Search This Blog n

09 May 2016

மூன்று பெண்கள் மண் தோண்டியபோது சுரங்கம் சரிந்து பலி!

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டம் தாவ்லா பாலியா கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்கள், நேற்று ஊருக்கு வெளியே உள்ள காலியிடத்தில் தோண்டி வீடு கட்டுவதற்கு தேவையான மண் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது மண் சுரங்கம் திடீரென சரிந்து மூன்று பெண்கள் மீதும் விழுந்து 
அமுக்கியது. இதில் அவர்கள் மூவரும் மூச்சுத்திணறி சிறிது நேரத்தில் இறந்து விட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மண்ணை அப்புறப்படுத்தி ரீனா பாய், அவரது மகள் ரேஷ்மா மற்றும் ஹாத்ரி பாய் ஆகிய மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment