Search This Blog n

26 March 2014

தற்போதைய ஈழத்தமிழரின் நிலை குறித்து தமிழக மாணவர்கள்,

தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ள வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழக அரசியல் தலைவர்கள், மாணவர் பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள்  உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது.
உலகத்தமிழர் பேரவை தலைவர் பழ நெடுமாறன் , நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் , தமிழ்நாடு மாணவ பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள்  உள்ளிட்டோரை நேற்றையதினம் சந்தித்த  ரவிகரன் ஈழத்தமிழரின் தற்போதைய சூழ்நிலை குறித்து விரிவாக கலந்துரையாடியதாக தெரியவருகிறது.
நேற்றைய சந்திப்புக்கள் இருதரப்பிலும் பயனுள்ள வகையில் அமைந்த நிலையில் இன்றும், நாளையும் ரவிகரனின் சந்திப்புக்கள் மேலும் பலருடன் தொடர்வதாக  அறியமுடிகிறது.

0 கருத்துகள்:

Post a Comment