Search This Blog n

05 January 2016

இந்திய மீனவர்கள் நால்வர் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கைது!

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காரைநகர் கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை இரவு அத்துமீறி மீன்பிடித்துக்கொண்டிருந்த போது கடற்படையினர்
 கைது செய்தனர்
. அத்துடன் இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய படகு ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட இவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment