Search This Blog n

14 October 2017

ஆசிரியர்களால் நியமிக்கப்பட்ட போலி ஆசிரியை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வேலம்பட்டி மலைக்கிராமத்தில் அரசுப்பள்ளியில் போலி ஆசிரியர் பணிபுரிந்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
வேலம்பட்டி அரசு ஆரம்ப பள்ளிக்கு நியமிக்கப்பட்ட இரண்டு ஆசிரியர்களும் பணிக்கு வருவதில்லை. இருவரும்  தமக்கு பதிலாக கர்நாடகத்தை சேர்ந்த பெண் ஒருவரை ரூ.5,000 சம்பளத்துக்கு 
நியமித்துள்ளனர். 
இரு ஆசியர்களால் நியமிக்கப்பட்டுள்ள கர்நாடக பெண்ணும் பல நாட்கள் பள்ளிக்கு வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல நாட்கள் பள்ளி பூட்டப்பட்டு கிடப்பதால் மலைக்கிராம குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. 
பொருளாதாரத்தால் பின்தங்கியுள்ள வேலம்பட்டியில் போதிய போக்குவரத்து வசதிகளும் இல்லை. உரிய வசதிகள் இல்லாததால் வேலமடபட்டி குழந்தைகள் கல்வி கற்க வேறெங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

Post a Comment