Search This Blog n

03 March 2014

பேஸ்புக்கில் கற்பை சூறையாடிய இரட்டை சகோதரர்கள்

 கோவையில் கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்த இரட்டை சகோதரர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மாஸ் கம்யூனிகேஷன் படித்து வரும் மாணவி ஒருவருக்கு பேஸ்புக் மூலம் இரட்டை சகோதரர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த சகோதரர்கள் பி.இ. படித்து வருகிறார்கள். அவர்களது குடும்பம் உகாண்டாவில் வசித்து வருகிறது.
இந்நிலையில் அவர்கள் மாணவியை தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளனர். மாணவியும் அவர்களின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது சகோதரர்கள் மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனையடுத்து சகோதரர்கள் மீது மாணவி கடந்த வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் சகோதரர்களை கைது செய்தனர்.
விசாரணையில் மாணவி மயக்கத்தில் இருந்தபோது அவரை கைப்பேசியில் வீடியோ எடுத்ததாக சகோதரர்களில் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார். பொலிசார் அந்த இருவரின் கைப்பேசிகள் மற்றும் மடிக்கணனிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

0 கருத்துகள்:

Post a Comment