Search This Blog n

14 October 2012

பொது மக்களின் தாக்குதலை


Sunday, 14 October 2012, By.Rajah.சமாளிக்க முடியாமல் பின்வாங்கியது இராணுவம்!- கிளிநொச்சியில் தப்பியது காணிகள்
கிளிநொச்சியில் மலையாளபுரம் மற்றும் கிருஷ்ணபுரம் பகுதிகளில் பொது மக்களின் 105 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை ஈடுபட்ட இராணுவத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது
பொது மக்களின் விவசாயக் காணிகளை அபகரித்து பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொள்ளவிருந்த நிலையிலேயே காணி சுவீகரிக்க வந்த படையினருக்கு பொது மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
பொது மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பைத் தொடர்ந்து வேறுவழியின்றி காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையை இராணுவத்தினர் கைவிட்டுள்ளனர்.
விவசாய நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கையை கைவிட்ட இராணுவத்தினர் விவசாய நிலங்களுக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியை தமக்கு வழங்குமாறு கோரியுள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளில் பொது மக்களது காணிகளை அபகரித்து இராணுவம் பாரிய பண்ணைகளை அமைப்பதற்கான நடவடிக்கைககளில் ஈடுபட்டு வருகின்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

Post a Comment