Search This Blog n

11 April 2020

விழிப்புணர்வு முயற்சி கொரோனா வைரஸ் வடிவில் உருவான கார்.

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக. இந்தியாவின் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் வடிவில் கார் ஒன்றை வடிவமைத்துள்ளார்.இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சுதாகர்.
 இவர், சுதா கார்ஸ் என்ற பெயரில் அருங்காட்சியகம் நடத்தி வருகிறார்.
வகை வகையான கார்களை வடிவமைப்பதில் தனித்துவம் பெற்ற இவர் பர்கர், கிரிக்கெட் பந்து, கிரிக்கெட் மட்டை மற்றும் ஹெல்மெட் உள்ளிட்ட வடிவங்களில் கார்களை உருவாக்கியுள்ளார்.இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா 
வைரஸ் குறித்தும், அது பரவும் விதம் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார்.இதற்காக, கொரோனா வைரஸ் தோற்றத்தில் சிறிய கார் ஒன்றை வடிவமைத்துள்ளார். இது குறித்து 
அவர் கூறுகையில்,
கொரனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அதன் பரவல் மற்றும் ஆபத்து குறித்து அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதற்காக இந்த காரை 
வடிவமைத்தேன்.அரசிடம் உரிய அனுமதி பெற்று, இந்த கார் மூலம் ஹைதராபாத் முழுவதும் சென்று, மக்களை வீட்டிலேயே இருக்க வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

Post a Comment