Search This Blog n

17 October 2015

என் கணவனுக்கு20க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் தொடர்பு?

திருமணமான இளைஞர் ஒருவர் 20க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளதை கண்டுபிடித்த மனைவி பொலிசில் புகார் அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் சிறுபூலுவபட்டியை சேர்ந்த சல்மா (19) என்பவருக்கும், கோபி குருமந்தூரை சேர்ந்த நிவாசுக்கும் (26) கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.
கடந்த 3 மாதங்களாக சல்மாவிடம், கூடுதல் வரதட்சணை கேட்டு நிவாசும், அவரது தாயார் குர்ஷித் உன்னிசாவும் கொடுமைப் படுத்தியுள்ளனர்.
மேலும், சல்மாவை ஆபாசப்படம் எடுக்க நிவாஸ் முயன்றுள்ளார். பின்னர் அவரது செல்போனை சல்மா ஆய்வு செய்தபோது, அதில் 20க்கும் மேற்பட்ட பெண்களுடன் உள்ள புகைப்படம் மற்றும் வீடியோவை 
கண்டுபிடித்துள்ளார்.
இதன்மூலம் நிவாஸ், பெண்களை ஊட்டி போன்ற இடங்களுக்கு அழைத்துச்சென்று உல்லாசமாக இருந்ததும், வீட்டிற்கே பல பெண்களை அழைத்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து நிவாசின் தாயார் குர்ஷித் உன்னிசாவிடம், சல்மா இது பற்றி கேட்டபோது, என் மகன் அப்படித்தான் இருப்பான் என 
பதிலளித்துள்ளார்.
எனவே சல்மா அனைத்து மகளிர் காவல் நிலைய பொலிசில் தன் கணவர் மீதும் மாமியார் மீதும் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரையடுத்து பொலிசார் நிவாசின் செல்போனை ஆய்வு செய்து அவரையும் அவர் தாயையும் கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment