Search This Blog n

11 May 2016

தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்கு சிறப்புப் பேருந்துகள்?

தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்கு வசதியாக சிறப்புப் பேருந்துகள் 
இயக்கப்பட உள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் நாளுக்கு முந்தைய இரு நாட்களும் வார இறுதி நாட்களாக உள்ளதால் வெளி ஊர்களில் பணிபுரிபவர்கள் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என 
எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைதூரம் செல்லக்கூடிய விரைவுப் பேருந்துகளில் 13, 14 ஆகிய தேதிகளில் முன்பதிவு முடிவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஒரு நாளைக்கு கூடுதலாக 100 தொலைதூர விரைவுப்பேருந்துகளும், மற்ற கோட்டங்களிலிருந்து தேவைக்கேற்ற வகையில் 300 முதல் 400 சிறப்புப் பேருந்துகள் சென்னைக்கும் மற்ற ஊர்களுக்கும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகளின் வருகையை முன்னிட்டே இப்பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லையென்றும் அதிகாரிகள் 
கூறியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

Post a Comment