Search This Blog n

19 September 2012

வெளியேற்றப்பட்ட முள்ளிக்குள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

19.09.2012.By.Rajah.மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் எந்த ஒரு வசதிகளுமற்ற காட்டுப்பகுதிக்குள் காயக்குழி எனும் இடத்தில் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள மாணவச் செல்வங்களின் நலன்கருதி T.R.T தமிழ் ஒலி வானொலி நேயர்களின் பங்களிப்புடன் வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் கையளித்தார்.
மேலும் மாணவர்கள் காட்டுக்குள் அமர்ந்திருந்து கல்வி கற்பதையும் கிராமமக்களால் அமைக்கப்பட்ட கூடாரங்களை பாராளுமன்ற உறுப்பினருடன்; அரசியல் பிரமுகரும் எழுத்தாளருமான சண் மாஸ்ரர் ஆகியோர் பார்வையிடுவதையும் அவதானிக்கலாம்.

0 கருத்துகள்:

Post a Comment