Search This Blog n

03 March 2020

விடுதிக் குளியலறையில் குழந்தை பெற்றெடுத்த 18 வயது மாணவி

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கல்லூரி விடுதி குளியலறையில் 18 வயது கல்லூரி மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள சக்ரி நகரில் சாவித்ரிபாய் புலே ஆதிவாசி
 பெண்களுக்கான விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் உள்ள குளியலறையில் குழநதையொன்றில் 
அழுகுரல் கேட்டு விடுதிக் கண்காணிப்பாளர் சென்று பார்த்த போது, அங்கிருந்த வாளி ஒன்றில் பிறந்த குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே காவல்துறைக்கு 
தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விடுதியில் தங்கியிருந்த பெண்களிடம் விசாரணை நடத்திய போது முதலில் யாரும் முன்வந்து உண்மையைக் கூறவில்லை. பின்னர் சந்தேகத்திக்கிடமான வகையில் இருந்த பெண் ஒருவரிடம் விசாரணை செய்ததில், அவர்தான் அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்தமை தெரிய வந்துள்ளது.தற்போது அந்தப் பெண்ணும் குழநதையும் துலே மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்தத் தகவல்களை சக்ரி காவல் நிலைய ஆய்வாளர் தேவிதாஸ் தாம்னே
 தெரிவித்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

Post a Comment