Search This Blog n

12 November 2019

பொலிஸ் நிலையத்திற்கு மனைவியின் தலையை வெட்டி கொண்டு வந்த கணவன்

பெண்ணின் தலையை அரிவாளால் வெட்டி கணவன் கொலை செய்த பயங்கர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.குறித்த சம்பவம் இந்தியா உத்திரப்பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளதுஇது தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது;நரேஷ் என்பவக்கு 17 வருடங்களுக்கு முன்னர் சாந்தி என்ற பெண்ணுடன் திருமணம் 
நடைபெற்றுள்ளது.
இத்தம்பதியினருக்கு 3 மகள்களும்இ ஒரு மகனும் உள்ளனர். நரேஷுக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்
 மனைவி இடையே எப்பொழுதும் தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன.நரேஷ் குடித்துக்கொண்டிருந்த போது அவருடைய
 மனைவி தடுத்து நிறுத்த 
முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நரேஷ் சாந்தியின் தலையை அரிவாளால் வெட்டியுள்ளார். தலையில்லாமல் முண்டமாக இருந்த சடலத்தை நரேஷ் வேறொரு அறையில் வைத்து பூட்டியுள்ளார். சாந்தியின் தலையை
 ஒரு டப்பாவுக்குள் மூடி வைத்துள்ளார். மறுநாள் காலையில் குழந்தைகள் தாயின்றி கத்தியுள்ளனர்.மூத்த மகள் சென்று
 எட்டிப்பார்த்தபோது, தாய் தலையில்லாமல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்றாள். உறவினர்கள் வருவதற்குள்
 சாந்தியின் தலையுடன் நரேஷ் காவல் நிலையத்தை சென்றடைந்தார்.நரேஷை
 கண்டு அதிர்ந்த பொலிஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். முதற்கட்ட விசாரணையில் சம்பவத்தின் போது மது அருந்தவில்லை என தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் 
மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





0 கருத்துகள்:

Post a Comment