Search This Blog n

03 February 2016

பெற்றோர்களே உஷாராக இருங்கள் செல்போனால் சிறுவன்பார்வையை இழந்துள்ளான் !!!

தனுஷ் என்ற சிறுவன் செல்போனை சார்ஜ் செய்து கொண்டே பேசியதால் அது வெடித்து பார்வையை இழந்துள்ளான். மதுரானந்தத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி எட்டியப்பன் என்பவரது 9 வயது மகன் தனுஷ்.
இவன் செல்போனை சார்ஜ் செய்து கொண்டே போன் பேசியுள்ளான். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் செல்போன் வெடித்ததில் கண் பார்வையை இழந்துள்ளான்.
கண்ணில் விழுந்த செல்போனின் உதிரி பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் தற்போது இடது கண்ணில் மட்டும் லேசாக பார்வை தெரிகிறது என்றும் வலது கண்ணில் முழுமையாக பார்வையை இழந்துள்ளான் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சின்னஞ்சிறு குழந்தைகளிடம் கூட செல்போன் உள்ளது. இக் காட்சியை அவதானித்தாவது தங்களது குழந்தைகளிடம் செல்போனை கொடுக்கும் பழக்கத்தை விட்டுவிடலாமே
 பெற்றோர்களே!.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment