Search This Blog n

30 April 2022

காங்கேசன்துறை கடற்படையினரால் இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் கைது

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, பலாலி கடற்பரப்பின் ஊடாக இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையைச் சேர்ந்த 5 ஆண்கள் , 5 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் உள்ளடங்கலாக 13 பேர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பின் 
ஊடாக 29-04-2022.அன்றயதினம் இரவு இந்தியா நோக்கி படகொன்றில் 
பயணித்துள்ளனர்.
இவ்வாறு சென்றவர்களை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடற்படையினர் , கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைக்காக பலாலி பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளநிலையில், இன்று மாலை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>






0 கருத்துகள்:

Post a Comment