Search This Blog n

11 November 2012

புலம் பெயர் தமிழர்கள் - திமுகவிற்கு மாதாந்தம் 1 மில்லியன்


ByRajah...தமிழீழத்திற்காக குரல் கொடுப்பதற்காக தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழக கட்சி மில்லியன் கணக்கான டொலர் பணத்தைப் பெற்றுக் கொள்வதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புலி ஆதரவு புலம் பெயர் தமிழர்கள் திமுகவிற்கு இந்தப் பணத்தை வழங்கி வருகின்றனர்.
மாதாந்தம் சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பணம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கப்படுகின்றது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், பொருளாளருமான மு.க.ஸ்டாலினுக்கு இந்தப் பணம் வழங்கப்படுகின்றது.
டெசோ மாநாடு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் டெசோ தீர்மானங்களை சமர்ப்பித்தமை உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளுக்கு இந்தப் பணமே பயன்படுத்திக் கொள்ளப்பட்டது என சிங்களப் பத்திரிகை தெரிவித்துள்ளது

0 கருத்துகள்:

Post a Comment