Search This Blog n

09 February 2016

இலங்கை ராமேஸ்வரம் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை !

இந்தியாவில் 111 உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்குவதே எனது இலக்கு. முதற்கட்டமாக, கங்கை, பிரம்மபுத்திரா உட்பட 5 முக்கிய நதிகளில் நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது.
ஆறுகள் வழியாக வங்காளதேசம் மற்றும் மியான்மர் வரை வணிகம் செய்ய நீர்வழிப்போக்குவரத்து உருவாக்கப்படும்.
இன்னும் 6 மாதங்களுக்குள் பராக்காவில் இருந்து பாட்னா வரை 620 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்கும் பணி 
முடிக்கப்படும்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் எலக்ட்ரிக் பைக்குகள், எலக்ட்ரிக் பஸ் மற்றும் கார்கள் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் பெரிய அளவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும்.
செயற்கைகோள்களில் பயன்படுத்துவதை போன்ற லித்தியம்-ஐயோன் பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்.
5 ஆண்டுகளில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கங்கையை சுத்தப்படுத்தி கனவை நிறைவேற்றும்.
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டு போக்குவரத்தை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நிதின்கட்கரி பேசினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

Post a Comment