Search This Blog n

26 May 2016

கொடூரமான வெயில் கொடுமைக்கு 317 பேர் பலி!!!

ஐதராபாத்:தெலுங்கானா மாநிலத்தை புரட்டி எடுக்கும் கொடூரமான வெயிலில் சிக்கி, இதுவரை, 317 பேர் உயிரிழந்துள்ளனர்.
வட மாநிலங்களில், இந்த ஆண்டு கடுமையான கோடை நிலவி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், முக்கிய நகரங்களில், 50 டிகிரி 'செல்சியஸ்' வெப்பம் நிலவி வருகிறது. 
இதுபோலவே
, தென் மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. 'ரோனு' புயல் கடந்து சென்ற பின், அங்கு, வெப்ப காற்று வீசி வருகிறது. அடிலாபாத், மெகபூப் நகர், கரீம்நகர் உள்ளிட்ட பகுதிகளில், 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி 
வருகிறது.
இந்த கோடைகாலத்தில், கடுமையான வெயிலின் வெப்பக்காற்றில் சிக்கி, இதுவரை, 317 பேர் உயிரிழந்துள்ளனர். நல்கொண்டா மாவட்டத்தில் அதிகபட்சமாக, 91 பேர், வெயிலுக்கு பலியாகி விட்டனர். '
அடுத்த இரண்டு 
நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவுவதுடன், கடுமையான அனல் காற்று வீசும். மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

         
                                                 


                                                                   

0 கருத்துகள்:

Post a Comment