Search This Blog n

10 November 2016

ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகளுக்கு கோயில்களுக்குள் தடை?

ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை பாரம்பரியமிக்க கோயில்களுக்குள் ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை அனுமதிக்கக் கூடாது என்று அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரும் சனவரி 1ம் திகதி முதல் அமலுக்கு
 வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள செண்பக விநாயகர் கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனு மீதான தீர்ப்பில் நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன், தனது உத்தரவில், கோயில்களுக்கு செல்லும் போது ஒழுக்கமான ஆடைகள் அணி வது, சுத்தம், நாகரிகம் ஆகிய வற்றை அனைத்து மதங்களும் கற்பிக்கின்றன.

கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் வழிபாட்டுக்கு செல்லும்போது தனி ஆடைக் கட்டுப்பாடு உள்ளது.
இந்து கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக அறநிலையத் துறை விரைவில் முடிவெடுக்க
 வேண்டும்.
தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் 2016 சனவரி 1ம் திகதி முதல் ஆண்கள் வழக்கமான மேலாடையுடன் வேஷ்டி, பைஜாமா, பேன்ட்டும், பெண்கள் மேலாடையுடன் கூடிய சுடிதார், சேலை, தாவணியும், குழந்தைகள் முழுமையாக மூடப்பட்ட ஏதாவது ஒரு ஆடையும் 
அணிந்து வரவேண்டும்.
மாறாக, அரை டிரவுசர், ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட், மிடி, கையில்லாத மேலாடை, இடுப்புக்கு கீழ் நிற்கும் ஜீன்ஸ், இடுப்புக்கு மேல் நிற்கும் டி-ஷர்ட் போன்றவற்றை அணிந்து வருபவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது.
இந்த ஆடைக் கட்டுப்பாட்டை தீவிர மாக அமல்படுத்துமாறு அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத் துறை கடிதம் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சுற்றறிக்கை 
அனுப்பியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment