Search This Blog n

14 March 2014

சூப்பர் மார்க்கெட்டில் வெடிகுண்டு: தமிழ் இயக்கத்தைச் !

மதுரை சூப்பர் மார்க்கெட் அருகே பைப் வெடிகுண்டு எடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்த விவரம்:மதுரை உத்தங்குடி அருகே தனியார் சூப்பர் மார்க்கெட் அருகே கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி பைப் வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது. இது குறித்து மதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர்.

இதேபோன்றதொரு வெடிகுண்டு, இச்சம்பவத்துக்கு சில நாள்களுக்கு முன்பு, புதுச்சேரி மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டின் அருகே கைப்பற்றப்பட்டது. இதனால் இரு இடங்களிலும் ஒரே குழுவைச் சேர்ந்த நபர்களே, பைப் வெடிகுண்டுகளை வைத்திருக்கலாம் என போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டது.
இதனால் இந்த வழக்குகள் குறித்து கியூ பிரிவு போலீஸாரும் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில், தமிழ்த் தீவிரவாத அமைப்பினருக்குத் தொடர்பிருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு போலீஸார் மேலூர் சாலையில சிவகங்கை மாவட்டம் பூவாச்சிபட்டியைச் சேர்ந்த திருச்செல்வத்தைப் பிடித்தனர்.
அவர் தந்த தகவலின்படி, மேலூரில் பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் தங்கியிருந்த சாக்கோட்டை தங்கராஜ் என்ற தமிழரசன், ஆண்டக்குடியைச் சேர்ந்த கவியரசு என்ற ராஜா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 மீட்டர் வயர் மற்றும் 2 லேப்டாப்கள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் அனைவரும் தமிழ் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளியான சிவகங்கையைச் சேர்ந்த தமிழ் தேசமக்கள் கட்சியைச் சேர்ந்த காளைலிங்கம் என்பவரை போலீஸார் தேடி வந்தனர்.
இதற்கிடையே க்யூ பிரிவு போலீஸாருக்கு, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு விடுதியில் காளைலிங்கம் தங்கியிருப்பதாக வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீஸார் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த காளைலிங்கத்தை போலீஸார் கைது செய்தனர்.

மேலும் அவருடன் ஒரு இளைஞரையும் போலீஸார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் மதுரை மற்றும் மத்திய அமைச்சர் நாராயணசாமி வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்ததில் காளைலிங்கத்துக்கு முக்கியப் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக க்யூ பிரிவு போலீஸார் தெரிவித்தனர். இதில் மதுரையில் கைது செய்யப்பட்ட திருச்செல்வத்தின் சகோதரர்தான் காளைலிங்கம் எனவும் போலீஸார் கூறினர்.

0 கருத்துகள்:

Post a Comment