Search This Blog n

22 November 2015

இலங்கை கடற்படையினர் மீண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!

தமிழக மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
இன்று காலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது கற்கள் மற்றும் போத்தல்களை கொண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதன்போது முத்து என்பவர் காயமடைந்துள்ளார். எனினும் ஏனையவர்கள் காயமின்றி தப்பியுள்ளனர்.
இதன்பின்னர் தமிழக மீனவர்கள் கரைக்கு திரும்பி ராமநாதபுரம் வைத்தியசாலையில் சிசிச்சைப்பெற்றனர்.
இதில் முத்து என்பவரின் நெற்றியில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை கடற்படையினரால் பல படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் வலைகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தமிழக மீன்வளத்துறை பணிப்பாளர் கோபிநாத் 
தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் 3முக்கிய வழின் நிழல்படங்கள் இணைப்பு >>>

0 கருத்துகள்:

Post a Comment