Search This Blog n

22 November 2016

மூன்றே நாளில் முளைத்த சூப்பர் காதல்..! இனிப்பு கொடுத்து ஆரவாரம்..! இது எங்கே..?

இந்தியாவே வீதிக்கு வந்து விட்டது..! கையில் இருக்கும் ஐநூறு ஆயிரங்களை மாற்றிவிட மாட்டோமா என்று தவிக்கிறார்கள் மக்கள்..!
காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் மக்கள் தவிப்போடு காத்து கிடக்கிறார்கள்..! ஆனால் இரண்டு அழகான இளசுகள் என்ன காரியம் பண்ணாங்க தெரியுமா..! படிங்க..நொந்து போகாம முடிஞ்சா
 வாழ்த்துங்க..!
வேற என பண்றது..! கலி முத்திப்போச்சு..! பெங்களூர் மடிவாலா பகுதியில் இருக்கிறது அந்த அரசு வங்கி. ஐநூறு ஆயிரம் செல்லாது என்று கூறியதுமே..மக்கள் இருக்கும் பணத்தை மாற்றிவிட  நீண்ட வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர்..
அந்த வரிசையில் வந்து நின்ற கன்னடத்து பைங்கிளி வைஷ்ணவி..!  அதே வரிசையில் வந்து நின்றான் கன்னடத்து காளை பிரஷாத்..!
இருவருமே வேறு வேறு கல்லூரியில் படிப்பவர்கள்..! முதல் நாள் காலை  இருவரும் சைட் அடித்துக் கொண்டார்கள்..!
பகல் பதினோரு மணிக்கு வைஷ்ணவிக்கு தாகம் எடுக்க அருகில் உள்ள பெண்ணிடம் ஆண்ட்டி தண்ணீர் இருக்கா ப்ளீஸ்.. என்று கேட்க.. கொஞ்ச துடித்துப் போன பிரஷாத் கால் தெறிக்க ஓடிப்போய் மூன்று பாட்டில்ஜில்  மினரல் வாட்டர்  வாங்கி  வந்தான் எக்ஸ்கியூஸ் மீ வாட்டர் என்றதும்  உருகிப் போனாள் வைஷ்ணவி.
அருகில் உள்ளவர்களுக்கும் அவன் ஐஸ் வாட்டர் கொடுக்க புரிந்து கொண்ட மக்கள் சிரித்துவிட்டு வாங்கி தாகம் தீர குடித்தனர்.மதியம் அவள் பார்த்துக் கொள்ளச்சொல்லி விட்டு லஞ்ச் சாப்பிட ஸ்கூட்டியில்
 பறந்தாள்.
தவித்துப் போனான் பிரஷாத்.மூன்று  மணிக்கு வந்தாள் வைஷு.கண்களால் சாப்பிட்டியாடா என்று கேட்டாள்… இல்லை என்று ஜாடை சொன்னான்.
அன்றுமாலை அனைவருக்கும் காபி வரவைத்தான் பிரஷாத். அவளுக்கு மட்டும் இஞ்சி டீ. புல்லரித்துப் போனது கிளி. அடுத்த 
நாளும் வந்தார்கள்.
மெல்ல பேச ஆரம்பித்தார்கள் மக்களுக்கு புரிந்து போனது. அன்று மாலைக்குள்  கொஞ்சம் நெருக்கம் ஆனார்கள். நம்பர் கேட்டான்
 கொடுத்தாள்.
அடுத்த நாள் காலை பக்கிகள் ஒரே ஸ்கூட்டியில் வந்து இறங்க மக்களுக்கு ஒரே சந்தோசம்.. அட அதுக்குள்ளவா என்று கிண்டல் 
செய்தார்கள்.
மதியம் ஒரே ஹோட்டலில் சேர்ந்து சாப்பிடப் போனார்கள். பணம்  மாற்ற வந்த இடத்தில்  மனதையும் மாற்றிக் 
கொண்டார்கள்.
பேங்க் வாசலில் வைத்தே வைஷ்ணவி தனது காதலைக் கூறினாள். அன்று மாலை அனைவருக்கும் சாக்லேட் கொடுத்தார்கள். மக்கள் வாழ்த்து கூறினார்கள்.ஜோடிகள் வண்டி ஏறி பறந்து விட்டனர்..!  என்னத்தை சொல்றது போங்கோ..!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment