Search This Blog n

25 February 2016

ஆன்மீக நற்பண்பின் மஹா சிவராத்திரி- 2016 :

சிவராத்திரி முந்தைய காலத்தில், இந்தியா தனியொரு நாடாக இருக்கவில்லை. இங்கிருந்த மக்கள் ஒரேயொரு மதத்தையோ, இனத்தையோ அல்லது மொழியையோ மட்டும் கொண்டவர்களாக இருந்திருக்கவில்லை.
இருப்பினும் அந்தந்த மாநிலம் முழுவதும் வாழ்ந்த மனிதர்கள் தங்களுக்குள் கொண்டிருந்த, பொதுவான 
ஆன்மீக நற்பண்பின்
காரணமாக, ஒரு நல்லிணக்கம் நிலவியது. இங்கே வாழ்ந்த
ஒவ்வொருவருக்கும் அவர் பாமரனாயிருந்தாலும் சரி, பார்வேந்தனாக இருந்தாலும் சரி,அவர்கள் வாழ்வின் உச்சபட்ச இலக்கு “முக்தி”
என்பதாகவே இருந்தது. இந்நிலை, இந்த தேசத்தில் நிகழ்ந்துள்ள ஈடிணையற்ற, பிரமிக்கத்தக்க ஆன்மீகப்பணியின் விளைவாகவே உருவானது.திருவாசகம் :
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் 
அச்சோவே.
மஹாசிவராத்திரியைவிட சிறந்த ஒரு இரவு வெறெதுவும்
இல்லை. இந்த இரவில் கோள்களின் அமைப்பு, மனித உடலில் இயற்கையாகவே சக்தி மேலெழும்பும் வகையில் உள்ளது. ஒருவரின் சக்தியை அதன் உட்சபட்ச நிலைக்கு உயர்த்தி,தன்னை கறைத்து, பிரபஞ்சத்தோடு ஒன்றாவது இந்த இரவில் அபரிதமாக
 நிகழ்ந்துள்ளது.
இரவு முழுவதும் பசி துறந்து ,விழிப்போடு இருந்து, முதுகுத் தண்டை நேரே வைத்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோம். இந்த மஹாசிவராத்திரி வெறும் விழித்திருக்கும் இரவாக இல்லாமல் விழிப்புணர்வுக்கான 
இரவாக இருக்கட்டும் 



0 கருத்துகள்:

Post a Comment