Search This Blog n

03 May 2014

காதலனுடன் சேர்த்து வையுங்கள்: கணவருடன் காவல் நிலையம் வந்த

அகமதாபாத்தில் மகளிர் காவல் நிலையத்திற்கு தனது கணவருடன் வந்த 50 வயதுடைய பெண் ஒருவர், தன்னை தனது 24 வயது காதலருடன் சேர்த்து வைக்குமாறு புகார் அளித்த விநோத சம்பவம் நடந்துள்ளது.
மணி நகரில் உள்ள 50 வயதான ஆஷா ஒரு முறை அங்குள்ள கோவிலுக்கு செல்ல ரிக்சாவில் சென்ற போது ஜிக்னேசின் செயல்பாடு அவளை ஈர்த்துள்ளது.
அதனால் ஜிக்னேசின் செல்போன் எண்ணை கேட்டு வாங்கி, இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆஷாவை சந்தித்த ஜிக்னேஷ் தனது பெற்றோர் பார்த்து வைத்துள்ள பெண்ணை மணக்கப் போவதாகவும், தங்களது உறவை முறித்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஆஷா ஜிக்னேஷ் தனக்கு துரோகம் செய்து விட்டதாக கருதியுள்ளார்.
இந்த நேரத்தில் ஆஷாவின் கணவருக்கும் அவரது காதல் விஷயம் தெரிந்துள்ளது.
அவர் ஆஷாவிடம் இம்மாதிரியான செயல் குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் என்று கூறி இந்த காதலை கைவிடுமாறு கூறியுள்ளார்.
ஆனால் அவர் இதை கேட்பதாக இல்லை. இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற பொலிசார், முதலில் எப்படியாவது ஆஷாவுக்கு உதவவேண்டும் என நினைத்துள்ளனர்.
ஆனால், ஜிக்னேசுக்கு திருமணமான செய்தி தெரிந்தவுடன் தங்களது முடிவை மாற்றிக்கொண்ட அவர்ர்கள், இதனால் அவனது திருமண வாழ்க்கை பாதிக்கும் என கருதி தங்களது முடிவை கைவிட்டுள்ளனர்
 

0 கருத்துகள்:

Post a Comment