Search This Blog n

07 January 2013

எய்ட்ஸ் நோய்க்கு புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு

எய்ட்ஸ் நோயை தற்காலிகமாக கட்டுப்படுத்தும் தடுப்பூசி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் தற்போது 3 கோடியே 40 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர்.
இந்நோய்க்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், எய்ட்ஸ் நோயை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும் மருந்துகளை தற்போது எய்ட்ஸ் நோயாளிகள் உபயோகித்து வருகின்றனர்.
இந்நிலையில் எய்ட்ஸ் நோய்க்கான புதிய தடுப்பூசி ஒன்றை ஸ்பெயின் நாட்டு பார்சிலோனா பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எய்ட்ஸ் நோயின் தாக்கம் உள்ளவர்கள் இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால் எய்ட்ஸ் கிருமிகள் வளர்வது தற்காலிகமாக கட்டுப்படுத்தப்படும். இதனால் நீண்ட நாட்கள் உயிர்வாழ முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் எய்ட்ஸ் கிருமிகள் உடலின் எதிர்ப்பு சக்தியை தான் பாதிக்கும். ஆனால் இந்த தடுப்பூசி எய்ட்ஸ் நோய் கிருமிகளுக்கு எதிர்ப்பு சக்தியாக விளங்கும்.
32 எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்த சோதனை செய்யப்பட்டு வெற்றியடைந்து விட்ட நிலையில், விரைவில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்

0 கருத்துகள்:

Post a Comment