Search This Blog n

15 July 2015

சென்னைக்கு ஆந்திராவில் இருந்து பறந்து வந்த இதயம்:???

ஆந்திராவில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த 12 வயது சிறுவனின் இதயம் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தானம் அளிக்கப்பட்டுள்ளது.
ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி அருகே இரு தினங்களுக்கு முன் நிகழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் பி.வைஷ்ணவ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு ஏற்பட்டு இறந்துள்ளான்.
இதனையடுத்து சிறுவனின் உறவினர்கள், அவனது உடல் உறுப்புகளை தானம் தர முன்வந்ததை அடுத்து, சிறுவனின் இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்களை தானமாக கொடுத்துள்ளனர்.
பின்னர் சிறுவனின் இதயம் அவசர ஊர்தி மூலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு 
வரப்பட்டுள்ளது.
மேலும், கிரீன் காரிடர் முறை மூலம் எந்த சிக்னலிலும் நிற்காமல் சில நிமிடங்களில் சென்றடைந்த அவசர ஊர்தி, சென்னை விமான நிலையத்தில் இருந்து உடனடியாக மருத்துவமனைக்குக்
 சென்றுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment