Search This Blog n

13 October 2012

யாழில் ஒரு தொகை சங்குகளுடன் இந்திய பிரஜைகள் உட்பட ஐவர் கைது

 
 சனிக்கிழமை, 13 ஒக்ரோபர் 2012, By.Rajah.
யாழ்ப்பாணம், புங்குடுதீவு பிரதேசத்தில் ஒரு தொகை சங்குகளுடன் இந்தியப் பிரஜைகள் இருவர் உட்பட ஐவர் கைது புங்குடிதீவு கடற்படையினரால் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஊர்காவற்துறை, குறிகட்டுவான் பிரதேசத்திற்கு அண்மையில் லொறி ஒன்றினுள் சங்குகளை ஏற்றிக் கொண்டிருந்த போதே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 1096 சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட சங்குகளும், கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் மேலதிக விசாரணைகளுக்காக குறிகட்டுவான் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மூவரும் நாகதீபத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துகள்:

Post a Comment