Search This Blog n

30 July 2015

தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் தமிழ்நாட்டில்மழை பெய்யும்:

தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) முதல் 
தொடர்ந்து 3 நாட்கள் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடமேற்கு வங்கக்கடலில் வங்காளதேசத்தின் கடலோரப்பகுதியில் காற்றழுத்த மண்டலமாக இருந்தது. அதுமேற்கு வங்காளத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி உள்ளது. அது இன்று 
வங்காளதேச கடற்கரையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
ஆனால் அதற்கும் தமிழ்நாட்டுக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை.
இந்த தகவலை வானிலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று காலை 8-30மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
விருத்தாசலம் , தொழுதூர் தலா 8 செ.மீ., பெரம்பலூர் 6 செ.மீ., திருப்புவனம் 5 செ.மீ., செய்யாறு 4 செ.மீ., செய்யார், கோவிலங்குளம், கள்ளக்குறிச்சி, ஸ்ரீமுஷ்ணம், போளூர் , மேட்டுப்பட்டி,திருவாடனை தலா 3 செ.மீ., இளையான்குடி, திருமங்கலம், தேவகோட்டை, செங்குன்றம், சேத்தியாதோப்பு, சித்தம்பட்டி, சாத்தனூர், சங்கராபுரம், திருச்சுழி தலா 2 செ.மீ.
மேலும் சில இடங்களிலும் மழை 
பதிவாகி உள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment