Search This Blog n

17 July 2014

தங்கம் மீட்பு ரூ.17 இலட்சம் பெறுமதியான !!

சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு செல்வதற்கு வருகைதந்திருந்த நீர்கொழும்பு மற்றும் பண்டாரகமை ஆகிய பகுதிகளைச்சேர்ந்த இரண்டு பயணிகளிடமிருந்த 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தை கைப்பற்றியுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவ்விருவரிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட தங்கம், அரசுடைமையாக்கப்பட்டுள்ளது என்றும் அவ்விருவருக்கும் 35 இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீர்கொழும்பைச்சேர்ந்த பயணி, தன்னுடை மேற்சண்டையில் மறைத்துவைத்தும் பண்டாரகமவைச்சேர்ந்த பயணி மூன்று தங்க தகடுகளை காபன் கடதாசிகளில் சுற்றி தன்னுடைய பயணப்பையில் மறைத்து வைத்து கடத்துவதற்கு முயற்சித்த போதே அவை மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

Post a Comment