Search This Blog n

02 November 2019

சிறுவன் சுர்ஜித்தின் நினைவாக அபாயநிலையை உணர்த்தும் கல்வெட்டு

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் நினைவாக கல்வெட்டொன்று அமைக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் அரசம்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்பப் பாடசாலையின் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணறு 
ஒன்று மழை நீர் சேமிப்பாக மாற்றப்பட்டது.அத்துடன் அங்கு சமீபத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித்திற்கு ஒரு நினைவு அஞ்சலியும் நடத்தப்பட்டதுடன் சுர்ஜித்தின் நினைவாக கல்வெட்டொன்றும் திறக்கப்பட்டது. இதனை
 திருவண்ணாமலை 
மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திறந்து வைத்தார்.இந்தக் கல்வெட்டில், நான் சுர்ஜித் பேசுகிறேன். நான் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், எனது தாயின் கருவறையில் பிறந்து இரண்டு 
வயதில் ஆழ்துளைக் கிணற்றின்
 கறுப்பறையில் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.இறப்பு அனைவருக்கும் உண்டு என்றாலும் என்னை போல் 80 மணி நேரம், மரணத்துடன் போராடிய அந்த தருணம் மிகவும் கொடுமையானது. 
நான் இந்த உலகத்தில் வாழ
 முடியாமல் போனாலும், இனி வரும் காலங்களில் ஆழ்துளைக் கிணறுகளை திறந்து வைக்காமல் என்னைபோல் உள்ள குழந்தைகளின் உயிரை பாதுகாக்கவும். என் இறப்பு உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

Post a Comment