Search This Blog n

04 June 2014

பலாத்காரம்: பெண் நீதிபதி உத்திரப் தொடரும்!!

உத்திரப் பிரதேசம் அலிகாரில் பெண் நீதிபதி ஒருவர் உறவினர்களால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அலிகாரில் உள்ள நீதிமன்ற அலுவலர்கள் குடியிருப்பில் 32வயதாகும் பெண் நீதிபதி ஒருவர் வசித்து வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த 2 பேர், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க பெண் நீதிபதி கூச்சலிட்டபோது, இருவரும் சேர்ந்து அவரது வாயில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றியுள்ளனர்.
அவர் தொடர்ந்து கூச்சலிட்டு திமிறியபோது வாயில் துணியைத் திணித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
பூச்சிக்கொல்லி மருந்தின் வீரியத்தால் பெண் நீதிபதி மயங்கி விழுந்துள்ளார்.
மறுநாள் காலையில் வீட்டுப் பணிப்பெண் வந்து நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு, விரைந்து வந்த பொலிசார், படுக்கை அறையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்த நீதிபதியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம், பொலிஸ் உயர் அதிகாரி நிதின் திவாரி ஐ.ஏ.என்.எஸ். கூறுகையில், பெண் நீதிபதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
அவர் சிறிது உடல்நலம் தேறியதும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பரூக்காபாதைச் சேர்ந்த பங்ராஜ் குப்தா, பரேலியைச் சேர்ந்த கோபால் குப்தா ஆகியோர் மீது பலாத்காரம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பொலிசார் தேடி வருகின்றனர்.
மேலும், அவர்கள் இருவரும் பெண் நீதிபதியின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 


0 கருத்துகள்:

Post a Comment