Search This Blog n

23 November 2016

வவுனியாவில் புலத்தியிலிருந்து வந்தவர் சடலமாக மீட்பு..!! (காணொளி )

வவுனியா பத்தினியார் மகிழங்குளம் 3 ஆம் ஒழுங்கையில் ஜேர்மனியில் இருந்து வந்தவர் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.
ஜேர்மனியில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய விக்கிரமரட்ன குணசிறி என்ற 59 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜேர்மனுக்கு சென்றிருந்த இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் மீண்டும் ஜேர்மனுக்கு
 சென்றிருந்தார்.
எனினுமு; அங்கு காலநிலை ஒத்துக்கொள்ளவில்லை என தெரிவித்து தனியாக தனது பத்தினியார் மகிழங்குளம் வீட்டில் தங்கியிருந்து வீட்டை திருத்தம் செய்து வந்துள்ளார்.
இந் நிலையில் நேற்றும் வீட்டில் திருத்த வேலைகள் இடம்பெற்றிருந்ததாக தெரிவித்த அயலவர்கள் இன்று காலை மணல் இறக்குவதற்காக வந்த டிப்பர் சாரதியே குறித்த வீட்டின் உரிமையாளர் வீட்டு வாசலில் சடலமாக ஈரப்பதாக தெரிவத்த நிலையில் பொலிஸாருக்கும் தகவல் 
வழங்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை சடலமாக மீட்கப்பட்டவரின் குடும்பத்தினர் அண்மையிலேயே
 வவனியாவிற்கு வருகை தந்து இவரை பார்வையிட்டு சென்றதாகவும் தெரிவித்த உறவினர்கள் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை இவர் இலங்கை பொலிஸில் பணியாற்றியிருந்ததாகவும் உறவினர்கள் 
தெரிவித்தனர். 

0 கருத்துகள்:

Post a Comment