Search This Blog n

20 November 2015

வெள்ளத்தால் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

சென்னை எங்கும் மழைநீர் தேங்கியுள்ளதால் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் பற்றி பார்க்கலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தினால் குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் புகுந்து 
விடுகின்றன.
சென்னையில் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
வீடுகளுக்குள் பாம்பு புகுந்து விட்டால் உடனடியாக 044- 22200335 என்ற ஹெல்ப்லைன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மீட்பு படையினர் உங்களை காக்க எந்நேரமும் தயார் நிலையில் இருக்கின்றனர்.
வீட்டுக்குள் பாம்பு புகுந்தால் அதனை அடித்துக் கொல்வதை தவிர்க்க வேண்டும்.
பாம்பு புகுந்துள்ள அறையை விட்டு உடனடியாக குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் ஆகியோரை வெளியேற்ற வேண்டும்.
அதன் பின்னர் அந்த அறையை தாழிட்டுக் கொள்ளவது முதற்கட்ட பாதுகாப்பு.
மழையில் சிக்கிய வாகனங்களின் சக்கரங்களில் பாம்புகள் சுற்றிக்கொண்டிருக்கலாம்.
எனவே, அப்படியான தருணங்களில் வாகனத்தை நன்கு சோதனை செய்த பிறகே ஓட்ட வேண்டும்.
ஹெல்மெட்டின் உள்பகுதியில் தேள் போன்றவை அண்டுவதற்கு வாய்ப்பு உள்ளது.எனவே ஹெல்மெட்டை உறையிட்டு மூடி வைக்க 
வேண்டும்.
அணியும்போதும் பூச்சிகள், தேள் போன்றவை இருக்கிறதா என சோதித்து அணியவேண்டும்.
பாம்பு கடித்தால் முதலில் சம்பந்தப்பட்ட நபரை எழுந்து நடக்கவோ, ஓடவோ விடாமல் அப்படியே படுக்க வைக்க வேண்டும்.
ஏனெனில் ரத்த ஓட்டம் அதிகரித்தால் ரத்தத்தில் விஷம் ஏறிவிடும்.
பாம்பு கடித்த இடத்தில் 15 செ.மீ. அளவுக்கு மேல் நன்றாக
 ஒரு விரல் 
இடைவெளிகொடுத்து ஒரு கர்சீப் அல்லது துணி வைத்து கட்டிவிடவும்.
பாம்பு கடித்த காலை நகர்த்தவே கூடாது; அதனை ஒரு கட்டையோடு சேர்த்து கட்டி விடவும்.
பாம்பு கடித்த இடத்தை நன்றாக ஐஸ் கட்டிகள் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.
ஏனெனில் ஐஸ் கட்டிகள் ஒத்தடம் கொடுக்கும்போது அல்லது ஐஸ் கட்டிகளை கடித்த இடத்தின் மேல் வைக்கும்போது, அந்த இடத்தில் ரத்தம் உறையும் என்பதால், விஷம் ரத்தத்தில் கலப்பது 
தடுக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment