செல்லாது’ என அறிவிக்கப்பட்ட ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை பெருமளவில் கமிஷன் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக மாற்றித்தருகிற கும்பல்கள் ஆங்காங்கே செயல்படுகின்றன.
இப்படி ஒரு கும்பல் செயல்படுவதை டெல்லி ஊடகம் ஒன்று ‘ஸ்டிங் ஆபரேஷன்’ என்னும் ரகசிய நடவடிக்கையின் மூலம் அம்பலப்படுத்தியது.
இதுபற்றி மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு நேற்று கூறும்போது, ‘‘பெரும் தொகையை கமிஷனாக பெற்றுக்கொண்டு, ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை மாற்றித்தருவது ரகசிய நடவடிக்கை மூலம் அம்பலமாகி உள்ளது. இதன் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை கண்டறிவதற்கு விசாரணை நடத்துமாறு நான் உள்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளேன்’’ என்றார்.
மேலும், ‘‘இதுபற்றி விரிவான விசாரணை நடத்துமாறு டெல்லி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்குமாறு என் செயலாளரை கேட்டுக்கொண்டுள்ளேன்’’ எனவும் கூறினார்.
எனவே இந்த விவகாரத்தில் விசாரணை வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது
0 கருத்துகள்:
Post a Comment