Search This Blog n

20 September 2012

T20 உலக கோப்பை : இன்றைய போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் வெற்றி

20.09.2012.By.Rajah.
இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் T 20 உலகக் கோப்பையில் இந்தியா இன்று இரு வெவ்வேறு ஆட்டங்கள் நடைபெற்றன.
ஒரு போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை சந்தித்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இம்முறையும் ஓபனிங்கில் கம்பீர் - சேவாக் ஜோடி சொதப்பியது. கம்பீர் 10 ரன்களுடன் ஆட்டமிழக்க சேவாக் 8 ரன்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் ஃபோர்மில் உள்ள விராத் கோலி 39 பந்துகளில் 4 பவுன்றிகள், 2 சிக்ஸர் அடங்களாக 50 ஓட்டங்களையும், சுரேஷ் ரைனா 38 ஓட்டங்களையும், எடுத்து அணியை பலப்படுத்தினர். அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 136 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் ஆட்டம் முடிந்தது. இந்திய சார்பில் பாலாஜி, யுவராஜ் சிங் தலா 3 விக்கெட்டுக்களையும் அஷ்வின் 2 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

மறுமுனையில் நடைபெற்ற அயர்லாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில், ஆஸ்திரேலியா அணி இலகுவாக வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 123 ஓட்டங்களை எடுத்தது. ஓ பிரையன் 35 ஓட்டங்களை எடுத்தார். பதிலுக்கு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 15 வது ஓவரில் போட்டியை முடித்தது. ஷேர்ன் வட்சன் 51 ஓட்டங்களை எடுத்தார். நாளை

வராஜ் சிங், பாலாஜி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா சூப்பர் 8 இல் நுழையும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு அடுத்து வரும் 23ம் திகதி இங்கிலாந்துடன் மோதும் போட்டி இருக்கிறது

0 கருத்துகள்:

Post a Comment