து பொலிஸில் முறைப்பாடுகளை செய்யவில்லை.
எனினும் இந்தியாவில் நான்கு பெண்கள் பொலிஸில் முறைப்பாட்டை செய்துள்ளனர்.
இதனையடுத்து இந்த வியாபாரத்துடன் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

27 September 2012

அபிவிருத்தி என்ற பெயரில் பாடசாலைக் கட்டடம் உடைப்பு; பணி நடக்கவில்லை என புத்திஜீவிகள் விசனம்

28.09.2.12.By.Rajah.கிளிநொச்சி மத்திய கல்லூரி போரினால் சேதமடைந்த கட்டடத் தொகுதி அபிவிருத்தி என்ற பெயரில் உடைக்கப்பட்டு பெருந்தொகை நிதி செலவிடப்பட்டு வருகின்றதே தவிர, எந்த அபிவிருத்தியும் ஏற்படவில்லையென கிளிநொச்சியின் புத்திஜீவிகள் விசனம் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த 1996 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் காரணமாக சேதமடைந்த கிளிநொச்சி மத்திய கல்லூரியின் இரு மாடிக் கட்டடம் கடந்த ஆண்டு இறுதிவரை புனரமைப்புப் பணிகள் எதுவும் இன்றியே இருந்துள்ளது. சுமார் பதினொரு வகுப்புகளின் கற்பித்தல் செயற்பாடுகளும் மேற்படி கட்டடத்தினுள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் மத்திய கல்லூரியின் மேற்படி குறித்த கட்டடத்தினை புனரமைப்புச் செய்வதாகக் கூறி அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியைப் பெற்று கட்டடத்தைச்சூழ வேலியொன்றும் அமைக்கப்பட்டது.
தற்போது வேறு ஒரு ஒப்பந்தகாரர் மூலமாக மேலும் நிதி ஒதுக்கப்பட்டு இடிபாடுகள் அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சுமார் பதினொன்று வரையான வகுப்புகள், பல்வேறு சிரமங்களின் மத்தியில் இங்கு இயங்கி வருகின்றன.
கடந்த ஜனவரியில் குறித்த பாடசாலைக்கு மூன்று மாத காலத்துக்குள், கட்டடம் அமைக்கும் பணிகள் நிறைவு பெறுமெனக் கூறிய போதும் ஒன்பது மாதங்களாகியும் எந்த அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் ஒருநாள் பொழுதை கழிக்க ஏலம் விடப்பட்ட ஐந்து அழகிய பெண்கள்

          



27.09.20.12.By.Rajah.மலேசியாவில் புகழின் உச்சியில் உள்ள ஐந்து பெண்கள், கூவிக் கூவி ஏலம் விடப்பட்டனர். முன்னாள் "மிஸ் மலேசியா'வை இந்திய வம்சாவளி வழக்கறிஞர், ஏலம் எடுத்து பெருமிதம் அடைந்தார்.

மலேசியாவைச் சேர்ந்த, "அன்டிம்சியா' நிதி மையம், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு உதவி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியாக, மலேசியாவின் பிரபல பெண்கள் ஐந்து பேரை, ஏலம் விடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இந்த ஏலத்தில் விடப்பட்ட பிரபலங்களில், முன்னாள் "மிஸ் மலேசியா' நாடியா ஹெங்கும் ஒருவர். இவரை இந்திய மதிப்பில், 11 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தவர் இந்திய வம்சாவளி வழக்கறிஞர் திபேந்திர ராய்,23.

ஏலத்தில் வென்ற பெருமையுடன், நெஞ்சை நிமிர்த்தி, ராய் பேசுகையில், "நாடியா ஆச்சரியப்பட வேண்டும் என்பதற்காகத்தான் ஏலம் எடுத்தேன்' எனத் தெரிவித்தார்.

நாடியா கூறுகையில், "ஏலத்தில் என்னை விற்றதில், துளி கூட வருத்தம் இல்லை. நல்ல காரியத்துக்காகப் பணம் பயன்படும் என்ற திருப்தியே முக்கியம்' என்றார்.

இருப்பினும், நாடியாவை விட அதிக விலைக்கு ஏலம் போன பிரபலம், எட்மண்ட் பான். இவரை ஆடம் லூ, 22 ஆயிரம் ரூபாய்க்கு வென்றார்.ஏலம் போனவர்கள், வென்றவர்களுடன் ஒரு நாள் பொழுதைக் கழிப்பர்.

உலக வெப்பமயமாதலின் எதிரொலி: 10 கோடி பேர் உயிரிழக்க நேரிடும் அபாயம்

27.09.2012.By.Rajah.உலக வெப்பமயமாதல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், 2030ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் இறக்க நேரிடும் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 2010 மற்றும் 2030ஆம் ஆண்டில் வானிலை மாற்றத்தால் மனித இனம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து டாரா என்ற மனித இன நலம் சார்ந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் வாயுக்கள் அதிகளவில் வெளியிடப்படுவதால், உலகில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது, துருவப் பகுதிகளிலும் பனி உருகுகிறது.
இதனால் வறட்சி, கடல் நீர் மட்டம் உயர்தல் போன்ற அபாயங்கள் ஏற்படும். தற்போது காற்று மாசு, பசி, நோய் போன்றவற்றால் 50 லட்சம் பேர் ஆண்டுதோறும் இறக்கின்றனர்.
பெட்ரோலியப் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் 2030ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 60 லட்சமாக உயரும்.
இவர்களில் 90% பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அடுத்த 10 ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 10 கோடி பேர் உயிரிழக்கக்கூடும்.
தொழிற்துறைகள் வளர்வதற்கு முன்பு இருந்ததை விட இப்போது 0.8 சதவீதம் அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு கேன்கன் சுற்றுச்சூழல் மாநாட்டின் போது, உலக வெப்பத்தை 2 சென்டிகிரேட் வரை குறைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புக்கொண்டன.
ஆனால், மாசு ஏற்படுத்தும் வாயுக்கள் அளவைப் பார்த்தால் 2 சென்டிகிரேட் வெப்பத்தை குறைப்பது கூட போதுமானதாக இருக்காது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தனது புதிய Smart Phone-களை அறிமுகப்படு​த்தியது Pantech

27.09.2012.By.Rajah.[புகைபடங்கள்],.வளர்ந்து வரும் கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Pantech ஆனது தனது புதிய வடிவமைப்பில் உருவான Vega R3 Smart கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியது. கூகுளின் Android 4.0 Icecream Sandwich இயங்குதளத்தில் செயற்படும் இக்கைப்பேசிகள் 1280 x 720 Resolution உடையதும் 5.3 அங்குல அளவுடையதுமான Natural IPS Pro LCD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் இதன் Processor-ஆனது Qualcomm Snapdragon S4 வகையைச் சார்ந்ததாகக் காணப்படுகின்றது.
அத்துடன் பிரதான நினைவகமான RAM 2GB இனை கொண்டுள்ளது, இவற்றுடன் 13 Mexa Pixels உடைய அதி துல்லியமான கமெரா இணைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவை தவிர ஏனைய கைப்பேசி மின்கலங்களை விடவும் குறைந்த நேரத்தில் சார்ஜ் செய்து நீண்ட நேரம் பாவனை செய்யக்கூடிய 2600mAh மின்கலத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

கை, கால் வலிகளை குணப்படுத்தும் உப்பு கரைசல்

வியாழக்கிழமை, 27 செப்ரெம்பர் 2012கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உப்பு கரைத்த நீரில் குளியுங்கள், எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து போகும் என சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடிபடும் போது அல்லது கிருமி தொற்று ஏற்படும் போது, உடலில் உள்ள செல்கள் எவ்வாறு விரிவடைந்து எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகின்றன என்பது பற்றி மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
எலி ஒன்றின் உடலில் அடிபட்ட இடத்தில் ஊசி மூலம் உப்புக் கரைசல் செலுத்தப்பட்டது. அப்பகுதியில் இருந்த செல்கள் விரிவடைந்து உப்பு நீரை கிரகித்துக் கொண்டதால் வீக்கம் குறைந்தது.
இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உப்பு நீரின் மகத்துவத்தை உணர்த்தின. உப்புக் கரைத்த நீர், கை, கால் மூட்டு வலி, எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணத்தை வழங்குகின்றன.
இதை பயன்படுத்தும் போது, பக்க விளைவு ஏதும் ஏற்படுவதில்லை. சமையலுக்கு பயன்படும் சாதாரண உப்பைக் கூட இம்மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம்.
கை, கால், மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, அப்பகுதியில் செல்கள் விரிவடைவதால் வீக்கம் ஏற்படுகிறது. அப்பகுதியில் உப்புக் கரைசல் செலுத்தப்படும் போது வீக்கம் குறைவது கண்டறியப்பட்டு உள்ளது.
உப்பு நீரை ஊசி மூலம் செலுத்துதல், உப்பு நீரில் ஊற வைத்த துணியால் பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றுதல் அல்லது அதே நீரைக் கொண்டு பிரச்னைக்குரிய இடத்தில் நனையச் செய்தல் போன்ற எல்லா முறைகளும் வலி வீக்கத்தைக் குறைக்கின்றன.
கை, கால் மூட்டு பிரச்னை உள்ளோர் இயற்கையான வெந்நீர் ஊற்றுகளுக்குச் சென்று குளித்து நிவாரணம் பெறுகின்றனர்.
உண்மையில் வெந்நீர் ஊற்றுகளில் அதிகளவு உப்பு கலந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே மூட்டு வலியால் அவதிப்பட்டோருக்கு நிவாரணம் கிடைத்து உள்ளது என்பதுவும் தெரியவந்துள்ளது.

180 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள்

27.09.2012.By.Rajah.தற்போது தடுப்புக் காவலில் உள்ள 500 முன்னாள் புலிகளில் 320 பேர் மட்டுமே புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவர். எஞ்சிய 180 போராளிகளும் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
போரின் முடிவில் 12,000 விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். இவர்களில் 11,500 முன்னாள் போராளிகள், பல்வேறு கட்டங்களாகப் புனர்வாழவு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது 500 பேர் மட்டுமே தடுப்புக்காவலில் உள்ளனர்.
இவர்களில் 320 பேருக்கு நீண்டகாலப் புனர்வாழ்வுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறன். அது முடிந்ததும் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவர். ஆனால் எஞ்சியுள்ள 180 பேர் விடுவிக்கப்படமாட்டார்கள். அவர்கள் பாரதூரமான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றார்

பரீட்சை நிலையம் இடமாற்றம்

27.09.2012.By.Raja.இலங்கை வங்கியாளர் சங்கத்தினால் யாழ். திருக்குடும்ப கன்னிய மடப் பாடசாலையில் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. சி.பி.எவ். டி.பி.எவ். ஆகிய பரீட்சைகள் வரும் சனி, ஞாயிறு மற்றும் ஒக்ரோபர் 6 ஆம் திகதி ஆகிய நாள்களில் நடைபெற ஏற்பாடாகியிருந்தன.
இந்தப் பரீட்சைகள் குறித்த தினங்களில் யாழ். கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்பாபிலவு மக்களை கவனிப்பார் யாருமில்லை அவலவாழ்வு தொடர்கிறது

27.09.2012.By.Rajah.சொந்த இடத்தில் மீள் குடியமர்வு எனக் கூறி நேற்றுமுன்தினம் நந்திக் கடல் அருகே சூரியபுரம் காட்டுப் பகுதியில் படையினரால் இறக்கிவிடப்பட்ட கேப்பாபிலவைச் சேர்ந்த 110 குடும்பங்களும் தொடர்ந்தும் அங்கு பெருந்துன்பங்களை அனுபவிப்பதுடன் உதவிகள் எதுவுமின்றி அல்லல்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அடிப்படை வசதிகள் இல்லாமையால் இந்தக் குடும்பங்கள் அந்தரித்த நிலையில் காணப்படுவதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன. நேற்றுமுன்தினம் படையினரால் அந்தப் பகுதியில் இறக்கிவிடப்பட்ட இந்தக் குடும்பங்களுக்கு குடிதண்ணீர் மற்றும் உணவு வசதிகள் நேற்று சிறிதளவே வழங்கப்பட்டதாகவும் அங்குள்ள முழு மக்களுக்கும் உதவிகள் கிடைக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
பகலில் கடும் வெப்பமான கால நிலையால் சிறுவர்கள் வெயிலில் வாடி வதங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் மலசல கூடங்கள் எதுவும் இல்லாமையால் பெண்களும் சிறுவர்களும் பெரும் அல்லல் படுகின்றனர்.
இந்த அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர் ஒருவர் உதனிடம் தெரிவித்தார். மர நிழல்களிலும் சிறிய கூடாரங்களை அமைத்தும் தாம் தங்கியுள்ளதாகவும் இரவில் பாம்புகளின் தொல்லை தம்மை அச்சத்துக்குள்ளாக்கியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
இன்னும் எவ்வளவு காலத்துக்கு இவ்வாறான ஒரு அபாய நிலையில் குடியிருக்க நேருமோ எனவும் அவர் அச்சம் வெளியிட்டார். போதிய குடிதண்ணீரோ உணவோ இல்லாமல் மக்கள் பரிதாப நிலைக்கு உட்பட்டிருப்பதாகவும் இது குறித்து அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தம்மைக் காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் கோரினார்

26 September 2012

பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின்


 26.09.2012.By.Rajah.இடைவிடாத முயற்சியே வெற்றிக்குக் காரணம்; யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர்
நடத்து முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளமை எனது ஆசிரியர்களின் மாணவர்களின் விட முயற்சியினால் கிடந்த வெற்றி என யாழ் .இந்து ஆரம்பப் பாடசாலையின் அதிபர் சு.தியாகலிங்கம் தெரிவித்தார்.

வட மாகாணத்திலே யாழ். இந்து ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சை பெறுபேற்றில் முதல் நிலை பெற்றுக் கொண்டமை தொடர்பாக ஒன்லைன் உதயனுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழ் இந்து ஆரம்ப பாடசாலையில் இருந்து இம்முறை பரீட்சைக்கு 309 மாணவர்கள் தோற்றியுள்ளனர். இதில் 143பேர் சித்தியடைந்துள்ளனர் இது எமது பாடசாலைக்கு கிடந்த மிகப் பெரும் வெற்றியாகும்

அத்துடன் கலைச்செல்வன் கீர்த்திகன் 191 புள்ளிகளையும், ஸ்ரீகந்தராசா ஆரணி 190 புள்ளிகளையும் பெற்று மாவட்ட நிலையில் முன்னனியில் உள்ளனர் என அவர் தெரிவித்தார்.[புகைப்படங்கள்¨]
 
 
 


 

பட்டு போன்ற சருமத்திற்கு

26.09.2012.By.Rajah.உடல் ஆரோக்கியத்திற்கு பால் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த பால் சருமத்திற்கு எவ்வளவு நல்லது என்பது தெரியுமா? பாலில் புரோட்டீன், கால்சியம், லாக்டோஸ், கொழுப்பு, வைட்டமின் ஏ, பி12, டி மற்றும் ஜிங்க் இருக்கிறது.
இத்தகைய சத்துக்கள் இருப்பதால் அவற்றை சருமத்திற்கு பயன்படுத்தும் போது சருமம் மென்மையாகவும், ஈரப்பதமுள்ளதாகவும் இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் இவை சரும வறட்சி, சிவப்பு நிறம், அரிப்பு போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கிறது.
1. சருமத்தில் உள்ள பழுதடைந்த செல்களை மீண்டும் புதுப்பிக்க, 2 டேபிள் ஸ்பூன் பால், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்களும் வெளியேறிவிடும்.
2. பாலில் லாக்டிக் அமிலம் இருக்கிறது. இதனால் பாலை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.
ஆகவே 1/8 கப் ரோஸ்மேரி மற்றும 1 தாட்பூட் பழத்தை எடுத்து அரைத்து, ஒரு கப் பாலுடன் கலந்து, அடுப்பில் தீயை குறைவில் வைத்து 15 நிமிடம் வைத்துக் கிளறி, பின் ஆற வைத்து காட்டன் வைத்து முகத்திற்கு தடவி ஊற வைத்து பிறகு கழுவ வேண்டும்.
3. பாலின் நன்மைகள் உடனே தெரிய, பாதாமை பாலுடன் சேர்த்து அரைத்து, சிறிது ஆலிவ் ஆயிலை விட்டு, பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதில் ஆரஞ்சு தோலை அரைத்து, அதனுடன் கலந்து, முகம் மற்றும கழுத்திற்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
பிறகு ஐஸ் கட்டிகளால் 2-3 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள தூசிகள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.
4. ஈஸியான முறையில் பாலை வைத்து ஒரு ஃபேசியல் போன்று செய்ய வேண்டுமென்றால், அதற்கு கொதிக்க வைத்துள்ள பாலை ஓரளவு ஆற வைத்து, காட்டனால் முகத்திற்கு 3-5 நிமிடம் தேய்க்க வேண்டும்.
இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மட்டும் போவதோடு, சருமம் நன்கு அழகாகக் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் சருமம் நன்கு பளிச்சென்று சுத்தமாக காணப்படும்.
5. சரும வறட்சியை நீக்குவதற்கு, வாழைப்பழத்தை நன்கு மசித்து, பால் மற்றும் தேனுடன் கலந்து முகத்திற்கு தடவி காய வைக்க வேண்டும்.
காய்ந்ததும் சிறிது பாலை தொட்டு அதன் மேல் தேய்த்து மசாஜ் செய்து பிறகு கழுவ வேண்டும்.
சரும சுருக்கத்தை நீக்குவதற்கு பால் மற்றும் தேனை கலந்து, முகத்திற்கு தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
பின் அதனை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சருமம் நன்கு இறுக்கமடைந்து அழகாக காட்சியளிக்கும்

உங்களது கணனி திரை Automatic Screen Refresh ஆகும்படி செய்வதற்கு

26.09.2012.By.Rajah.உங்களது கணனியில் ஏதாவதொரு மாற்றத்தை செய்த பின்னர், கணனி திரை தானாகவே Refresh(Automatic Screen Refresh) ஆகும் படி செய்து கொள்ளலாம். இதற்கு முதலில் Start Menu-வில் சென்று RUN என்பதில் regedit என்று கொடுக்க வேண்டும்.
தற்போது உங்களுக்கு Registry Editor என்ற விண்டோ ஓபன் ஆகியிருக்கும்.
இதில் கீழே உள்ளது போன்று Update வரை செல்லவும்.
HKEY_LOCAL_MACHINESystemCurrentControlSetControlUpdateMode
சென்ற பின் வலது பக்கத்தில் உள்ள DWORD என்பதை கிளிக் செய்து, அதில் உள்ள Data Value என்பதில் 1 இற்கும் 5 இற்கும் இடையில் விரும்பிய இலக்கத்தை கொடுத்து கணனியை ஒருமுறை Restart செய்யவும்.
இனிமேல் கணனியில் ஏதேனும் மாற்றம் செய்தால் தன்னிச்சையாகவே கணனி திரையானது Refresh ஆகும்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிகள் வெளியீடு




புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2012,By.Rajah.2012ம் ஆண்டிற்குரிய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் அதன் அடிப்படையில் சகல மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகள் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் மாதம் 26 ம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் நாடு பூராகவும் அமைக்கப்பட்ட 2500 பரீட்சை நிலையங்களில் தோற்றியிருந்தனர். பரீட்சைப் பெறுபேறுகளுடன் வெட்டுப் புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளின் பிரகாரம் தமிழ் மொழி மூல மாவட்ட ரீதியிலான குறைந்த வெட்டுப் புள்ளிகள் வருமாறு,
கொழும்பு 149
முல்லைத்தீவு 145
கம்பஹா 149
மட்டக்களப்பு 147
களுத்துறை 149
அம்பாறை 147
கண்டி 149
திருகோணமலை 147
மாத்தளை 149
குருணாகல் 149
நுவரெலியா 145
புத்தளம் 143
காலி 149
அநுராதபுரம் 145
மாத்தறை 149
பொலன்னறுவை 145
அம்பாந்தோட்டை 140
பதுளை 146
யாழ்ப்பாணம் 148
மொனறாகலை 142
கிளிநொச்சி 146
இரத்தினபுரி 146
மன்னார் 146
கேகாலை 149
வவுனியா 146 –
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி அகில இலங்கை மட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று காலி ரிஜ்மன்ட் கல்லூரி மாணவனான கே.௭ஸ். கொடித்துவக்கு மற்றும் தலாத்துஓயா கனிஷ்ட பாடசாலை மாணவி ஆர்.௭ம்.ஏ.யு. மதுவந்தி ஆகியோர் முதலிடங்களைப் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் 196 புள்ளிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய மடட்டத்தில் தமிழ் மொழி மூல மற்றும் சிங்கள மொழி மூலமான அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களின தரவுகள் தற்போது தரப்படுத்தப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இப்பரீட்சை முடிவுகள் கொழும்பு மாவட்டப் பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் தூரப் பிரதேச பாடசாலைகளுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை ௭டுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இப்பரீட்சை பெறுபேறு வெளியிடுவதற்கு முன் பல தடவைகள் நுணுக்கமாகப் பரிசீலனைகள் பல செய்யப்பட்டு பெறுபேறுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகையால் இப்பரீட்சையின் விடைத்தாள்கள் மீள்பரிசீலனை செய்யப்படமாட்டாது ௭ன்றும் தங்களது பாடசாலையில் யாராயினும் பரீட்சார்த்தியின் பெறுபேறு நம்ப முடியாத வகையில் இருக்குமாயின் பரீட்சைகள் திணைக்களத்துக்கு அதிபரினாலேயே மனு செய்யப்பட வேண்டுமெனவும் இம்மனுக்கள் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் ஜயந்த புஹ்பகுமார சகல பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார்

சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளை இலங்கை சமநிலையில் பேண வேண்டும்: இராஜதந்திரிகள் கோரிக்கை

 
 
26.09.2012.By.Rajah.இலங்கை – சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளை சமநிலையில் பேண வேண்டும் என்று ராஜதந்திரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான மற்றும் பொது சேவைகள் பீடத்தின் பேராசிரியர் ஜயதேவ உயங்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்னரே சீனாவிடம், பங்களாதேஸ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளை இந்தியா இழந்து விட்டது.
இந்த நிலையில் இலங்கையையும் இழப்பதை இந்தியா விரும்பவில்லை.
இதற்கான முழு நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை அரசியல் இலாப நோக்கம் இன்றி, இரண்டு நாடுகளுடனும் சுமூக உறவினை முன்னெடுப்பதே இராஜதந்திரமாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவோ, சீனாவோ இலங்கையை கைவிடுவது என்பது, இலங்கைக்கே ஆபத்தானதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை தடுக்க இரகசிய மகஜர்

 
 
 
புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2012, By.Rajah.எதிர்வரும் 2013ம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை தடுக்க இரகசிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளருக்கு , ஏழு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களினால் இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், புலி உறுப்பினர்கள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை நடத்தல் உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அமர்வை நடத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தாருஸ்மன் அறிக்கை பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்துமாறு வலிறுத்த வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு இரகசிய மகஜர் அனுப்பி பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நிறுத்த முயற்சிப்போர் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

25 September 2012

இணுவில் அண்ணா தொழிலகம்

25.092012.By.Rajah.கடுமையான உழைப்பாலும் நேர்த்தியான தயாரிப்புக்களாலும் கடந்த 53 வருடங்களாக மக்கள் மனதில் நின்று வரும் ஒரு தொழில் அதிபர்தான் பொ.நடராசா. இவர் இந்த வாரம் ஒன்லைன் உதயனுக்கு அளித்த பேட்டியில் இருந்து சில சுவையான பகுதிகள். கேள்வி: "அண்ணா" உங்களைப் பற்றி சுருக்கமாகச் சொன்னால்.....? பதில்: பெயர் பொ.நடராசா. வயது 73. பிறப்பிடம் இணுவில். கற்றது 11ம் வகுப்பு வரை. ஆறு சகோதரிகளுடன் பத்து அங்கத்தவர்களை கொண்ட சாதாரண விவசாய குடும்பம். சொந்தம் என்று சொன்னால் வறுமைதான். இதுவே எனது கல்விக்கும் தடை போட்டது. ஆயினும் பிற் காலத்தில் நான் ஒரு தொழில் அதிபராக மாறுவதற்கும் உந்து சக்தியாக அமைந்தது. கேள்வி: "அண்ணா" தொழிலை தொடங்கும் எண்ணம் எப்படி வந்தது? பதில்: 16 - 17 வயதிலேயே தொழில் தேடி கொழும்பு வரை சென்றேன். அங்கே இங்கே என்று பல தொழில்களையும் செய்து பார்த்தேன். ஆனால் அவையேதும் எனது குடும்ப வறுமையை போக்க போதுமான வருமானத்தைப் பெற்றுத் தரவில்லை. இந்த நேரத்தில்தான் ஒரு நாள் (1959) எனது வீட்டாருக்கு மருந்து வாங்க அண்ணாமலை பரிகாரியிடம் சென்றேன். அவர் ஏதேட்சையாக என்னிடம் நலம் விசாரித்த போது எமது வறுமை மற்றும் தொழில் திருப்தி இன்மை என்று எல்லாவற்றையும் சொன்னேன். அவற்றை கேட்ட அந்த சித்த வைத்தியர், மூலிகை பற்பொடி தயாரிக்கலாமே என்ற யோசனையை சொன்னார். அவர் சொல்லித் தந்த வழி முறைகளை கையாண்டு மூலிகை பற் பொடியினை வீட்டிலேயே தயாரித்தோம். அதற்கு "அண்ணாமலை ஆயுள்வேதப் பற்பொடி" என அந்த சித்தரின் பெயருடன் சந்தைப்படுத்தினோம். பின் நாட்களில் இதுவே "அண்ணா பற்பொடி" என குடாநாட்டு சந்தைகளில் பிரபலமடைந்தது. கேள்வி: "அண்ணா" தொழில் பல்கிப் பெருகியது எப்படி? பதில்:ஆரம்பத்தில் இருந்தே மில்க் வைற் சோப் முதலாளி கனகராஜாவுடன் ஒரு நல்லவிதமான பழக்கம் ஏற்பட்டிருந்தது. அவர் எனது வறுமை நிலையினை நன்கு உணர்ந்து பல வகையிலும் உதவினார். கோப்பி தயாரிப்பதற்கான எண்ணத்தினை அவரே எனக்கு ஊட்டியதுடன் கோப்பி தயாரிக்கும் வழிமுறைகளையும் கற்றுத் தந்தார். பற்பொடியுடன் அண்ணா கோப்பியையும் வீட்டிலேயே தயாரித்து மிதி வண்டியில் கொண்டு திரிந்து விற்பேன். இதற்காக வடமராட்சி தென்மராட்சி என்று தூர பிரதேசங்களுக்கும் மிதி வண்டியிலேயே செல்ல வேண்டி இருந்தது. எனினும் இரவு பகலாக எமது வீட்டில் இடம்பெற்ற குடும்ப உழைப்பு வீணாகவில்லை. அண்ணா தயாரிப்புக்களிற்கு மக்கள் அதிகமாக கேள்வி ஏற்படுத்தினர். எனவே தொழிலை விரிவு படுத்த சிறிய அரைக்கும் இயந்திரத்தினை கொள்வனவு செய்தோம். அத்துடன் தொழில் தொடங்கி ஒரு வருடத்தில் ஒரு மோட்டார் வண்டியையும் வாங்கினோம். இதன் மூலம் குடாநாட்டின் எல்லா பகுதிகளிற்கும் அண்ணா தயாரிப்புக்களை சந்தைப்படுத்தினோம். அண்ணா உற்பத்திகளுக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து அண்ணா அரிசி, மா,மிளகாய், சரக்குத் தூள், ஜீவாகாரம், நீல பவுடர், சாம்பிராணி, விபூதி, இனிப்பு வகைகள் என "அண்ணா" என்ற வர்த்தக நாமத்தில் பலவகை பண்டங்களையும் தயாரித்தோம். இவற்றுக்கான மூலப் பொருட்களை உள்ளூரிலேயே பெற்றதோடு பல நூறு பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை வழங்கினோம். அடுத்து வந்த மூன்று ஆண்டுகளில் சொந்தமாக ஆலையை நிறுவி ஊழியர்களையும் வேலைக்கமர்த்தி ஓர் ஒழுங்கு படுத்தப்பட்ட அண்ணா தொழிலகத்தினை ஆரம்பித்தோம். இதற்காக வாகன தளபாடங்களையும் கொள்வனவு செய்து பயன்படுத்தினோம். இதனால் தொழில் ஆரம்பித்து ஐந்து வருடங்களிற்குள்ளேயே குடாநாடு - கொழும்பு - மலையகம் - தென்னிலங்கை என எமது சந்தைப்படுத்லை விரிவுபடுத்த முடிந்தது. கேள்வி: நீங்கள் எதிர் கொண்ட சவால்களில் மிக முக்கியமானது என்று எதைச் சொல்வீர்கள்? பதில்: உள்நாட்டு யுத்தமும் அதன் வழி வந்த இடப்பெயர்வுகளும்தான். 1995 ஐப்பசி மாதமன்று ஒரு நாள் "இன்னும் 24 மணி நேரத்தினுள் அனைவருமே குடாநாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும்!" என்ற ஓர் அறிவிப்பு பேரிடியாக வந்தது. அந்த நாட்களில் எல்லாம் விவசாயப்ப பண்ணை, தானியக் களஞ்சிய அறை, கைத்தொழிலகம், விற்பனை நிலையம், இயந்திர வாகன தளபட வசதிகள் என்று பெருமளவு வளங்களை குடாநாட்டில் கொண்டிருந்தோம். அவை அனைத்தையும் அப்படியே விட்டு விட்டு ஏதோ முடிந்ததை எடுத்துக்கொண்டு மீசாலை நோக்கி நகர்ந்தோம். பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி - வவுனிக் குளம் - ஜெயபுரம் - யாழ்ப்பாணம் என இடம்பெயர நேரிட்டது. இத்தகைய இடப்பெயர்வு நாம் வைத்திருந்த மனித பௌதீக நிதி வளங்களையும், சந்தை வாய்ப்புக்களையும் சீர் குலைத்தது. அத்துடன் எமது நம்பிக்கை எதிர்பார்ப்பு என்று அனைத்தையும் நாம் எங்கே ஆரம்பித்தோமோ (1959) அந்த இடத்திற்கே கொண்டு சென்றது. கேள்வி: இதில் இருந்து எப்படி மீண்டெழுந்தீர்கள்? பதில்: கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையினை எமது குடும்பத்திடம் இருந்து எந்த சக்தியாலும் முழுமையாக பறிக்க முடியவில்லை. நான் குடும்பம் என்று குறிப்பிடுவது எனது குடும்ப அங்கத்தவரோடு எப்போதுமே எம்மோடு இருக்கும் திறமையான ஊழியர்கள் மற்றும் வியாபாரிகளையும்தான். மீசாலைக்கு இடம்பெயர்ந்து நான்கு மாதங்களின் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பக் கூடிய ஒரு சூழல் தென்பட்டது. அப்போது எனது தம்பி விவேகானந்தன் ஒரு பகுதி வளங்களுடன் இணுவிலுக்கு மீண்டான். நான் ஒரு பகுதி வளங்களுடன் வன்னி நோக்கி இடம்பெயர்தேன். 2002ல் ஏ ஒன்பது வீதி திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜெயபுரத்தில் இருந்து பாரிய இழப்புக்களுடன் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தேன். வங்கியாளர்களின் கடன் உதவியுடனும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புடனும் முன்பு இருந்த முன்னேற்றகரமான நிலையினை நோக்கி படிப்படியாக எழுந்து வருகின்றோம். கேள்வி: இப்போது நீங்கள் அடைந்துள்ள நிலையினை சுருக்கமாகச் சொன்னால்.......? பதில்:மாவகை, தூள் வகை, ஊதுபத்தி வகைகள், பண்ணை விற்பனைப் பொருட்கள், கால்நடை தீவினம், இனிப்பு வகைகள் போன்ற பண்டங்களை தற்போது தயாரித்து வருகின்றோம். இவற்றை தயாரிக்கவும் சந்தைப்படுத்தவும் என உரும்பிராய் விவசாய பண்ணை, இணுவில் கைத்தொழிலகம், யாழ்ப்பாணம் மற்றும் இணுவில் மொத்த சில்லறை விற்பனை நிலையம் போன்றவை செயற்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 100 பேர் வரையில் நேரடியாகவும் பல நூறு பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அத்துடன் அண்ணா தயாரிப்புக்களிற்கு உதவியாக அச்சக வேலைகள் மற்றும் சர்வதேச வர்த்தக தொடர்புகளிற்காக "அண்ணா இன்ரநஷனல் பிரைவேட் லிமிடெட்" கொழும்பை தளமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. 1990 ல் வவுனியா பூந்தோட்டத்தில் அரசாங்கம் வழங்கிய தொழிற்பேட்டையிலும் உணவு பதனிடல் சார்ந்த தொழிற்சாலை ஒன்று "NTK இம்பக்ஸ்" எனும் பெயரில் இயங்கி வருகின்றது. இதே போல கந்தானையிலும் அண்ணா தயாரிப்புக்கள் இடம்பெறுவதோடு அவை நாடு பூராகவும் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் இங்கும் பல்லினம் சார்ந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்

கொழும்பு பங்குச் சந்தையின் போக்கு

25.09.2012.By.Rajah.கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாகவே முன்னேற்றம் கண்டு வருவதாக சந்தை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. எனினும், உண்மையில் அங்கே என்ன இடம்பெறுகின்றது? என்பதனை இந்தக் கட்டுரை ஆராய்கின்றது. கொழும்பு பங்குச் சந்தையின் கடந்த கால நிலை இலங்கையின் பங்குச் சந்தை மீதான சந்தேகங்கள் அல்லது குழப்பங்கள் காரணமாக கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 19 மாத காலமாக பங்கு வர்த்தக நடவடிக்கைகள் தொடர் வீழ்ச்சியினையே சந்தித்தன. எடுத்துக்காட்டாக, 2011 - பெப்ரவரியில் 7,800 எனக் காணப்பட்ட அணைத்து பங்கு விலைச் சுட்டெண், 2012 - யூலையில் 5,000 எனச் சரிவு கண்டது. இதேபோல, 3.5 பில்லியன் ரூபா எனக் காணப்பட்ட சராசரி நாளாந்தப் புரள்வு (The average daily turnover), 0.5 பில்லியன் ரூபாய் என வீழ்ச்சி கண்டது. அத்துடன், சுமார் 24,000 எனக் காணப்பட்ட நாள் ஒன்றுக்கான பங்கு வர்த்தகம், சுமார் 4,800 என மிகக் கீழான நிலைக்குச் சென்று கொண்டிருந்தது. கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலை இந்த நிலையில், சென்ற ஆகஸ்ட் மாதப் பிற் பகுதியில் இருந்து கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகளில் பல முன்னேற்றங்களை காண முடிந்தது. குறிப்பாக, அனைத்து பங்கு விலைச் சுட்டி 5,800 என தற்போது அதிகரித்துள்ளதுடன், சராசரி நாளாந்த புரள்வு மற்றும் பங்கு வர்தகங்கள் முறையே 1.6 பில்லியன் ரூபா மற்றும் 24,500 என மீண்டும் எகிறி வருகின்றன. பங்குச் சந்தையில் சென்ற சில மாதங்களாகக் காணப்பட்ட பின்னடைவினால் 710 பில்லியன் ரூபா பெறுமதியான பங்கு வர்த்தகம் மீதான முதலீடுகளை இழக்க நேர்ந்ததுடன், தற்போது இதிலும் 368 பில்லியன் ரூபா மீட்சி கஶகாண முடிந்துள்ளதாக சந்தைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. இந்த வகையில், இவை அனைத்தும் பங்குச் சந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிப் போக்கினை சமிஞ்ஜை செய்கின்றன. எனினும் இந்த முன்னேற்றங்கள் உண்மையானதா? சந்தைக் குறிகாட்டிகள் கொழும்பு பங்குச் சந்தையின் முன்னேற்றத்தினை பறை சாற்றினாலும் இதனை நம்புவதா? இல்லையா? என்பது தொடர்பாக தற்போதும் பல குழப்பங்கள் நிலவுகின்றன. குறிப்பாக, மேற்படி முன்னேற்றங்கள் செயற்கையான முறையில் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளதாக ஒரு சாரார் கருதுவதுடன், பங்குச் சந்தை நடவடிக்கைகளில் தற்போது தளர்த்தி விடப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகளே இத்தகைய வளர்ச்சிக்கு காரணம் என மறு சாரார் கூறுகின்றனர்

24 September 2012

ஜெனீவாவில் தற்போது நடைபெறும் பொங்கு தமிழ்: பெரும் மக்கள் கூட்டம் !

24.09.2012.ByRajah.ஜெனீவா ஐ.நா சபை முன்பாக முருகதாசன் திடலில் இடம்பெற்ற பொங்குதமிழ் 2012 நிகழ்வில் ஐரோப்பிய தேசமெங்குமிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.நண்பகல் 02.30 மணியளவில் ஜெனீவா புகையரத நிலையத்தின் அருகில் பறைகள் முழங்க வெண்சங்குகள் ஒலிக்க பொங்குதமிழ் பேரணி ஆரம்பமாகியது. தேசியத்தலைவர் அவர்களது முழு உருவப்படம் முன்னே செல்ல கலாச்சார நடனங்கள் மற்றும் தேசியக்கொடிகள் தாங்கிய இளையோர்களது அணிநடையுடன் தேசியத்தலைவர் அவர்களதும் தேசியக்கொடி மற்றும் போர்க்குற்றப் படங்களடங்கிய பதாகைகள் போன்றவற்றை மக்கள் ஏந்தியபடி பேரணி முருகதாசன் திடலை வந்தடைந்தது.

பின்னர் அகவணக்கம் இடம்பெற்று ஈகைப்பேரொளிகளுக்கான ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு பொங்குதமிழ் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. நிகழ்வில் பிரான்சு இனியம் நடனக்குழுவினரின் கலாச்சார நடனம் மற்றும் பொங்குதமிழ் எழுச்சி நடனங்களுடன் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த தமிழரல்லாத வேற்றினப் பிரதிநிதிகளும் சிறப்புரையாற்றியிருந்தனர். இந்நிகழ்வின் சிறப்பு வெளியீடாக எட்டுக் கவிஞர்களின் உணர்வுக்கவியில் ஏழு இசையமைப்பாளர்களின் எழுச்சி இசையில் இயக்குனர் வ.கௌதமனின் நெறியாள்கையில் உணர்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் மேற்பார்வையில் உருவான �வெல்வது உறுதி� எனும் இறுவெட்டு வெளியிடப்பட்டது.

சீரற்ற காலநிலை காரணமாக கொட்டும் மழையிலும் வாட்டும் குளிரிலும் மக்கள் மிகுந்த உணர்வெழுச்சியுடனும் உறுதியுடனும் நிகழ்வில் பங்குகொண்டிருந்தனர். கடந்த 18.05.2009ன் பின் ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்ட ஓர் மாபெரும் மீளெழுச்சியாகவும் பேரெழுச்சியாகவும் இப் பொங்குதமிழ் நிகழ்வு அமைந்திருந்ததாகவும் எமது விடுதலைக்கான அடுத்த கட்ட நகர்விற்கு மக்கள் தாம் தயாராகி விட்டதை சர்வதேச உலகிற்கு இடித்துரைத்திருக்கிறார்கள் எனவும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட பல்வேறு தரப்பினரும் கூறினர்.








 

கோடையில் சாப்பிட வேண்டியவை !

         
24.09.2'012.By.Rajah.இது தாகத்தைத் தணிக்கும். பசியினையும் போக்கும். வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை விரட்டும். வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் கற்கள் சேருவதைத் தடுக்கும் மருந்தாக உதவுகிறது. உடலில் புத்துணர்ச்சியைக் கூட்டுவதோடு, மனதிற்கும் எழுச்சி தருகிற பழம் இந்த தர்ப்பூசணி.

ஆரஞ்சு

பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் பயன்படும் ஆரஞ்சை ஆயுர்வேத சிகிச்சை முறை பெரிதும் கைக்கொள்கிறது. வாயைச் சுத்தமாக்குகிறது. காய்ச்சலுக்கும் அருமருந்து. அடிவயிற்று வலியைக் குறைக்கும். குடற்புழுக்களை அழிக்கும். எலும்புகளை வலுப்படுத்துகிறது.

சளி பிடித்துள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கலாம். இரவு படுக்கும் முன்பு ஒன்றிரண்டு ஆரஞ்சுப் பழங்களைத் சாப்பிட்டு விட்டுப் படுக்கலாம். காலையிலும் சாப்பிடலாம். இதனால் மலச்சிக்கல் உள்ளவர்கள் பெரிதும் பயன் அடையலாம். ஆஸ்துமா மற்றும் நெஞ்சக நோயாளிகளுக்கு ஆரஞ்சு நல்லது. காய்ச்சலின்போது, நோய்களுக்கு அருமருந்து ஆரஞ்சு, உடலுக்குத் தெம்பு கூட்டும், செரிமானத்தைச் சரியாக்கி, பசியைத் தூண்டும். குடல்களின் பாதையில் தொற்று நேராமல் பராமரிக்கும். குடல்களின் இயக்கத்திற்கு வலுச் சேர்க்கும். கர்ப்ப காலப் பெண்மணிகளுக்கு ஏற்படும் குமட்டலுக்கு சிறந்தது ஆரஞ்சு. செரிக்காத உணவால், வயிற்றில் பொருமலுடன் உள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறை குடிக்கவேண்டும். செரிமானச் சக்தியைக் கூட்டி, செரிமான உறுப்புகளை வலுவூட்டி வயிற்றுப் பிரச்னையைத் தீர்க்கும்.

சாத்துக்குடி

குளிர்ச்சியான இனிப்பான சுவையான பழம் சாத்துக்குடி. தாகத்தைத் தணிக்கும். வீரியத்தைக் கூட்டும். வயிற்றுப் பொருமல், வாயு, இருமல், வாந்தி, தண்ணீரற்றுப் போகும் வறட்சி நிலை, ரத்தத்தில் கழிவுப்பொருள் சேர்தல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது. வயிற்றில் அமிலத்தன்மை சேர்வதை இதிலுள்ள காரத்தன்மை குறைத்து, வயிறு எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலையும் மிகுதியாகக் கொண்டுள்ளது.

சளியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், சாத்துக்குடியின் சாறை வெந்நீரில் கலந்து, அல்லது இஞ்சிச் சாறுடன் சேர்த்துக் குடித்தால் நல்லது. காய்ச்சலின் போது, வெறுமனே சாத்துக்குடி சாறைக் குடித்தாலே போதும். உடலுக்கு வேண்டிய சக்தி கிடைத்துவிடும். அமிலத்தன்மையைத் தணித்து, பசியை உண்டாக்கும். செரிமானக் கோளாறுகளை வேகமாகப் போக்க வல்லது.

வெள்ளரிக்காய்

வெள்ளரியில் பிஞ்சாகவும், காயாகவும் இரண்டு வகையுண்டு. வெள்ளரியும் நல்ல நீரிளக்கி. செரிமானத்திற்கு உதவுவது. தன்வந்திரி நிகண்டு காரா கூறுகிறது இப்படி. வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தைத் தணித்து, குடல்களுக்குக் குளிர்ச்சியையூட்டுகிறது. சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. தலைசுற்றலைத் தடுக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்களைக் குணமாக்குகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வெள்ளரி ஒரு முக்கியமான காய்கறி வகையிலானது.

வெள்ளரியில் ‘கலோரி’கள் குறைவானதால் உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு நன்றாக ஒத்துழைக்கும். வெள்ளரிச்சாறுடன், விதைகளையும் சேர்த்து உட்கொண்டால் மிக அதிகப் பலன்கள் விளையும். கீல் வாதத்தை போக்க உதவுகிறது. வெள்ளரி, சிறுநீர்க் கோளாறுகளுக்கும் உதவக்கூடியது. நீரிழிவு நோயாளிகளும், உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்களும் வெள்ளரிப் பிஞ்சுகளை அதிகமாக உட்கொள்வது சாலச் சிறந்தது
 

24.09.2012.ByRajah.நல்ல சாப்பாடு, நண்பர்களுடன் அரட்டை, குழந்தைகளுடன் விளையாட்டு, இப்படி ஒரு திட்டமிட்ட வாழ்க்கை இருந்தும் இரவில் தூக்கம் வரவில்லை என்றால் என்ன ஆகும்? நினைத்துப் பாருங்கள். வாழ்க்கை நரகம் தான்.

உடலில் நோய்கள் இருந்து தூக்கம் இல்லை என்றால் சமாளித்து விடலாம். நோய்களுக்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது தூக்கம் வராது. இது ஒரு அசாதாரண சூழ்நிலை. மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டால், தூக்கம் நன்றாக வரும். இப்படி எந்தக் காரணமும் இல்லாமல், தூக்கம் வரவில்லை என்றால், அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அவசியம். தூக்கம் வராததற்கு பத்து காரணங்கள் உண்டு என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். அவற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது.
1. தினமும் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம் :ஒரு மனிதனுக்கு தினமும் எத்தனை கலோரிச் சத்து உணவு தேவைப்படும் என்பதற்கு ஒப்பான கருத்து இது. இதற்குச் சரியாகப் பதில் சொல்வது கடினம். அதுபோல்தான் தூக்கமும். தூக்கம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். ஒருநாளில் எட்டு அல்லது குறைந்தபட்சம் ஆறுமணி நேரத் தூக்கம் அவசியம். இந்த நேரம் குறைந்தால், இதய நோய் அல்லது கான்சர் வர வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறது அமெரிக்க ஆராய்ச்சி. நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு இந்த ‘ரிஸ்க்’ அதிகம்.

தூக்கத்தால் அவதிப்படுபவர்கள் ஒரு வாரம் வரை தூங்கும் நேரத்தை ‘டயரி’யில் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளலாம். அதன்படி எழுந்திருக்கும் _ தூங்கும் நேரத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நோட் பண்ணுவது அவசியம். தூக்க ஊக்கிகள் பயன்படுத்தாமல் தூக்கம் வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம்.
2. பிற்பகல் விழாவில் போர் அடிக்கும் பேச்சைக் கேட்டவுடன் தூக்கம்.இது இயல்பாக வருவதுதான். ஆனால் ஒரு சிலருக்குத் தூக்கம் வராது. இமைகள் மூடியிருப்பது போல் தோன்றும். ஆனால், தூக்கம் கண்களைத் தழுவாது. தினமும் ஏழு மணி நேரம் மட்டுமே தூங்கும் பழக்கம் இருந்தாலும், மீதியிருக்கும் ஒருமணி நேரத்தை உடல் ஈடு செய்ய விரும்பும். சிலர் அதனை ஈடு செய்யும் விதமாகப் பகலில் குட்டித் தூக்கம் போடுவார்கள். இருப்பினும் நாள்பட்ட தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வயதானவர்களாக இருந்தால், டயாபடீஸ் உண்டாகும் வாய்ப்பும் அதிகம்.

3. தூக்கமின்மை இருந்தால், சீக்கிரம் படுக்கச் செல்ல வேண்டும்.
பொதுவாக தூக்கமின்மைக்கு நிறைய காரணங்கள். தூக்கம் வரவில்லையே என்பதற்காகப் படுக்கை அறைக்குச் செல்லவே சிலர் விரும்புவதில்லை. நமக்குத்தான் தூக்கம் வருவதில்லையே என்ற எரிச்சல். இது தவறு. மாறாக தூக்கமின்மைக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து, அதை நிவர்த்தி செய்ய வேண்டும்.

மது, காபி, மனஅழுத்தம், மனச்சோர்வு டென்ஷன்... உள்ளிட்டவையும் தூக்கமின்மைக்குப் பொதுவான காரணங்கள்.
என்ன செய்யலாம்?வழக்கத்தை விட, ஒரு மணிநேரம் ‘லேட்’டாகப் படுக்கச் செல்லலாம். தூக்கம் வருவதற்கு உரிய சில எளிய பயிற்சிகள் மேற்கொள்ளலாம். உதாரணமாக எண்களை மனதிற்குள் சொல்வது, எளிதான மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவது...
சுவாரஸ்யமில்லாத புத்தகங்கள் படிப்பது..,

படுக்கச் செல்லுமுன் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம். இதன்மூலம் தசைகள் இலகுவடையும். உடல்சூடு குறையும்.

தொடர்ந்து தூக்கமின்மை இருந்தால், டாக்டர் அட்வைஸ்படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.

குட்டித் தூக்கம் : தூக்கமின்மை இருப்பவர்களுக்கு அவ்வப்போது ‘குட்டித் தூக்கம்’ வரும். இதனால் ஓரளவு சமாதானம் அடையலாம். இரவு ‘ஷிஃப்’டில் வேலை செய்பவர்களுக்கு, தூங்குவதற்கு வாய்ப்பில்லை. அதனால் குட்டித் தூக்கம் போடுவதில் தவறில்லை. அதற்காக, பலமணி நேரம் ‘குட்டித் தூக்கம் போடாமல் இருப்பது நல்லது.
தூக்கமின்மை இருந்தும், பணிகள் பாதிப்பதில்லை :இரவில் இரண்டு மணி நேரத் தூக்கம் பாதித்தால், மறுநாள் உடலில் அசதி ஏற்படும். சுறுசுறுப்பாக இயங்க முடியாது. பெரிய இயந்திரங்களை இயக்குபவர்களாக இருந்தால், முடியாமல் போகும். டூ வீலர் அல்லது கார்களை ஓட்ட முடியாது. அதனால் ஆபீஸ் போவதற்கு நண்பர்களின் உதவியைக் கேட்கலாம்.

தொடர்ந்து ஒருவாரம் வரை இப்படியே இருந்தால், உடல் சூடு அதிகரிக்கும். அதைத் தவிர்ப்பது முக்கியம்.

வாரத்தின் இறுதி நாட்களில் தான் தூக்கம் வருகிறது.
சிலர் கடுமையான வேலைகளுக்கு இடையில் அன்றாடம் ஒரு குட்டித் தூக்கம் மட்டும் போடுவது உண்டு. தூக்கமின்மை பாதிப்பு இருப்பவர்கள் தவிர, மற்றவர்களுக்கு இந்த ‘பிராக்டீஸ்’ மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

எத்தனை வேலைப்பளு இருந்தாலும் முடிந்தவரை தினமும் இரவில் தூங்குவது அவசியம். வேறு வழியில்லை என்றால், குட்டித் தூக்கம் போட்டாவது நிலைமையைச் சமாளிப்பது முக்கியம்.
படுக்கப் போகும் முன்பு உடற்பயிற்சி :உடற்பயிற்சி காலையில் செய்யலாம். படுக்கப் போகும் முன்பு பெரும்பாலோர் உடற்பயிற்சி செய்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே இந்த ‘பிராக்டீஸ்’ செய்வதுண்டு. இருப்பினும், தூக்கத்துக்கும், ‘பெட் டைம்’, உடற்பயிற்சிக்கும் சம்பந்தமில்லை. தேவையேற்பட்டால், இரவுச் சாப்பாட்டுக்கு முன்பு எளிய உடற்பயிற்சி செய்யலாம். இருப்பினும் முடிந்தவரை காலையில் நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்வதுதான் நல்லது.
தூக்கம் வருவதற்கான மாத்திரைகள் எடுப்பது :தூக்கமின்மை நிரந்தர நோயாக மாறுவதற்கு முன்பு மாத்திரைகள் எடுப்பது நல்லது. தவறில்லை. ஆனால், டாக்டர்கள் அட்வைஸ் அவசியம். ஒருசில மாத்திரைகள் வீரியம் மிகுந்ததாக இருக்கலாம். இதன் காரணமாக பக்க விளைவுகள் (வாந்தி, தலைவலி, சோர்வு) ஏற்படும். அதனால் கவனம் தேவை.

தூக்க மாத்திரைகளுக்கு அடிமையாதல் :
இது ஆபத்து.

இரவில் லேட்டாகத் தூங்கி அதிகாலையில் எழுவது :
நேரமில்லை. நான்கு மணிநேரம் மட்டுமே தூங்க முடியும் என்ற நிலை இருந்தால், இரவில் லேட்டாக (இரண்டு மணி) தூங்கி, அதிகாலை ஆறு மணிக்கு எழலாம். இரண்டு மணி வரை தூக்கம் வருவதற்குரிய வழிகளில் இறங்கலாம். (போரடிக்கும் புத்தகம் படிப்பது, பாடல்கள் கேட்பது இப்படி...)

தூக்கமின்மை இருப்பவர்கள் டாக்டரிடம் உங்களுக்கு இருக்கும் பாதிப்புகளை ஒளிவு மறைவின்றிச் சொல்லிவிட வேண்டும். குறிப்பாக,
ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம் :தூக்கமில்லாமல் இருந்தால், காலை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். கால்களில் நமைச்சல் இருக்கும். ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவை டெஸ்ட் செய்வது முக்கியம்.
மூச்சு விடுவதில் சிரமம் :தூங்கும் போது மூச்சுவிட சிரமப்படுவார்கள். குறட்டைச் சத்தம் அதிகம் கேட்கும். உடல் எடை அதிகமிருப்பவர்களுக்கு இந்த ‘ரிஸ்க்’ அதிகம்.
மனச்சோர்வு :இரவில் தூங்காமல் இருந்தால் மறுநாள் உடல், மன சோர்வு ஏற்படும்.
தைராய்டு சுரப்பதில் பிரச்னை :இந்த அறிகுறி தெரிந்தால் உடனே டாக்டரிடம் செல்வது அவசியம். தைராய்டு ஸ்டுமுஹேங் ஹார்மோன் அளவு அதிகமிருந்தாலும் தூக்கம் வராது.

23 September 2012

தேசிய மின் வழங்களுடன் யாழ்.குடா நாடு மீண்டும் இணைகின்றது

 

23.09.2012.By.Rajah.இந்த மாதம் 25ம் திகதி இலங்கை தேசிய மின் வழங்களுடன் யாழ்.குடாநாடு மீண்டும் இணைய உள்ளதாக மின் சக்தி அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.


இலங்கையில் உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்ததைத் (1987) தொடர்ந்து சுமார் இரண்டு தசாப்தங்களிற்கும் மேலாக தேசிய மின் வழங்களில் இருந்து யாழ்.குடாநாடு விடுபட்டுள்ளது. இந்த நிலையிலே, இரண்டாயிரமாம் ஆண்டின் ஆரம்பத்தில் சுண்ணாகத்தில் உள்ள மின் பிறப்பாக்கிகள் மூலம் குடாநாட்டிற்கு மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

எனினும், இது அதிக செலவு மற்றும் சீரற்ற மின் விநியோகத்தினால் தேசிய மின் வழங்களை மீண்டு யாழ். குடாநாட்டிற்கு இணைக்க மின்சார சபை திட்டமிட்டிருந்தது.

இதேவேளை, யப்பானின் உதவியுடன் உப மின் உற்பத்தி நிலையம் ஒன்று கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேசிய மின் வழங்களை வவுணியாவில் இருந்து பெறுவதற்கான அனைத்து பணிகளும் நிறைவு கண்டுள்ளதாக மின் சக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது