Search This Blog n

15 February 2020

காதலனுடன் சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம் கதறித் துடித்த காதலன்

தமிழகத்தில் பிறந்தநாளை கொண்டாட காதலர் தினத்தில் காதலனுடன் சென்ற 19 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.சேலத்தை சேர்ந்தவர் ரவினாய்குமார். இவருடைய மனைவி துளசி.
 இவர்களது மகள் ஆர்த்தி (19).இவர்,
 நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. மைக்ரோ பயாலஜி 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஆர்த்தியும் அசோக் (25) என்பவரும் 
காதலித்து வந்தனர்.நேற்று முன்தினம் காதலி ஆர்த்திக்கு பிறந்தநாள் என்பதால் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று அவரது பிறந்த நாளை பெங்களூரில் கொண்டாட அசோக் முடிவு 
செய்தார்.இதையடுத்து, இருவரும் பைக்கில் வேகமாக பெங்களூரு நோக்கி சென்றனர். அப்போது திடீரென மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.அந்தச் சமயத்தில் பின்னால் வந்த டிப்பர் லொறியின் சக்கரத்தில் சிக்கி ஆர்த்தி துடிதுடித்து 
பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் அசோக் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தனது கண் எதிரே காதலி பலியானதை கண்டு அசோக் கதறி அழுதார்.பின்னர் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்த்தி உடலை
 மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு
 மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.விசாரணையில் சில வருடங்களுக்கு ஆர்த்தி தந்தை உயிரிழந்த நிலையில், தாய் அரவணைப்பில் வளர்ந்த அவர் ஹாஸ்டலில் தங்கி கல்லூரியில் படித்து வந்தது தெரியவந்துள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

Post a Comment