Search This Blog n

06 November 2012

நீதியரசருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டோம் ?

By.Rajah..பிரதம நீதியரசருக்கு சிராணி பண்டாரநாயவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளையோ அல்லது கருத்துக்களையோ எடுக்கப் போவதில்லை என நீதியரசர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் ஆராய்வதற்காக நீதியரசர்கள் சங்கம் நேற்று கூடிய போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டதாக சங்கம் அறிவித்துள்ளது.
பிரதம நீதியரசர் சிராணி பண்டார நாயக்காவிற்கு எதிராக தற்போது அரசாங்கம் குற்றப் பிரேரணை முன்வைத்துள்ளது.
அதன்படி 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றம் சுமத்தி கையெழுத்திட்டுள்ளனர்.
இதற்கு அமைச்சர் பவித்திரா வன்னியாராய்ச்சி தலைமை தாங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சர்வதேசமே நீதித்துறைக்கே இந்த நிலை இலங்கையில் என்றால் எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்க்கையினை நடாத்த முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்

0 கருத்துகள்:

Post a Comment