Search This Blog n

06 November 2012

ராஜபக்ச தலையீடு இல்லாமல் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட

By.Rajah..லண்டனில் நடைபெறவுள்ள தமிழர் மாநாட்டில் இலங்கை மீது விசாரணை நடத்த வலியுறுத்தப்படும் எனத் தெரிவித்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ராஜபக்ச தலையீடு இல்லாமல் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாநாட்டில் வலியுறுத்தப்படும் எனவும் கூறினார்.
லண்டனில் நாளை நடைபெறும் தமிழர் மாநாட்டில் பங்கேற்க செல்லும் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
லண்டனில் சர்வதேச தமிழர் மாநாடு நாளை தொடங்குகிறது.
மூன்று நாள் நடக்கும் இந்த மாநாட்டில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர் பாலு, டி.ராஜா, தா.பாண்டியன், திருமாளவளவன், மற்றும் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தமிழர் மாநாட்டில் பங்கேற்க சென்னையிலிருந்து திருமாவளவன் லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் மாநாட்டில் இலங்கை மீது விசாரணை நடத்த வலியுறுத்தப்படும் எனக் கூறினார்.
அதுமட்டுமின்றி ராஜபக்ச தலையீடு இல்லாமல் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாநாட்டில் வலியுறுத்தப்படும் எனவும் திருமாவளவன் கூறினார்

0 கருத்துகள்:

Post a Comment